Sunday, September 25, 2011

அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்?


டாலர் மதிப்பு சரிவதைக் காரணம் காட்டி மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன பெட்ரோலிய நிறுவனங்கள். 98 உலக நாடுகளில் இந்தியாவில் தான் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப் படுகிறது என இந்தியா உலக அரங்கில் மார்தட்டிக் கொள்ளலாம். வல்லரசான அமெரிக்காவில் பெட்ரோலின் விலை இந்தியாவை விடக் குறைவாம்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து விட்டது என காரணம் கூறி வந்த எண்ணெய் நிறுவனங்கள், தற்போது புதிதாக டாலர் மதிப்பு சரிந்து விட்ட காரணத்தையும் கண்டுபிடித்து பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தும் மொத்த பெட்ரோலின் அளவில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப் படுகிறது. இந்தியாவில் எடுக்கப் படும் கச்சா எண்ணெய்க்குச் சர்வதேசச் சந்தையோ அல்லது டாலர் சரிவோ வரப் போவதில்லை.

எனினும் இது குறித்த உண்மை நிலையை மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் பொது மக்களுக்குத்  தெரிவிப்பதில்லை. காரணம் இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் கச்சா எண்ணெயின் லாபத்தை ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருவதுதான்.

அண்மையில் கூட கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீட்டுச் செலவைப் பலமடங்கு உயர்த்திக் காட்டி பல்லாயிரம் கோடி ரூபாய்களை பெட்ரோலிய அமைச்சகத்துக்குப் பட்டை நாமம் சாத்தியுள்ளது என தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக கணக்கு காட்டி கொள்ளையடித்த ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முறைகேடான கணக்கு எழுத சொல்லிக் கொடுக்கவா வேண்டும்!.

குஜராத்தில் முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுனர் நியமித்து விட்டார் என்று மக்களவையை நடத்த விடாமல் ருத்ர தாண்டவம் ஆடிய பாஜக, ரிலையன்ஸ் குறித்த தலைமைத் தணிக்கையாளரின் அறிக்கைக் குறித்து வாய் திறக்கவில்லை.

சாதாரண அடித்தட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கக் கூடிய டீசல் மற்றும் பெட்ரோலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டிய மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆளாளுக்குத் தங்கள் பங்குக்கு வரிகளைப் போட்டு ரூ 30 க்கு விற்க  வேண்டிய பெட்ரோலை ரூ 70 க்கு விற்று வருகின்றன. தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை விட பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்படும் வரி அதிகம்.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆடம்பர ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரி விதிப்பே கிடையாது. ஆனால் அத்தியாவசிய பெட்ரோல் மற்றும் டீசல் மீது வரி விதிக்காத எந்த மாநிலமாவது இந்தியாவில் உண்டா? 2004 ம் ஆண்டு ரூ 35 க்கு விற்ற பெட்ரோலின் இன்றைய விற்பனை விலை ரூ 71. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த 7 வருடங்களில் பெட்ரோலின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
எத்தனை அடித்தாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா என்ற நிலையில் இருக்கும் மக்கள் விழித்துக் கொள்ளாதவரை இவ்வாறு அநியாய அரசியல் செய்பவர்களை மாற்ற முடியாது. ஏதோ சில அமைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதோடு நில்லாமல் இத்தகைய அநியாயங்களை எதிர்த்து மக்கள் ஒன்று திரள வேண்டும். ஊழலை எதிர்த்து மெழுகுவர்த்தி ஏந்துவதோடு எனது கடமை முடிந்து விட்டது எனக் கருதாமல் இத்தகைய மோசடித்தனங்களைப் பாமர மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பணியை ஒவ்வொருவரும் செய்ய முன்வரவேண்டும்.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல்,டீசல் விலை குறித்து வாயே திறக்காத நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரிக்கும்போதும் கண்டுகொள்ளப்போவதில்லை. சாதாரண மக்களின் தினசரி வாழ்வைப் பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு அடிப்படையாக இருக்கும் எரிபொருளின் விலையினைக் கட்டுக்குள் கொண்டுவர தனியாரின் கையில் கொடுக்கப்பட்ட விலை நிர்ணயிப்பு அதிகாரத்தை அரசே திரும்ப எடுத்துக்கொள்ளும்வரை, மாதத்துக்கு மும்மாரி கொள்ளையடிக்கும் நிறுவனங்களின் இந்த அராஜகம் நிற்கப்போவதில்லை!
 
அத்தியாவசியம் - ஆடம்பரம், இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் வரிவிதிப்புக் கொள்கையை அமல்படுத்திக் கொண்டு இருக்கும் ஆட்சியாளர்களும், லஞ்சத்தைக் கட்சிகளுக்கு நன்கொடையாகவும், அரசியல்வாதிகளின்  குடும்பத்தினர்களுக்குப் பங்குகளாகவும் தரும் தனியார் நிறுவனங்கள் கொளுத்து வளர அப்பாவி பொது ஜனங்களைச் சுரண்டும் ஆட்சியாளர்களும் இருக்கும் வரை இந்தியா ஒரு போதும் முன்னேற்றங் காணப் போவதில்லை என்பதை உரக்கவே சொல்லுவோம்.

IIT-MADRAS***Vacancies

Invites applications from the PD candidates for the following post:
Pay Band Rs. 5200-20200 + GP 2000
Number of Posts: 10
Age:
Upper Age limit is 37 years (5 years age relaxation is admissible for SC/ST and 3 years for OBC as per Central Government Rules.)
Qualification & Experience :
Upper Age limit is 37 years (5 years age relaxation is admissible for SC/ST and 3 years for OBC as per Central Government Rules.)
Bachelor’s Degree with 2 years relevant experience in government office/University/Technological institutions or an organization of repute. Knowledge of computer applications and secretarial practices.
Application form can be downloaded from the website www.iitm.ac.in from the link "Recruitment" under Notices or obtained from the Registrar, IIT Madras, Chennai – 600 036 by sending a requisition letter along with self addressed stamped Rs.10/- envelope. The cover must be subscribed
"Requisition for application for the post of Junior Assistant".
Last date for receipt of application is 15.11.2011.

Junior Assistant

Saturday, September 24, 2011

சென்னையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்ப்பு-216 பயணிகள் தப்பினர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை மிகப் பயங்கரமான விபத்து மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. ரன்வேயில் ஒரு விமானம் நின்று கொண்டிருந்தபோது இன்னொரு விமானத்தை தரையிறங்க அனுமதி கொடுத்ததால் இந்த விபரீதம் நேர இருந்தது. ஆனால் விமானியின் துரித செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சென்னையிலிருந்து இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று டெல்லிக்குப் புறப்பட்டது. ரன்வேயில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே விமானம் ரன்வேயிலேயே நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தில் 132 பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் இறங்க அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த விமானம், ஜெட் ஏர்வேஸ் விமானம் நின்றிருந்த ரன்வேயில் தரையிறங்க எத்தனித்தது. அப்போது ரன்வேயில் ஒரு விமானம் நின்று கொண்டிரு்பபதைப் பார்த்த ஏர் இந்தியா விமானி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் விமானத்தை தரையிறக்காமல் அப்படியே மேலே ஏற்றி விட்டார். ஏர் இந்தியா விமானம் மட்டும் தரையிறங்கியிருந்தால் மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இரு விமானங்களிலும் சேர்த்து மொத்தம் 216 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். அத்தனை பேரும் ஏர் இந்தியா விமானியின் சாதுரியத்தால் உயிர் தப்பினர்.

பின்னர் சிறிது நேரம் ஏர் இந்தியா விமானம் வானில் வட்டமிட்டபடி இருந்தது. பின்னர் ஜெட் ஏர்வேஸ் விமானம் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது. அது பத்திரமாக தரையிறங்கிய பின்னரே விமான நிலையத்தில் அத்தனை பேருக்கும் போன உயிர் திரும்பி வந்தது.

இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

விசாரணைக்கு உத்தரவு

இரு விமானங்கள் மோதவிருந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு விமான நிலைய ஆணையக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

'தனியே தனந்தனியே'...உள்ளாட்சித் தேர்தலில் '8 பிளஸ்' முனைப் போட்டி!

சென்னை: தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், முதன்முறையாக அனைத்து முக்கியக் கட்சிகளும் தனித் தனியே தேர்தலை சந்திக்கவுள்ளன. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.

திமுகவும் அதிமுகவுக்கும் மாறி மாறி காங்கிரஸ் கட்சியுடனும் பாமகவுடனும் கூட்டணி வைப்பது வாடிக்கை. காங்கிரசுக்கு வாடிக்கையே இன்னொரு கட்சியின் மீது ஏறி சவாரி செய்வது தான். பாமகவின் வாடிக்கை தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவது.

நடிகர் விஜய்காந்தின் தேமுதிக மக்களுடன் தான் கூட்டணி என்று உலக நியாயம் எல்லாம் பேசிவிட்டு கடைசியில் அதிமுகவுடன் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்தது.

மதிமுகவைப் பொறுத்தவரை அந்தக் கட்சியை தேர்தலுக்குத் தேர்தல் இடப் பங்கீட்டில் ஏமாற்றுவதையே ஒரு வேலையாக வைத்துள்ளன திமுகவும் அதிமுகவும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை எப்போது யாருடன் எதற்காக கூட்டணி சேருவார்கள், எதற்காக விலகுவார்கள் என்பது அவர்களுக்கே சரியாகத் தெரியாது.

சின்னச் சின்னக் கட்சிகளைப் பொறுத்தவரை யார் அதிக சீட் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி சேர்வார்கள். பாஜகவைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் அவர்களை கூட்டணியில் சேர்க்க திமுக, அதிமுக இடையே போட்டா போட்டி நிலவியது. ஆனால், இப்போது அந்தக் கட்சியை எவ்வளவு தூரத்தில் வைத்திருப்பது என்பது கடும் போட்டி நிலவுகிறது.

இது தான் தமிழகத்தில் இதுவரை நடந்து வந்த கதை.

ஆனால், 'உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக' என்பது மாதிரி இந்த முறை காங்கிரசை நடுத் தெருவில் விட்டுவிட்டது திமுக. வழக்கமாக திமுகவால் கைவிடப்படுவோர் அதிமுகவால் கைதூக்கி விடப்படுவதும், அதிமுகவால் கைவிடப்பட்டோர் திமுகவிடம் சரணடைவதும் வழக்கம்.

இந்த முறை அது நடக்கவில்லை. காங்கிரசுக்கு உதவ யாரும் இல்லை. சரி, தேமுதிகவின் முதுகில் ஏறியாவது கங்காரு பயணம் போகலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த சில முயற்சிகளும் படுதோல்வி அடைந்துவிட்டன. இவர்களுக்காக தேர்தல் வேலை பார்த்துவிட்டு, அவர்களிடம் திமுகவும் அதிமுகவும் பட்ட அவமானங்களை மனதில் கொண்டு, காங்கிரஸை உடன் சேர்க்க மறுத்துவிட்டார் விஜய்காந்த்.

ஆக திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இந்தத் தேர்தலில் தனித் தனியே களம் காண்கின்றன. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை இன்னும் அதிமுகவுடன் இடப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். இது அடுத்த மாதம் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கா அல்லது 2014 மக்களவைத் தேர்தலுக்கா என்பது தெரியவில்லை. அவ்வளவு சாவகாசமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சில மாவட்ட நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள் அதிமுகவிடம் பணிந்து போவதை கண்டு சகிக்காமல், தங்கள் மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அப்படி ஏதும் இதுவரை சலசலப்புகள் இல்லை. அதிமுக தருவதை தா.பாண்டியன் வாங்கிக் கொள்வார் போலிருக்கிறது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால், இந்திய கம்யூனிஸ்டும் கடுமையான நிலையை எடுக்க வேண்டி வரலாம். கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் எடுப்பாரா என்பது தெரியவில்லை.

தேமுதிகவையும் அதிமுகவையும் சட்டமன்றத் தேர்தலில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய அதிபுத்திசாலி பத்திரிக்கையாளர் இந்த முறையும் கூட்டணியைக் காக்க முயன்றதாகவும், ஆனால், அவரது யோசனையை அதிமுக தரப்பு நிராகரித்துவிட்டதாகவும் தெரிகிறது.

இதனால் அதிமுகவை விட அந்த அதிபுத்திசாலி மீது தான் அதிக கடுப்பில் இருக்கிறார் விஜய்காந்த் என்கிறார்கள்.

அதிமுகவை முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைலிலேயே கையாண்டும் காட்டிவிட்டார் விஜய்காந்த். அதாவது, தங்களுடன் இடப் பங்கீடு பேச்சு நடத்த தேமுதிக போயஸ் தோட்டத்தில் வந்து வரிசையில் நிற்க வேண்டும் என்று அதிமுக நினைக்க, தேவைப்பட்டால் நீங்கள் தான் எங்களை அழைக்க வேண்டும் என்றரீதியில் பேச்சுவார்த்தைக்கே வரவில்லை தேமுதிக.

இது அதிமுகவுக்கு தேமுதிக தந்த முதல் ஷாக். இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான முக்கிய பதவிகளுக்கெல்லாம் வரிசையாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டால், விஜய்காந்த் ஓடி வருவார் என்று நினைத்து ஜெயலலிதா பட்டியலை வெளியிட்டுக் கொண்டே போக, அது குறித்து ஒரு கருத்து கூட தெரிவிக்காமல் அமைத்து காத்து அடுத்த 'நோஸ்-கட்' தந்தார் விஜய்காந்த்.

இந் நிலையில் தேமுதிகவின் அமைதி அதிமுகவுக்கு கோபத்தைத் தர, அடுத்தடுத்த பட்டியல்களையும் அதிமுக வெளியிட, தடாலடியாக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார் விஜய்காந்த்.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என்றோ, தனித்துப் போட்டியிடுகிறோம் என்றோ ஒரு அறிக்கை விட விடவில்லை விஜய்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒன்னுமே நடக்காதது போல தடாலடியாக நடந்து கொள்வது வழக்கமாக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைல். ஆனால், அதே பாணியில் செயல்பட்டு அந்தக் கட்சிக்கே ஷாக் தந்துள்ளார் விஜய்காந்த்.

இப்படியாக இடதுசாரிகள் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் 7 முனைப் போட்டி உருவாகியுள்ளது. இந்த முக்கியக் கட்சிகள் தவிர்த்து புதிய தமிழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை, பாஜக ஆகியவையும் உள்ளன. இதில் பாஜகவும் கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்துள்ளன. இதையும் கணக்கில் சேர்த்தால் '8 பிளஸ்' முனைப் போட்டி உருவாகியுள்ளது எனலாம்.

இடதுசாரிகளும் தனியே வந்தால் '9 பிளஸ்' முனைப் போட்டி உருவாகும்.

இதன்மூலம் தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின், கூட்டணி இல்லாத ஒரு தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.
http://www.thatstamil.com/

Friday, September 23, 2011

நார்ச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு!

நார்ச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு!



சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம்முடைய காரமான சமையலுக்கு ஒத்துப் போகாதது. அதை அதிகம் உணவில் சேர்க்காமல் இருந்தால் நஷ்டம் அதுக்கில்லை. நமக்குத்தான். ஏனெனில் அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் சமைக்கும் போதும் இனிப்பு இன்னும் அதிகமாகிறது. கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக்கிழங்குக்கும் சம்பந்தமில்லை. இது சுற்றிப்படரும் கொடி வகையான மார்னிங் குளோரி வகையைச் சார்ந்தது. சர்க்கரை வள்ளியின் இலைகள் மார்னிங் குளோரி வகையின் இலையைப் போன்றிருக்கும்.
 சரித்திரம்: இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக்கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர். கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயினுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. ஸ்பானியர்களுக்கு இது மிகவும் பிடித்துப் போகவே பயிரிட ஆரம்பித்தனர். அங்கிருந்து கிழக்கே போன மாலுமிகள் இதை ஆசியாவுக்குக் கொண்டு சென்றனர். அமெரிக்கப் புரட்சியின்போது சிப்பாய்களுக்கு முக்கிய உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு தரப்பட்டது. எட்டாம் ஹென்றி காலத்தில் இங்கிலாந்தில் இது பிரபலமாகியது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை பயிரிட சூடான, ஈரப்பதமான சீதோஷ்ண நிலை தேவைப்படுவதால் ஐரோப்பாவில் அவ்வளவு பிரபலமாகவில்லை. இந்தியா, சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் அதிகமாக விளைகிறது. இப்போது ஜப்பானிலும் பரவலாக விளைவிக்கப்படுகிறது. தெற்கு ஜப்பான் தீவுகளில் காரா கிமோ என்றும், வட ஜப்பானில் ஸாட்ஜூமா-இமோ (ஜப்பானிய உருளைக்கிழங்கு) என்றும் அழைக்கிறார்கள்.
வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.
 1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோலுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள்சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.
 2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும் நீர் அளவு குறைவு. உள்ளே பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அமெரிக்காவில் இதைத் தவறாக (சேனைக்கிழங்கு) என்கின்றனர். உண்மையில் சேனைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெனில் விட்டமின் ‘ஏ’ இதில் அதிகம்.
 இதைத் தவிர ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் (தேங்க்ஸ் கிவ்விங்க்) பண்டிகையின் போது இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீஸனாகும். நம்மூர்களில் பொங்கல் (ஜனவரி) மாதம் சீஸன்.
 தேர்ந்தெடுப்பது: கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.
 பாதுகாத்தல்: சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.
 உணவுச்சத்து: அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமைப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக்கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிடக் கூடியது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.
 ஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டின் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மில்லிகிராம், பொட்டாசியம் 265.2 மில்லி கிராம், கால்சியம் 28.6 மில்லி கிராம், விட்டமின் சி 29.51 மில்லி கிராம், விட்டமின் ஏ-26081 IU.
 சமையல் வகைகள்:
 சாலட், ஜூஸ், சூப்: சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் ‘ஏ’ சத்தும் நேரடியாக கிடைக்கும். ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம். ஆரஞ்சு வண்ணக் கிழங்கைத் துருவி சேர்த்தால் சாலட், சூப் சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சமைக்க அதிக எண்ணெய் தேவைப்படாது. வதக்கினாலும் எண்ணெய் குறைந்த அளவே இழுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் வாசனையை அதிகமாக்க துண்டு போட்டு கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் சேர்த்து குறைந்த தீயில் சமைத்தால் ருசியும், பளபளப்பும் வரும்.
 பாயசம்: இதற்கு சர்க்கரை குறைவாக பயன்படுத்தினாலே போதும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின்பு அதை நன்றாக மசிக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி, அதில் மசித்த கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலப்பொடி, குங்குமப்பூ, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும்.

சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்!

சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்!

active office
நம்முடைய பணியிடங்களில் சரியாக வேலை செய்ய முடியாமல் இருப்பதற்கு இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமை , உடற்பயிற்சிகளை தவிர்ப்பது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம், அதிக கோபம், போன்ற பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.

இங்கே நீங்கள் ஒரு பணியிடத்தில் சுறுசுறுப்பாக இருக்கவும் , உங்கள் உடல் நலத்தை பேணவும் உதவும் சில குறிப்புகள் கொடுக்க முயற்சிக்கிறோம்.
நல்ல தூக்கம்: இரவில் நல்ல தூக்கம் இல்லாவிட்டால் மறு நாள் உங்கள் வேளைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.ஒரு நாளைக்கு குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும். இரவில் சீக்கிரமே உறங்கி அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வது நாள் முழுவதும் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும்.
ஆரோக்கியமான காலை உணவு: உங்களுடைய நாளை சிறப்பாக அமைக்க நல்ல ஆரோக்கியமான காலை உணவு அவசியம். ஆற்றல் அளவை அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானிய உணவுகள் (ஓட்ஸ் கஞ்சி அல்லது ரொட்டி ), புரத சத்துக்கள் நிறைந்த முட்டை, குறைந்த கொழுப்பு சத்துக்கள் அடங்கிய தயிர், மற்றும் வைட்டமின் சி நிறைந்த (ஆரஞ்சு அல்லது சிட்ரஸ் பழங்கள்) போன்றவைகளை உட்கொள்ளுங்கள். காலை உணவை தவிர்ப்பது பிற்காலத்தில் மிகப்பெரிய உடல் நோய்களுக்கு உள்ளாக்கும் என்பதை கவனத்தில் கொள்க.
நடக்க வேண்டும்: உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் வேலை செய்வதால் முதுகு வலி, சோம்பல் போன்றவை ஏற்படும். அதோடு உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படாது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அலுவலகத்தில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நடப்பது சிறந்தது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைந்து உடலுக்கு புத்துணர்வு ஏற்படும்.
தண்ணீர் குடிக்க வேண்டும்: நீண்ட நேரம் வேலை செய்வதால் உடலில் அதிக அளவு நீர் சத்து செலவாகிறது. அதை பூர்த்தி செய்ய தேவையான அளவு உடலுக்கு நீர் செலுத்துவது அவசியம். குடிநீர் உங்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும். விரும்பினால் தண்ணீருடன் சத்துள்ள பழ சாறுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.
சூரிய ஒளி: சூரிய ஒளி உங்கள் உடலின் வெப்ப நிலையை இயற்கையாக சீராக்க உதவுகிறது. இதனால் மதிய வேளைகளில் சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பது சிறந்தது.
மதிய உணவு: அதிக கொழுப்பு அடங்கிய உணவு பொருட்கள் மதிய வேளையில் தூக்கம் வர காரணமாக அமையும். ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் மிக்க கோதுமை, ரொட்டி, சாலட் போன்ற உணவுகளை உட்கொள்வது சிறந்தது.
உரையாடல்: எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்காமல் நண்பர்களிடம் சிறுது நேரம் உரையாட வேண்டும். இதனால் உடலுக்கு தெம்பு ஏற்படும்.
மேலே கூறப்பட்ட அனைத்தையும் ஒரு நாள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் நாள் அற்புதமாக, அமைதியாக அமைய இந்த வழிகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

கீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு....

கொழுப்பை குறைப்பதிலும், செரிமானத்தை கூட்டுவதிலும் கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது ?

கீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு என்பதனை நம்மால் உணர முடிகிறது. கீரை வகைகளில்எந்த சத்துக்களையும் இல்லையென்றால் அது மிகையாகாது. அத்தகைய கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உண்டாகும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!
* கீரைகளை உண்பதன் மூலம் உடல் பருமன் கட்டுக்கோப்பாக இருக்கிறது. புற்றுநோய், இதய நோய், போன்ற கடுமையான நோய்கள் வருவதனை தடுக்கிறது. கொழுப்பை குறைப்பதிலும், செரிமானத்தை கூட்டுவதிலும் கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது.

* சர்க்கரை நோயாளிகள் கீரைகளை உண்பதனால்  அவர்களின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. சரியான விகிதத்தில் கீரைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வைட்டமின் 'கே' யின் அளவு உடலில் அதிகரிக்கறது. இதனால் நடுத்தர வயதில் இருக்கும் பெண்களுக்கு உண்டாகும் இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். மேலும் எலும்பு உறுதிப்பெறுகிறது.

* இரும்புச்சத்தின் அளவும், கால்சியத்தின் அளவும் கீரைகளில் அதிகமாக இருப்பதால் எல்லா வகையான சத்துக்களையும் கீரைகளிலிருந்து நாம் பெறலாம்.


இத்தகைய கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்வை பெறுவோம்!!



சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க
கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.
கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றhக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.
கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.
காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.
கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றேhர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.
கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.

Tuesday, September 20, 2011

மாமனிதர் முஹம்மது நபி (ஸல்)

நூல்: புஹாரி 2097, அத்தியாயம்: வியாபாரம், பாடம்: வாகனங்களை வாங்குதல்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) கூறுகிறார்கள்:

   நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். எனது ஒட்டகம் சண்டித்தனம் செய்து (மற்றவர்களை விட) என்னைப் பின் தள்ளியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து ‘ஜாபிரா’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘(பின் தங்கி வருவதற்கு) என்ன காரணம்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னைப் பின் தள்ளி விட்டது. அதனால் பின் தங்கி விட்டேன் என்று நான் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள் (தம் ஒட்டகத்திலிருந்து) இறங்கினார்கள். தமது வளைந்த குச்சியால் என் ஒட்டகத்தைக் குத்தி விட்டு ‘ஏறுவீராக’ என்றனர். நான் ஏறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்களை விட முந்தி விடாதவாறு அதை இழுத்துப் பிடிக்க ஆரம்பித்தேன்.
‘மணமுடித்து விட்டீரா?’ என்று கேட்டனர். நான் ‘ஆம்’ என்றேன். ‘கன்னியா? விதவையா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். விதவையைத்தான் என்று நான் கூறினேன். ‘கன்னியை மணந்திருக்கக் கூடாதா? நீர் அவளுடனும் அவள் உம்முடனும் இன்பமாக இருக்கலாமே’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர். அவர்களைப் பராமரித்துத் தலைவாரி, நிர்வகிக்கும் ஒரு பெண்ணை மணக்க விரும்பினேன் எனக் கூறினேன். ‘நீர் இப்போது ஊர் திரும்பப் போகிறீர்! ஊர் சென்றால் ஒரே இன்பம் தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘உமது ஒட்டகத்தை எனக்கு விற்கிறீரா?’ என்று கேட்டார்கள். நான் சரி எனக் கூறியதும் என்னிடமிருந்து ஒரு ஊகியா (தங்க நாணயத்தில் சிறிதள)வுக்கு விலைக்கு வாங்கிக் கொண்டனர். பின்னர் எனக்கு முன் அவர்கள் சென்று விட்டனர். 
நான் காலை நேரத்தில் (மதீனாவை) அடைந்தேன். நாங்கள் பள்ளிக்கு வந்ததும் பள்ளியில் வாசலில் நின்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் ‘இப்போது தான் வருகிறீரா’ என்று கேட்டனர். ஆம் என்றேன். ‘உமது ஒட்டகத்தை விட்டுவிட்டுப் பள்ளிக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் உள்ளே சென்று தொழுதேன். எனக்குறிய ஊகியாவை எடைபோட்டுத் தருமாறு பிலாலிடம் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிலால் எனக்கு எடை போட்டுத் தந்ததுடன் சற்று அதிகமாக தந்தார். நான் திரும்பிய போது ‘ஜாபிரைக் கூப்பிடுங்கள்’ என்றனர். அதற்குள் என் ஒட்டகத்தைத் திருப்பித் தரப் போகிறார்களோ! என்று நினைத்தேன். அவ்வாறு அவர்கள் திருப்பித் தந்தால் அதைவிட எனக்குப் பிடிக்காதது வேறெதுவும் இராது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘உமது ஒட்டகத்தைப் பிடித்துக் கொள்வீராக! இதன் விலையும் உமக்குரியதே என்றார்கள்’.
விளக்கம்:
நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்று ஆட்சித் தலைவரான பின் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. ‘போரிலிருந்து திரும்பி வரும்போது’ என்ற வாசகத்திலிருந்து இதை நாம் விளங்க முடியும்.
போர் செய்து விட்டு நபித்தோழர்கள் திரும்பி வரும்போது அனைவரையும் விடக் கடைசியாக ஜாபிர் வருகிறார். அவருக்கும் பின்னால் நபி (ஸல்) அவர்கள் வருகின்றனர். அதனால் கடைசியாகப் பின் தங்கி வந்த ஜாபிரை அவர்களால் சந்திக்க முடிந்தது.
உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மன்னர்கள் – போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் – களத்திலிருந்து எப்படித் திரும்பினார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். யானை மேல் ஆரோகணித்து, படைவீரர்கள் பராக் கூற, வழியெங்கும் அட்டகாசங்கள் செய்து ஆணவத்துடனும் திமிருடனும் செருக்குடனும் திரும்பியதை அறிந்திருக்கிறோம்.
ஆட்சித்தலைவரான நபி (ஸல்) அவர்கள் – படை நடத்திச் சென்று வெற்றி வீரராகத் திரும்பிய நபி (ஸல்) அவர்கள் – அனைவரையும் அனுப்பி விட்டுத் தன்னந்தனியாக அனைவரையும் கண்காணித்துக் கொண்டு கடைசியாக வருகிறார்கள்.
ஆட்சித்தலைவர் என்ற மமதையில்லை! போரில் வென்று விட்டோம் என்ற செருக்கு இல்லை! மதத்தலைவர் என்ற ஆணவம் இல்லை! எதிரிகள் பின்தொடர்ந்து வந்து தாக்கி விடுவார்களோ என்ற அச்சம் இல்லை!
கருப்புப் பூனைகளின் பாதுகாப்புடன் – சிறுநீர் கழிக்கக்கூட பாதுகாவலர்கள் துணையுடன் – உலாவரும் வீரர்களையும் வீராங்கணைகளையும் பார்த்துப் பழகியவர்கள் இந்த அற்புத வரலாற்றை அறிந்து கொள்ளட்டும்.
உலகவரலாற்றில் இப்படி ஒரே ஒரு தலைவர், இவர் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்று கூறத்தக்க அளவில் அந்த மாமனிதரின் அற்புத வாழ்க்கை அமைந்திருந்தது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் ஆயிரக்கணக்கான தோழர்களைப் பெற்றார்கள். உலகில் ஆயிரக்கணக்கான தொண்டர்களைப் பெற்றவர்கள் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு அறிந்திருப்பார்கள். சாதாரணமானவர்களை அறிந்திருக்க மாட்டார்கள். அறிந்திருந்தாலும் அதைக் காட்டி கொள்வது தம் நபித்தோழரைப் பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு அறிந்து வைத்திருந்ததால் – அவருடனும் நெருக்கமாகப் பழகியதால் ஜாபிரா? என்று கேட்கிறார்கள். இந்த ஜாபிர் நபி (ஸல்) அவர்களின் சமவயதினரோ, நீண்ட காலம் அவர்களுடன் பழகியவரோ அல்லர். உமக்குத் திருமணமாகி விட்டதா என்று அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதிலிருந்து திருமணம் செய்யக்கூடிய இளவயதுப் பருவத்தில் அவர் இருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஐம்பது வயதுக்கு மேல். ஐம்பது வயதைக் கடந்த நபி (ஸல்) அவர்கள் சுமார் இருபது வயதுடையவரைப் பெயர் சொல்லி அழைத்தது மக்களுடன் அவர்கள் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தனர் என்பதற்குச் சான்று.
மந்திரிகள்கூட சந்திக்க முடியாத தலைவர்களைப் பார்த்துப் பழகிய மக்கள் இந்த அற்புத வரலாற்றை அறிந்து கொள்ளட்டும்!
பதவியும் அந்தஸ்தும் வந்த பின், நன்கு பழகியவர்களையே யாரெனக் கேட்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் கண்டும் காணாதது போல் நடக்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம்.
தம்மைவிட வயதில் குறைந்த நெடுநாள் பழக்கமில்லாத ஒரு தொண்டரைக் கண்டு அக்கறையுடன் அவரை விசாரித்து, அவருக்காகத் தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி, சண்டித்தனம் செய்த அவரது ஒட்டகத்தை எழுப்பி, அவரை ஒட்டகத்தில் ஏற்றிவிட்டு .. இப்படி ஒரு தலைவரை உலகம் இன்றுவரை கண்டதில்லை, இனியும் காணப்போவதில்லை.
உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா? கன்னியை மணந்தீரா? விதவையையா? இளைஞரான நீர் கன்னிப் பெண்ணை மணந்திருக்கலாமே என்றெல்லாம் அக்கறையுடன் நபி (ஸல்) அவர்கள் விசாரித்ததையும் ஊர் சென்றால் ஜாலிதான் என்று அவர்கள் கூறியதையும் சிந்தித்தால் நபி (ஸல்) அவர்கள் தமக்கென எந்த ஒரு தனிப்பட்ட மதிப்பையும் விரும்பவில்லை, ஆட்சியாளர் என்ற முறையிலும் தனிமரியாதையைத் தேடவில்லை, மதத்தலைவர் என்ற முறையிலும் தனி மதிப்பை நாடவில்லை என்பதை ஐயமற அறிந்து கொள்ளலாம்.
சண்டித்தனம் செய்த ஒட்டகத்தை விலை பேசி வாங்கியதும் வாங்கிய பின் விற்றவரை அதில் ஏறிவர அனுமதித்ததும் முடிவில் அவரிடமே ஒட்டகத்தை இலவசமாக வழங்கியதும் அவர்களின் வள்ளல் தன்மைக்குச் சான்று.
இறைவனின் தூதராக மட்டுமே தம்மை அவர்கள் கருதியதால் – தாம் உட்பட அனைவரும் இறைவனின் அடிமைகள் தாம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததால் – எந்த அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு அவர்கள் போதித்தார்களோ அந்த இறைவனை அதிகமதிகம் அஞ்சிய காரணத்தால் தான் அவர்களால் இப்படி நடந்து கொள்ள முடிந்தது.
அந்த மாமனிதரின் அதிசய வாழ்க்கையை இன்னும் பார்ப்போம்

Friday, September 16, 2011

சிறுபான்மையினர் நல நிதி பெற சிறப்புக் குழு அமைப்பு- மமக தலைவருக்கு அமைச்சர் பதில்

சிறுபான்மையினர் நல நிதி பெற சிறப்புக் குழு அமைப்பு- மமக தலைவருக்கு அமைச்சர் பதில்

"சிறுபான்மையினர் நலனுக்கான மத்திய அரசின் நிதியை பெற சிறப்புக் குழு அமைக்கப்படும்" என்று அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டசபையில் தெரிவித்தார்.

நிதி ஒதுக்க மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் நிகழ்த்திய உரையின் போது இந்த தகவல் வெளியானது.

இது தொடர்பான விவரம் வருமாறு:
ஜவாஹிருல்லாஹ் : சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்காக மத்திய அரசு ஐந்தாண்டு திட்டத்தின் பெயரால் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மதரசாக்களில் தரமான கல்வியைத் தரும் திட்டம், சிறுபான்மையினரின் கல்விக் கூடங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டம் ஆகியவற்றுக்கான நிதியைத்தான் மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இவற்றைப் பெறுவதற்காக தமிழகத்திலிருந்து சிறுபான்மையினர் நடத்தும் 12 நிறுவனங்கள் முறைப்படி விண்ணப்பித்திருந்தன. இவற்றை முறையாக மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டியது கடமை.

ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் இத்தகைய பரிந்துரை ஏதும் செய்யாத காரணத்தால் மத்திய அரசின் இந்த நிதி தமிழகத்திற்குக் கிடைக்காமலேயே போய்விட்டது. எனவே முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு பரிந்துரை செய்வதற்கான குழுவை அமைத்து மத்திய அரசிடமிருந்து அந்த நிதியைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அமைச்சர் சி.வி.சண்முகம் :
திமுக ஆட்சிக்காலத்தில் இத்தகைய குழு ஒன்று அமைத்தார்கள். ஆனால் அந்த குழு செயல்படவேயில்லை. தற்போது புதிய குழுவை அமைப்பதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜவாஹிருல்லா :
நன்றி! தனித் தேர்வாளர்கள் 14 வயதுக்கு மேல் 8ம் வகுப்பு தேர்வை எழுத திமுக ஆட்சிக் காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமான தேர்வுகளை வெளிப்படையாக நடத்த வேண்டும். தேர்வு முடிந்ததும் தேர்வு வினாத் தாட்களுக்கான சரியான விடையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். விடைத்தாள்களை மாணவர்கள் கட்டணம் கட்டிக் கேட்டால் வழங்குவதற்கு வகை செய்ய வேண்டும்.

உறுப்பினர்களுக்கு சட்டமன்ற அறிவிப்புகள் மின்னஞ்சல் மூலம் வருவது மகிழ்ச்சிக்குரியது. அதே போன்று உறுப்பினர்களின் உரைத் தொகுப்பையும் மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பி வைத்தால் அதிலேயே நாங்கள் திருத்தி அனுப்பிவிட முடியும். இவ்வாறு ஜவாஹிருல்லாஹ் பேசினார்.

Thursday, September 15, 2011

கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!


இந்த நாடும், அரசும், நீதிமன்றங்களும் இந்துத்வாவின் கையிலிருப்பதால் கொலைகார மோடிகளை சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் கைவிரிப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனில் இந்த கொலைகாரர்களை யார் தண்டிப்பது?



2002 குஜராத் கலவரத்தில் இந்துமதவெறியர்களால் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அகமதாபாத் நீதிமன்றம் குஜராத் இனப்படுகொலை வழக்கை ஒழுங்காக விசாரிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்துமதவெறியர்களின் இனப்படுகொலையை, இந்துமதவெறியர்கள் ஆளும் மாநிலத்தில் விசாரித்தால் கொலைகாரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது சிறு குழுந்தைக்கும் தெரியும்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆ.கே.ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக்குழுவும் இந்துமதவெறியர்களை குறிவைத்து விசாரிக்கமால் ஏதோ விசாரணை செய்து, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.
இந்நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய ஜகியா, சிறப்புப் புலனாய்வுக் குழுவும் சரிவர விசாரணை செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மோடியின் அதிகாரமும், மாநிலமே இந்துமதவெறியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழுவும் சோடை போவதில் தவறவில்லை.
இதையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையை ஆய்வு செய்து ரகசிய அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. நீதிமன்றத்தின் அமிகஸ் குரியாக (நீதிமன்ற நண்பர்) செயல்பட்ட அவர், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதுவும் சொதப்பலாகத்தான் இருக்குமென்பதை இப்போது ஊகிக்க முடிகிறது.
குஜராத் கலவரத்தை ஒடுக்க முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மட்டுமல்ல இனப்படுகொலைக்கும் அவர்கள்தான் தலைமை தாங்கியிருந்தார்கள். இதனால் அவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜகியா கோரியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை, அமிகஸ் குரியின் அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்த நீதிபதிகள், குஜராத் கலவர வழக்கில் முதல்வர் மோடி மற்றும் 63 அதிகாரிகளை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டனர்.
இதுகுறித்து ஆமதாபாத் விசாரணை நீதிமன்றமே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்றும், இந்த வழக்கை இனிமேலும் தொடர்ந்து கண்காணிக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் கூறி, உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
மேலும், இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையை ஆமதாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு என்ன காரணமென்று அவர்கள் தெரிவிக்கவில்லை.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறது என்று நாடு முழுவதுமே பரவலான எதிர்பார்ப்பு இருந்தது.
பா.ஜ.க தலைவர்கள் இந்தத் தீர்ப்பை மனமுருக வரவேற்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர். மோடி தனது ட்விட்டில் GOD IS GREAT என்று தெரிவிக்க அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி முதலான பா.ஜ.க தலைவர்கள் தாங்கள் ஏற்கனவே மோடி ஒரு நிரபராதி என்பதை பல முறை சொல்லி வருவதாகவும் இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
கணவனை இந்துமதவெறியர்களுக்கு பலிகொடுத்து அதற்காக வழக்கு தொடுத்த ஜகியாவோ இந்த தீர்ப்பு தனக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாகவும், தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார். இனி என்ன சட்டப் போராட்டம் நடத்த முடியும்?
கவனியுங்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மோடி குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த முடிவை விசாரித்து எடுக்குமாறு அகமதாபாத் நீதிமன்றத்திடம்தான் கேட்டிருக்கிறது. இதற்கே ஏதோ வழக்கிலிருந்து விடுதலை செய்தது போல பா.ஜ.க தலைவர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள் என்றால் காரணம் என்ன?
அகமதாபாத் நீதிமன்றம் குஜராத்தில் இருப்பதால், தீர்ப்பை நாமே எழுதிவிடலாம் என்ற திமிரன்றி வேறு என்ன?
டெல்லி குண்டுவெடிப்பில் 12 பேர் இறந்த உடன் எத்தனை எத்தனை கவனிப்புக்கள், விசாரிப்புகள், உளவுத்துறை அமைப்புகள், அமைச்சர்கள், ஐ.எஸ்.சதி, குற்றவாளிகளின் படங்கள் என்று எத்தனை வேகம்? ஆனால் 2000த்திற்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த குஜராத் கலவரம் குறித்து தெகல்காவின் நேரடி வீடியோ ஆதாரம் வந்த பிறகும் குற்றவாளிகளை இன்னும் நெருங்க முடியவில்லை என்றால்?
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியாது என்று கைவிரித்து விட்ட நிலையில் கொலைகார மோடியும் அவரது கொலைகார கூட்டத்தையும் இனி யாருமே தண்டிக்கவோ, சட்டத்தின்படி குற்றவாளி என்று நிரூபிக்கவோ முடியாது. உறவினர்களை இழந்த குஜராத் முசுலீம் மக்கள் இனி என்ன செய்வார்கள்? அவர்களில் சில இளைஞர்கள் இந்து மதவெறியர்களை சட்டப்படி தண்டிக்க முடியாது என்று விரக்தியடைந்தால் என்ன நடக்கும்?
இந்த நாடும், அரசும், நீதிமன்றங்களும் இந்துத்வாவின் கையிலிருப்பதால் கொலைகார மோடிகளை சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் கைவிரிப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனில் இந்த கொலைகாரர்களை யார் தண்டிப்பது?
(செய்தி தினமணியிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது)
____________________________________________________
--

Wednesday, September 14, 2011

தமிழக எம்.எல்.ஏக்களுக்கு தொகுதிப் படி உயர்வு- இனி சம்பளம் ரூ. 55,000!

சென்னை: தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கான தொகுதிப் படி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏக்களுக்கான சம்பளம் இனி மாதம் ரூ. 55,000 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்ததாவது:

சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதிப் படி தற்போது உள்ள ரூ. 5000 என்பதிலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படுகிறது.

அதேபோல சபாநாயகர் மற்றும் அமைச்சர்களின் படியும் ரூ. 5000 என்பதிலிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்படுகிறது.

இதேபோல முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கான ஓய்வூதியம் ரூ. 10,000 என்பதிலிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தப்படுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ. 6000 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த படி உயர்வு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த உயர்வைத் தொடர்ந்து, இதையடுத்து எம்.எல்.ஏக்களின் மாதச் சம்பளம் இனி ரூ. 50,000 என்பதிலிருந்து ரூ. 55,000 ஆக உயரும். அதேபோல சபாநாயகர் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் ரூ. 27,000 என்பதிலிருந்து ரூ. 32,000 ஆக உயரும் என்றார்.

Tuesday, September 13, 2011

மலேகான் குண்டுவெடிப்பில் கைதான 9 முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள்

மலேகான் குண்டுவெடிப்பில் கைதான 9 முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் கூறியுள்ளது.  காவி சிந்தனை உடையவர்களின் தவறுகளால், இழந்த 6 வருடங்கள் திரும்ப வருமா?. ஆதாரமில்லாமல், கைது செய்தவர்களுக்கு என்ன தண்டனை? உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்களா?
 

Nine Muslim men in jail for Malegaon blasts are innocent, concludes NIA: Sources

NDTV Correspondent, Updated: September 13, 2011 08:26 IST
 
 
Mumbai: NDTV has learnt that the National Investigation Agency (NIA) has finally concluded that the nine Muslim men who were arrested and jailed in 2006 in connection with the Malegaon blasts are innocent.

Five years ago, these men were accused of carrying out the twin blasts as part of a plot by the outlawed Students Islamic Movement of India (SIMI). But sources have told NDTV that the investigation agency will now not oppose their bail pleas when they come up in court. Thirty one people were killed and 312 were injured in the 2006 blasts.

NDTV has also found that in a U-turn from its previous stand, the Central Bureau of Investigation (CBI) has submitted an internal report to the NIA saying only the right-wing Hindutva group activists arrested last year should be probed for the blast. In 2009, the CBI toed the Maharashtra ATS line and chargesheeted the nine Muslim men. The agency retracted in 2010, when Swami Aseemanand confessed that the blasts were the handiwork of a Hindutva group.
 
As a result of this error in the terror probe, these nine innocent men had to spend five years in prison. The Hindutva group, on the other hand, has not even been named in this case.
The revelation is significant as this is the first time an investigation agency has internally confirmed that the initial Malegaon arrests were wrong and is going to act to set the error right and prepare grounds to discharge them.

Monday, September 12, 2011

லோக்பால் ஊழலை ஒழிக்குமா?

நம் நாட்டில் லஞ்சம் ஊழல் எல்லாம் ஒழியாமல் இருப்பதற்கு ஒரே காரணம் இன்னும் லோக்பால் வராமல் இருப்பதுதான் என்பது போன்ற ஓர் அசட்டு நம்பிக்கை மத்தியதரவர்க்க மக்கள் மனதில் இப்போது பலமாக ஏற்பட்டுவருகிறது. அண்ணா ஹசாரேவை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்று இரு தரப்பிலும் இருக்கும் பெருவாரியானவர்களுக்கு லோக்பால் பற்றிய விவரங்களே தெரியாமலும் இருக்கின்றன. ‘ஏதோ ஊழல் ஒழிஞ்சா சரி’ என்ற மனநிலையில் ஒருசாரார். ’பத்து பேர் உண்ணாவிரதம் இருந்து அரசாங்கத்தை மிரட்டினா எது சொன்னாலும் செஞ்சிருவீங்களா?’ என்று இன்னொரு பக்கம் கேள்விகள்.


லஞ்சம் ஊழலை ஒழிக்க பலமான லோக்பால் சட்டம் தேவை என்ற வாதத்தின் அடிப்படை இப்போதுள்ள சட்டங்கள் போதவில்லை என்பதா? அல்லது அவை நடைமுறைப்படுத்தபடவில்லை என்பதா? இரண்டும்தான்.

பொது ஊழியர் ( பப்ளிக் சர்வண்ட்) என்ப்படும் எவரையும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்து வழக்கு தொடுக்க, இந்தியன் பீனல் கோட் எனப்படும் தண்டனைச் சட்டத்திலும், ஊழல் தடுப்புச் சட்டம் (1988) என்ற சட்டதிலும் வகை செய்ய்ப்பட்டிருக்கிறது. யார் பப்ளிக் சர்வண்ட் என்பதில் சர்ச்சை எப்போதும் இருந்து வருகிறது. முதலமைச்சர் பப்ளிக் சர்வண்ட் அல்ல என்று கருணாநிதி எழுபதுகளில் அவர் மீது சர்க்காரியா கமிஷன் அறிக்கை அடிப்படையில் வழக்குகள் போடப்பட்டபோது வாதாடினார். ஆனால் இந்த வாதம் ஏற்கப்படவில்லை. இப்போது ஜெயலலிதா மீது இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கு , டான்சி வழக்கு போன்ரவற்றிலெல்லாம் முதலமைச்சரும் பப்ளிக் சர்வண்ட்டே என்ற அடிப்படையே பின்பற்றப்படுகிறது. நாடாளுமன்ற எம்.பிகள் பப்ளிக் சர்வண்ட்டா எனப்து பற்றியும் சர்ச்சைகள் இருந்தன. உச்ச நீதிமன்றம் நரசிம்மராவ் அரசு கவிழாமல் காப்பாற்ற எம்.பிகளுக்கு லஞ்சம் தரப்பட்ட வழக்கில், எம்.பிகளும் பப்ளிக் சர்வண்ட்தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்கு போடுவதற்கு முன்பு அந்த அரசின் ( மாநில அல்லது மத்திய அரசின்) அனுமதி பெறவேண்டும். இதே போல எம்.பிகள், எம்.எல்.ஏக்கள் மீது ஊழல் வழக்கு தொடுப்பதற்கு முன்பு சபாநாயகரகள், அவைத் தலைவர்கள் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று சிலர் வாதாடி வருகிறார்கள். சட்டப்படி இது தேவையில்லை என்றும் சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டால், அவைத் தலைவர், சபாநாயகர்களுக்கு தகவல் தெரிவித்தால் போதும் என்றும் எதிர்க்கருத்து உள்ளது.

அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்கு தொடுக்க அரசின் அனுமதி என்பது எளிதில் கிடைப்பது அல்ல. டிசம்பர் 2010 வரையில் மொத்தம் 236 அனுமதி கோரும் மனுக்களுக்கு ஒப்புதல் தராமல் மத்திய அரசு வைத்திருக்கிறது. இதில் 66 சதவிகித மனுக்கள் மூன்று மாதங்களுக்கு மேலாகக் காத்திருப்பவை. மாநில அரசுகள் முன்பு காத்திருக்கும் மனுக்கள் எண்ணிக்கை 84.
மாநில அரசு ஊழியர்கள் லஞ்ச ஊழல்களில் ஈடுபடுகிறார்களா என்று கண்காணிக்க கண்காணிப்பு மற்றுக்ம் ஊழல் தடுப்பு துறைகள் உள்ளன. மத்திய அரசு ஊழியர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் எனப்படும் மத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளது. சுமார் நான்காண்டுகளில் ( 2005-2009) இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு சுமார் 13 ஆயிரம் புகார்களில் துறை ரீதியான தண்டனை வழங்கியிருக்கிறது. எச்சரித்துக் கண்டித்தல், சமபள உயர்வை வெட்டுவது, தற்காலிக வேலை நீக்கம், இடமாற்றம், வேலையிலிருந்தே நீக்குதல் போன்ற தண்டனைகள் இவை. இவற்றில் 846 புகார்களில் சமபந்தப்பட்ட ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. டெல்லி போலீஸ் சட்டத்தின் கீழ் இயங்கிவரும் மத்திய அரசின் சி.பி.ஐ எனப்படும் செண்ட்ரல் பீரோ ஆஃப் இன்வெஸ்ட்டிகேஷனும் லஞ்ச ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகளைத் தொடுக்கிறது.
இவை எல்லாவற்றையும் ஒரே லோக்பால் என்ற அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதுதான் லோக்பால் மசோதாவின் நோக்கம். அப்படிக் கொண்டு வரும்போது எந்த ஊழல் புகாரையும் விசாரிக்க அந்தந்த அரசின் முன் அனுமதி பெறத் தேவையில்லை. லோக்பால் விசாரித்து முடித்ததும் இதற்கென்று நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு தண்டனை தரப்படும். பொய்ப் புகார் கொடுப்பவர்களுக்கு அபராதமோ சிறை தண்டனையோ விதிக்கப்படும்.லோக்பால் என்பது ஒரு தனி நபர் அல்ல. ஒரு தலைவரின் கீழுள்ள குழுவாக இருக்கும் . இந்த லோக்பால் குழுவை குடியரசுத் தலைவர் நியமிப்பார். யாரை நியமிப்பது என்பதை பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், நீதிபதிகள் அடங்கிய குழு முடிவு செய்யும். லோக்பால் குழுவினரை நீக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருடையது. அதை அவர் உச்ச நிதீமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் செய்வார்.

மேற்கண்ட விஷயங்களில் எல்லாம் அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதாவுக்கும் அண்ணா ஹசாரே அணியின் ஜன் லோக்பால் மசோதாவுக்கும் பெரிய வித்யாசம் இல்லை. நியமிக்கும் தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள், லோக்பால் குழு உறுப்பினர்களின் வயது வரம்பு, குற்றவாளிக்கான அபராதம், சிறை தண்டனையின் அளவு இவற்றிலெல்லாம் சின்னச் சின்ன வித்யாசங்கள் இருக்கின்றன. லோக்பால் உறுப்பினர் யாரும் 45 வயதுக்குக் கீழ் இருக்கக் கூடாது என்று அண்ணா குழு சொல்கிறது. 25 வருட அனுபவம் உடையவராக இருக்கவேண்டும் என்று அரசு சொல்கிறது.

முக்கியமான வேறுபாடுகள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிகள், அரசு சாராத நிறுவனங்கள், கீழ் மட்ட ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் தொடர்பானவை. பிரதமர், நீதிபதிகள் இருவரும் லோக்பால் விசாரணைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அண்ணா ஹசாரே அணியின் கருத்து. அரசு இதை ஏற்கவில்லை. பிரதமர் பதவியிலிருந்து விலகியபின் அவரை உட்படுத்தலாம் என்கிறது. எம்.பிகள் அவைக்குள் ஈடுபடும் செயல்கள் தொடர்பாக விசாரிக்க முடியாது என்கிறது அரசு. அவையும் உட்பட்டவையே என்கிறது அண்ணா அணி. பொது மக்களிடமிருந்தோ அரசிடமிருந்தோ பணம் பெறும் அமைப்புகளும் லோக்பாலுக்கு உட்பட்டவை என்கிறது அரசு. இதன்படி தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் பல லோக்பாலுக்கு உட்படவேண்டி வரும். அண்னா ஹசாரே அணி அவற்றை லோக்பாலுக்கு உட்படுத்தவே இல்லை. ஏன் தொண்டு நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் விலக்களிக்கப்படவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.

மத்திய அரசின் லோக்பால் மசோதா அரசு ஊழியர்கள் எல்லாரையும் லோக்பாலுக்கு உட்படுத்தவில்லை. குரூப் ஏ அதிகாரிகளும் அதற்கு மேலுள்ளவர்களும் மட்டுமே லோக்பாலின் கீழ் வருவார்கள். இதர ஊழியர்கள் விஜிலன்ஸ் கமிஷன், துறை விசாரணைகளுக்கு உட்பட்டவர்களாக்வே இருப்பார்கள். இதை அண்னா ஹசாரே அணி ஒப்புக் கொள்ளவில்லை. எல்லாரையும் லோக்பால் கீழ் கொண்டு வரச் சொல்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் சுமார் 45 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

மாநில அரசு ஊழியர்கள் பற்றி இரு லோக்பால் மசோதாகளும் நேரடியாக எதுவும் சொல்வதில்லை. மாநிலங்களில் லோகாயுக்தா ஏற்படுத்தப்படவேண்டும் என்று மத்திய அரசும் அண்ணா ஹசாரே அணியும் சொல்கிறார்கள். அந்த லோகாயுக்தாக்கள் எல்லாரும் மத்திய லோக்பாலின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பது அண்ணா அணியின் கருத்து. இதை மத்திய அரசும் ஏற்கவில்லை. மாநில அரசுகளும் எதிர்க்கின்றன. லோகாயுக்தா நியமிக்கும்படி மாநிலங்களை மத்திய அரசு வற்புறுத்த முடியாது என்பது மத்திய அரசின் கருத்து. எங்கள் ஊழியர்களை லோகாயுக்தா வழியாக லோக்பாலின் கீழ் கொண்டு செல்வது எங்கள் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பது மாநில அரசுகளின் எதிர்ப்பு.

நடைமுறையில் அண்ணா ஹசாரே அணியின் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டால், சி.பி.ஐ, சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் எல்லாமே லோக்பாலின் கீழ் இயங்கும் அமைப்புகளாகிவிடும். நாடு முழுவதும் லோக்பால் இயங்குவதற்கு சுமார் பத்தாயிரம் ஊழியர்கள் தனியே புதிதாக வேலை செய்யவேண்டி வரும். இவர்கள் ஊழல் செய்யாமல், லஞ்சம் வாங்காமல் இருக்கிறார்களா என்று கண்காணிப்பது இன்னொரு தலைவலி. அவர்கள் மீது புகார் செய்தால் அந்தப் புகார் ஒவ்வொன்றும் குடியரசுத் தலைவர் மூலம் உச்ச நீதிமன்றத்துக்குப் போய் விசாரிக்கபட்டுதான் முடிவெடுக்க வேண்டி வரும். லோகாயுக்தாக்களும் லோக்பாலின் கீழ் இருந்தால், மாநில அரசுகளுக்கும் லோக்பாலுக்கும் இடையே தொடர்ந்து உரசல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நீதிபதிகளும் லோக்பாலின் கீழ் வருவார்கள் என்று அண்ணா ஹசாரே அணி சொல்லும்போது உச்ச நீதிமன்றம் முதல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் வரை இருக்கும் எல்லா நீதிபதிகளுமா என்று தெளிவாக சொல்லவில்லை.

அண்ணா, அரசு இருவரின் மசோதாக்களை விட, அருணா ராயின் ஆலோசனைகள் ஓரளவு மேலானவை. அவர் ஒற்றை பெரிய அமைப்பை உருவாக்குவது பெரும் ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார். பொய்ப் புகாரானால் புகார் கொடுத்தவருக்கு அபராதம் தண்டனை என்பது புகார்கள் வரவிடாமல் தடுத்துவிடும். எனவே புகார் கொடுத்தவர் வேண்டுமென்றே தெரிந்தே பொய்யாக புகார் செய்தார் என்பதை நிரூபித்தால் மட்டுமே தண்டிக்க வேண்டும் என்கிறார் அருணாராய். உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்,பிகள், பிரதமர் ஆகியோருக்கு லோக்பால். இதர அரசு ஊழியர்கள் அனைவருக்கும் செண்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன். நீதித்துறைக்கென்று தனியே ஜுடீஷியல் கமிஷன் என்ற அமைப்பு, மாநிலங்களில் தனியே லோகாயுக்தா என்று நான்காகப் பிரிப்பதுதான் ந்லலது என்பது அருணாராயின் கருத்து. இது தவிர லஞ்சம் ஊழலினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அமைப்பினையும் உருவாக்கக் கோருகிறார் அருணாராய். லஞ்சம் ஊழல்களை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு வழங்கவும் தனிச்சட்டம் தேவைப்படுகிறது. இதற்கான ஒரு மசோதாவை ஏற்கனவே மத்திய அரசு நாடளுமன்றம் முன்பு கொண்டு வந்திருக்கிறது.

இது தவிர இன்னும் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்படவேண்டும். ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் போல அரசியல் சட்டப்படி சுயாட்சி உடைய லோக்பால்கமிஷனை நியமிக்க வேண்டும் என்று சொன்னது சாத்தியமா என்பது முதல் அம்சம். இதே கருத்தைத்தான் முன்னாள் தேர்தல் கமிஷன் தலைவர் டி.என்.சேஷன் தெரிவித்திருக்கிறார். அவரும் அதற்கான ஒரு மசோதா தயாரித்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் டெல்லிக்கு கொடுத்தனுப்பியதாக அறிவித்தார். அதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதுவும் பரிசீலிக்கப்படவேண்டும். தேர்தல் ஆணையம் போன்ற அமைப்பு என்பது சுவாரஸ்யமானது. ஏனென்றால் சகல அதிகாரங்களும் சுயாட்சியும் உடைய தேர்தல் ஆணையத்துக்கு என்று தனியே பெரும் ஊழியர் படை எதுவும் கிடையாது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதும் அதன் பணிக்கென்று ஒதுக்கப்படும் அரசு ஊழியர்கள், காவல்துறையினர் எல்லாரும் அதன் கட்டுப்பாட்டுக்கு உடபட்டவர்களாகிவிடுகிறார்கள். இதே போல லோக்பாலை அமைக்க முடியுமானால் நன்றாகத் தானிருக்கும். ஒரு புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதும் விசாரிப்பதற்கும் வழக்கு தொடுக்கவும் தனக்கு தேவைப்படும் ஊழியர்களை அரசிடமிருந்தே அது பெற்றுக் கொள்லலாம். அவர்கள் அதன்பின் லோக்பாலுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாகிவிடுவார்கள். இப்படி செய்ய முடிந்தால், லோக்பாலுக்கென்று தனியே இன்னொரு பெரிய அரசு இயந்திரத்தை உருவாக்கத் தேவையிருக்காது. நேர்மையான அரசு ஊழியர்கள் எலெக்‌ஷன் டியூட்டி மாதிரி லோக்பால் டியூட்டிக்கு செல்ல முடியும்.

லோக்பால் என்ற அமைப்பே தனியே தேவைதானா என்பது இன்னொரு அம்சம். அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்கு மிடில் க்ளாஸ் மக்களின் தார்மிக ஆதரவு இந்த அளவு கிடைத்ததற்கு முக்கியக் காரணம் அண்மையில் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம்ஸ் என்ற இரு பெரும் ஊழல்கள் மக்கள் மனதில் பெரும் அருவெறுப்பை ஏற்படுத்தியதுதான். அந்த இரு ஊழல்கள் தொடர்பாக இரு அமைச்சர்கள், ஒரு பெரும் கட்சித்தலைவரின் மகள், பல அரசு தனியார் உயர் அதிகாரிகள் எல்லாரும் சிறையில் இருக்கிறார்கள். எந்த ஒரு புது சட்டமும் இதைச் செய்ய தேவைப்படவே இல்லை. இருக்கும் சட்டங்களின் கீழ்தான் அவர்கள் உள்ளே போயிருக்கிறார்கள். ஒரே ஒரு வித்யாசம் இருக்கும் சட்டத்தை கறாராகப் பயன்படுத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் சில நீதிபதிகளுமே இதை சாதித்தார்கள். எனவே நமது தேவை மேலும் மேலும் சட்டங்களல்ல. இருப்பவற்றை சரியாக பயன்படுத்தும் மனிதர்கள்தான்.

அந்த அடிப்படையில் பார்த்தால் லோக்பால் தேவையில்லை. இருக்கும் சட்டங்களை இன்னும் விரிவுபடுத்தி திருத்தங்கள் செய்வதே போதுமானது. ஆனால் ஒவ்வொரு பொறுப்புக்கும் செய்யும் நியமனங்களே கவனமாக கறாராக அணுக்கப்படவேண்டும். நீதிபதி முதல் உயர் காவல் அதிகாரி வரை நியமிப்பதற்கு முன்பு பகிரங்க அலசலுக்கு உட்படுத்தப்பட்டே நியமிக்கப்படவேண்டும் அதற்கான சட்டங்களே தேவைப்படுகின்றன.

எப்படிப் பார்த்தாலும் மேலே சொன்னவை எல்லாம் ஆழமாகவும் விரிவாகவும் விவாதிக்கப்பட்டபின்தான் எதையும் செய்யவேண்டும். அண்ணா ஹசாரே அணி தாங்கள் எழுதி வைத்திருக்கும் மசோதாவை அட்சரம் பிசகாமல் அப்படியே பதினைந்தே நாட்களுக்குள் நிறைவேற்றியாக வேண்டுமென்று அடம் பிடித்தது எவ்வளவு அபத்தமானது ! கடைசியில் வென்றது அவர்களின் அடம் அல்ல. எல்லாருடைய கருத்தையும் கேட்டு விவாதித்துதான் சட்டம் போட முடியும் என்ற அரசின் நிலைதான், அரசியல் கட்சிகளின் நிலைதான் ஜெயித்திருக்கிறது. பாராளுமன்றத்தில் போட்ட தீர்மான வாசகங்களுக்குள் வெகு புத்திசாலித்தனமாக அந்த நிலைதான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள உங்களுக்கு ஒரு சாக்குதானே வேண்டும். இதோ இந்தா பிடி என்பதுதான் அந்த தீர்மானம். கொண்டாடிக் கொள்ளுங்கள். ஆனால், லோக்பாலால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது என்பதை இப்போது அண்ணா ஹசாரே அணியும் சேர்ந்து பேசவேண்டிய கட்டாயத்தை அரசு ஏற்படுத்தி விட்டது.


அசல் பிரச்சினையான லோக்பால் பற்றியும், லஞ்சம் ஊழலை ஒழிப்பது எப்படி என்பது பற்றியும் நிதானம் தவறாமல் மீடியாவில் இதுவரை ஒலித்த குரல்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று இன்ஃபோசிஸ் நிறுவன வேலையை உதறிவிட்டு இந்திய அரசின் குடிமக்களுக்கான மின்னணு அடையாள அட்டை வழங்கும் திட்டத் தலைவராகப் பணியாற்றும் நந்தனும் அவர் மனைவி ரோஹிணியும் அண்மையில் பெங்களூருவில் சூழல் கல்வி நிறுஅவனம் தொடங்குவதற்காக சொந்த பணம் 50 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தவர்கள். அருணா ராய் ஆறு வருடங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றியபின அதிலிருந்து விலகி சமூகப் பணியில் ஈடுபட்டவர். ராஜஸ்தானில் தொழிலாலர்-உழவர் சங்கமான மஸ்தூர் கிசான் சக்தி சங்காத்தனைத்தொடங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டவர்.

 தகவலறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்ற சோனியா காந்தியை சம்மதிக்கவைத்து வெற்றி பெற்றவர்.மக்களின் தகவலறியும் உரிமைக்கான தேசிய பிரச்சார அமைப்பு என்ற அமைப்பை அருணா உருவாக்கினார்.இப்போது அண்ணா ஹசாரேவின் அணியில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் இருவரும் அருணாவுடன் அந்த அமைப்பில் இன்னமும் இருக்கிறார்கள். லோக்பால் மசோதா வடிவத்தில் மட்டுமே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது. அருணா, அரவிந்த் இருவரும் மக்சசே விருது பெற்றவர்கள். நந்தன், அண்ணா ஹசாரே இருவரும் பத்மபூஷன் பெற்றவர்கள்.
நந்தன் நீலகேணி லஞ்சம் ஊழலை ஒழிக்க லோக்பால் மட்டும் போதவே போதாது. பல முனைகளில் நடவடிக்கை தேவை. அதில் ஒன்று மட்டுமே லோக்பால். அதுவும் எல்லா விதமான லஞ்ச ஊழலையும் ஒழிக்க பயன்படாது. ஊழலில் இருவகை இருக்கின்றன. ஸ்பெக்ட்ரம் போன்ற மேலத்தில் நடக்கும் பெரிய ஊழல்கள். 

கம்யூனிட்டி சர்ட்டிபிகேட்டுக்காக தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் தரவேண்டியிருப்பது போன்ற சில்லறை ஊழல்கள். முதல்வகை ஊழல்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் அன்றாடம் உரசுபவை அல்ல. ஆனால் தொலைநோக்கில் பாதிப்பவை. இரண்டாம் வகை சில்லறை ஊழல்கள் உடனடியாக அன்றாடம் பாதிப்பவை. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான தீர்வுகள் தேவை. எல்லா அரசு அலுவல்களும் வெளிப்படையாக நடக்கும்விதத்தில் டெக்னாலஜியைப் பயன்படுத்தினால் சில்லறை ஊழல்களை ஒழிக்கலாம். பெரிய ஊழல்களுக்குக் கடும் சட்டங்கள் தேவை. இதையெல்லாம் உட்கார்ந்து பேசி அலசித் தீர்மானிக்க வேண்டும். சட்டம் இயற்றும் பாராளுமன்றத்தின் நிலைக் குழுக்கள் ஒன்றும் முட்டாள்கள் நிரம்பியது அல்ல. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என்று உலகின் எந்த நாட்டுப் பாராளுமன்றக் குழுவுக்கும் நிகரான அறிவும் உழைப்பும் இங்கேயும் உள்ளது என்கிறார் நந்தன். அடையால அட்டை சட்டம் பற்றி விவாதித்தபோது இந்திய மக்களவை நிலைக் குழுவினர் எவ்வளவு ஆழமாகவும் தெளிவாகவும் பிரச்சினையை அலசுகிறார்கள் என்பதை தான் நேரில் கண்டதாக நந்தன் பாராட்டுகிறார். எல்லா அரசியல்வாதிகளும் மோசம் என்ற மிடில் க்ளாஸ் பார்வையை தொடர்ந்து ஊக்குவிப்பது ஆபத்தானது என்பது நந்தன் கருத்து.

இதே பார்வையை இன்னொரு கோணத்தில் இருந்து முன்வைக்கிறார் அருணா ராய். வெவ்வேறு மட்டத்தில் இருக்கும் வெவ்வேறு ஊழல்களை ஒழிக்க வெவ்வேறு சட்டங்கள் தேவை. பிரதமர், அமைச்சர்கள், எம்.பிகள் தனி. அரசு ஊழியர்களில் உயர் அதிகாரிகள் தனி, கீழ் மட்டம் தனி. நீதித்துறைக்கு முற்றிலும் தனியான கண்காணிப்பு அமைப்பு தேவை. இது தவிர ஊழல்களில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தர தனி அமைப்பும் சட்டமும் தேவை. இந்த நான்கையும் எப்படி செய்யலாம் என்பது பற்றி அவர் சார்ந்திருக்கும் அமைப்பு விரிவாக அறிக்கைகள் தயாரித்திருக்கிறது. மன்மோகன் அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் போதாது. அண்னா ஹசாரே குழுவினர் முன்வைக்கும் லோக்பால் இன்னொரு ராட்சத அமைப்பாக மாறிவிடும். இரண்டும் தீர்வல்ல என்பது அருணாராய் கருத்து.

நந்தன், அருணா இருவருமே அண்னா ஹசாரே குழுவினரின் பிடிவாத அணுகுமுறையைக் கடுமையாக நிராகரிக்கிறார்கள். மக்கள் கருத்தையும் ஆதரவையும் திரட்டப் போராட்டம் நடத்துவதை இருவரும் ஆதரிக்கிறார்கள். ஆனால், தாங்கள் எழுதியிருக்கும் லோக்பாலைத்தான் அரசு ஏற்று நிறைவேற்றவேண்டும், அதுவும் ஆகஸ்ட் 31க்குள் செய்யவேண்டும் என்றெல்லாம் அண்ணா ஹசாரே அணியினர் பிடிவாதம் பிடிப்பதை அருணாவும் நந்தனும் (நானும்) ஏற்கவில்லை.
அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் எட்டாவது நாளை எட்டும்வரை பிடிவாதமாக இருந்த அவரது அணியினர், மெல்ல தங்கள் பிடிவாதங்களைத் தளர்த்தி வருகிறார்கள்.நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் எதையும் செய்யமுடியாது என்பதும், தங்கள் கருத்துக்கு பல மாற்றுக் கருத்துகள் அரசிடம் மட்டுமல்ல, மற்ற பொதுமக்களிடையேவும் இருக்க முடியும் என்பதும் மெல்ல மெல்ல அவர்களுக்கு உறைத்துவருகிறது. முதலில் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்து ஒரு மாதமாகப் பிரசாரம் செய்த டைம்ஸ் நவ், என்டி.டிவி, ஹெட்லைன்ஸ் டுடே, சிஎன்என் ஐபிஎன் சேனல்கள் எல்லாம் கூட கடந்த ஒரு சில தினங்களாக மாற்றுக் கருத்துகள் இருப்பதை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கின்றன. 

சி.என்என் ஐபிஎன் ஒரு சமரசத்தீர்வையே முன்வைத்தது. அரசு தன் மசோதாவை திரும்பப் பெறவேண்டும். அண்னா அணியினரும் தங்கள் மசோதாவை மட்டுமே சட்டமாக்கவேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட வேண்டும். இன்னொரு ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். அதில் அரசு, அண்ணா அணியினர், எதிர்க்கட்சிகள், எம்.பிகள், சட்ட அறிஞர்கள், சமூகப் பிரபலங்கள் இடம் பெறவேண்டும். ஒரு மாதத்துக்குள் அந்தக் குழு விவாதித்து முடிவு செய்து தரும் சட்டமுன்வடிவை ஏற்றுக் கொண்டு பாராளுமன்றம் சிறப்புக் கூட்டம் நடத்தி தீபாவளிக்குள் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் தீர்வு யோசனை.

இதையேதான் மன்மோகன் அரசு வேறு வடிவத்தில் இத்தனை நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறது. அரசின் லோக்பால் சட்டமுன்வடிவு பாராளுமன்ற நிலைக் குழு முன்பு உள்ளது. பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை நிலைக்குழுவிடம் தெரிவிக்கலாம். அண்னா ஹசாரே குழுவின் மசோதாவையும் நிலைக்குழுவிடம் தருகிறோம். நிலைக்குழு ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு மாதம் ஆகும். அதன்பின் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றலாம். கடைசியில் இது போன்ற ஒரு சமரசத்துக்குத்தான் எல்லா தரப்பினரும் வரவேண்டியிருக்கும். (இந்த இதழ் வெளிவரும் சமயத்தில் இந்த சமரசம் நடந்திருக்கும்).
லோக்பால வந்தால் என்ன லாபம், என்ன நஷ்டம் என்பதை புரிந்துகொள்ள இதுவரை லோக்பால் பற்றி நடந்துள்ளவற்றை தெரிந்துகொள்வோம்.
லோக்பால் ஒன்றும் அண்ணா ஹசாரேவின் கண்டுபிடிப்பல்ல.

உலக அளவில் ஆங்கிலத்தில் ஆம்பட்ஸ்மேன் என்று சொல்லப்படும் இந்த அமைப்பு 140 நாடுகளில் இருக்கிறது.உயர் மட்ட ஊழல்கள் பற்றி விசாரிப்பதிலேயே பெரும்பாலும் இவை அக்கறை காட்டுகின்றன. இந்தியாவில் லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதைப் பற்றி நேரு காலத்திலேயே பேசியிருக்கிறார்கள். முதன்முதலில் 1968ல் மக்களவையில் சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டது. (அண்ணாவின் வலது கையான அரவிந்த் கெஜ்ரவால் பிறந்த வருடம் அது !) மசோதா நிறைவேறும் முன்பே அவையின் ஆயுள் முடிந்துவிட்டது. அதன்பின்னர் ஏழு முறை மக்களவையில் லோக்பால் மசோதாவை அரசு கொண்டு வந்திருக்கிறது.ஒவ்வொரு முறையும் அவையின் ஆயுள் முடிந்துவிட்டதால் நிறைவேறவில்லை. 1985ல் மசோதா திரும்பப் பெறப்பட்டது. கடைசியாகக் கொண்டு வந்தது 2001ல். ஒவ்வொரு முறையும் மசோதாவை விவாதிக்க நிலைக்குழுவுக்கு அனுப்பியிருக்கிறார்கல். நிலைக்குழுக்களும் விவாதித்து கருத்து சொல்லியிருக்கின்றன.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஒரு லோக்பால் போதாது. எனவே மாநிலத்துக்கு மாநிலம் ஒரு லோகாயுக்தா தேவை என்று சொல்லப்பட்டது. இதையடுத்து 18 மாநிலங்கள் லோகாயுக்தா சட்டத்தை நிறைவேற்றி லோகாயுக்தாவை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் இல்லை. குஜராத்தில் உண்டு. ஆனால், அங்கே ஏழரை வருடமாக லோகாயுக்தா பதவிக்கு யாரையும் நியமிக்காமல் காலியாக இருக்கிறது. கர்நாடகத்தில் லோகாயுக்தாவாக இருப்பவர் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. இவர்தான் அண்மையில் பி.ஜே.பி முதலமைச்சர் எடியூரப்பா மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தவர். எடியூரப்பா பதவி போயிற்று. ஆனால் வழக்கு எதுவும் போடப்படவில்லை. சந்ச்தோஷ் ஹெக்டே அண்ணா ஹசாரேவின் அணியில் இருப்பவர். அண்னாவின் லோக்பால் மசோதாவை எழுதியதில் முக்கிய பங்காற்றியவர்.

லோக்பால் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அண்னா ஹசாரே கேட்பதற்கெல்லாம் முன்பாகவே சோனியா காந்தியின் காங்கிரஸ் 2004லேயே சொல்லிவிட்டது. அது அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அதன்படி இந்த வருடம் ஜனவரியில், ஊழலுக்கெதிரான நடவடிககிகலை வகுப்பதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர் குழுவை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். அந்தக் குழுவை லோக்பால் மசோதாவை உருவாக்கும்படி சொன்னார்.
அதன்பிறகுதான் அண்ணா ஹசாரே அணியினர் திடீரென்று களத்தில் குதித்தார்கள். மசோதாவை உருவாக்கும் குழுவில் மக்கள் சார்பாக தாங்களும் இடம் பெற வேண்டுமென்று அண்ணா உண்ணாவிரதம் இருந்தார். உடனே அரசு அவரையும் அவர் சொன்னவர்களையும் குழுவில் சேர்த்துக் கொண்டது. மசோதாவை உருவாக்குவதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அரசு தான் தீர்மானித்த மசோதாவை பாராளுமன்றத்தில் வைத்தது. அண்ணா த்ங்கள் மசோதாவைத்தான் ஏற்கவேண்டுமென்று உண்ணாவிரதம் தொடங்கினார்.

இரண்டு மசோதாக்களுக்கும் என்ன வித்தியாசம் ? மூன்றாவதாக அருணா ராய் போன்றவர்கள் முன்வைக்கும் மசோதா என்ன சொல்லுகிறது ?
பிரதமரை லோக்பால் விசாரிக்கலாமா கூடாதா என்பதில் கருத்து வேறுபாடு பற்றி மட்டுமே எல்லாரும் மீடியாவில் அதிகம் பேசிவருகிறார்கள்.பிரதமர் பதவியில் இருந்து விலகியபிறகு அவரை லோக்பால் விசாரிக்கலாம் என்கிறது மன்மோகன் அரசு. பதவியில் இருக்கும்போதே விசாரிக்கவேண்டும் என்கிறது அண்ணா குழு. அநேகமாக பிரதமரை சேர்க்க கடைசியில் அரசு ஒப்புக் கொண்டுவிடும்.
ஆனால் வித்யாசங்கள் பிரதமர் பற்றி மட்டுமல்ல. அண்னா ஹசாரே சொல்லும் லோக்பால், இன்னொரு போட்டி அரசாங்கத்தையே உருவாக்கிவிடும் ஆபத்து இருப்பதாக அதை மறுப்பவர்கள் சொல்கிறார்கள்.அது அப்படித்தானா? உண்மையில் நாம் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சம் அதுதான்.

Sunday, September 11, 2011

வன்முறை மூண்ட பரமக்குடியில் 3000 போலீஸார் குவிப்பு-144 போலீஸ் தடை உத்தரவு அமல்

பரமக்குடி: வன்முறை மூண்ட பரமக்குடியில், 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3000 போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை பரமக்குடியில் நடந்த மிகப் பெரிய வன்முறையைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து பரமக்குடியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலும் பெரும் பதட்டம் நிலவுகிறது. பல பகுதிகளில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த பரமக்குடியில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 3000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் டிஐஜி சந்தீப் மிட்டல் படுகாயம்

இதற்கிடையே, பரமக்குடி கலவரத்தில் ராமநாதபுரம் சரக டிஐஜி சந்தீப் மிட்டல் படுகாயமடைந்துள்ளார். அவர் மதுரை கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிஜிபி அவசர ஆலோசனை

இதற்கிடையே, பரமக்குடி கலவரம் தொடர்பாக மாநில டிஜிபி ராமானுஜம், அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். டிஜிபி அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
tnks thatstamil

துப்பாக்கி சூடு - மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

தியாகி இமானுவேல் சேகரன்  நினைவு தினத்தையொட்டி இன்று காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டை மனிதநேய மக்கள் கட்சி மிகவும் துரதிருஷ்டவசமான, துயர நிகழ்வாக கருதுகின்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 4 விலை மதிக்க முடியாத உயிர்கள் பலியாகியுள்ளன. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு பழனிகுமார் என்ற மாணவர் விஷமிகளால் படுகொலைச் செய்யப்பட்டார். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் உடனடியாக காவல்துறையினர் கைதுச் செய்திருந்தால் கொந்தளிப்பான உணர்வுகள் தணிக்கப்பட்டிருக்கும். இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ரூ 1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இதனை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறது.
இதே போல் இந்த கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு உயர்தர மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சிக் கேட்டுக் கொள்கிறது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை முன்னெச்சரிக்கையாக கைதுச் செய்தது முதல் பரமக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்ற துப்பாக்கி சூடு வரை நீதி விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன் அடிப்படையில் அத்துமீறி செயல்பட்ட காவல்துறையினர் மீதும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மாச்சரியங்களை கடந்து அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Friday, September 9, 2011

கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!


Best Regards,
Dr.M.SATHICK, HHA.,RNMP.,ND.,FRIM.,MD(Acu)
Safa Acupuncture Clinic, Kottar, Nagercoil.
Mobile:
94433 89935, 89034 89935.
Web: www.darulsafa.com

கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போன்றவை குறித்து விளக்குகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில்குமார்.

பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும்.

அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும், கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.

பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.

மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51.

மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு, இரவில் அதிகம் வியர்த்தல், தூக்கமின்மை, அடிக்கடி கோபம், சலிப்பு, மறதி, மனஉளைச்சல், உடல் வலி போன்ற பிரச்னைகள் தாக்கும்.

சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்னை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும்.

பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது, சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல், மார்பக புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.

பாதுகாப்பு முறை: அதிகமாக உதிரம் போதல், வலி, சிறிய கட்டிகள், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம்.

இது போன்ற பிரச்னைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இருத்தல், வளர்ந்து கொண்டே போதல், கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல் போன்ற வழியில்லாத காரணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம். பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பையை அகற்றக் கூடாது.

நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச்சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும்.

கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்னைகளும் இருக்கும். கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கருப்பை மற்றும் சினை முட்டைப் பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ரெசிபி

ஆட்டு ஈரல் சூப்: ஆட்டு ஈரல் கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் 10 உரித்து வெட்டிக் கொள்ளவும், தனியா, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயம் - பாதி, தக்காளி 1, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு. தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும்.

அரிசி களைந்த தண்ணீரை குக்கரில் ஊற்றி அதில் ஈரல் துண்டுகள், அரைத்த பொடி, வெங்காயத்தை தனியாக வதக்கி அரைத்து இத்துடன் சேர்க்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியில் மிளகுத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்கள் வாரம் ஒரு முறை இதை அருந்தலாம்.

பனீர் கேரட் குருமா: பனீர் அரை கப், கேரட் கால் கிலோ, வெங்காயம் 4, தக்காளி 4, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய், கரம் மசாலா அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண் ணெய் விட்டு சோம்பு, பட்டை கிராம்பு உள்ளிட்டவற்றை வதக்கவும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை தனியாக வதக்கி அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நீள வாக்கில் கேரட்டை வெட்டி போடவும். தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். மஞ்சள் தூள், உப்பு,  கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளி, வெங்காயம் அரைத்த பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும்.

இறுதியில் பனீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம்.

நூடுல்ஸ் கட்லட்: தேவையான அளவு நூடுல்சை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணியை அரை வேக்காடாக எடுத்துக் கொள்ளவும்.

உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த நூடுல்ஸ், வேகவைத்த காய்கறிகள், உருளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வெண்ணெயைத் துருவி இதில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மைதா, பிரட் தூள் ஆகிவற்றை எடுத்துக் கொள்ள வும். பிசைந்த கலவையை பிடித்த வடிவத்தில் தட்டி முதலில் மைதா வில் பிரட்டி பின்னர் ரொட்டித் தூளில் பிரட்டி பின்னர் தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.

டயட்

அடிக்கடி அபார்ஷன், அதிக டெலிவரி, மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, சிறுநீரகத் தொற்று, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற உடல் நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பரம்பரை காரணங்களாலும் பெண்களுக்கு வரலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியம்.

அதே போல் உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரித்தல், தினமும் வாக்கிங், சத்தான உணவு என்று வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் தான் கருப்பையை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். இரும்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவும். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள், ஐஸ் கிரீம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அரிசி உணவுகளையும் குறைக்க வேண்டும். உணவில் ஒரு கப் சாதத்துடன் இரண்டு கப் காய்கறி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கட்டாயம் ஒரு கீரை இருக்கட்டும். முளைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகியவற்றை வாரம் இரண்டு முறையாவது சேர்க்க வேண்டும்.

கருப்பையை எடுத்தவர்கள் ஒரு நாளைக்கு 1200 கலோரி அளவுக்கான உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் கருப்பை எடுத்த உடன் பெண்களின் எடை அதிகரிக்கும்.

மேலும் சாதத்துக்கு பதிலாக பழங்கள், கீரைகள் அதிகம் சாப்பிடுவது அவசியம். இத்துடன் பிறப்புறுப்பு, கருப்பை வாய்ப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு சுத்தத்தை கடை பிடிக்க வேண்டியதும் அவசியம் என்கிறார்  உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் தீரும்.

வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங்காயத் தாள், காயவைத்த கறுப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும்.

மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாதவிலக்கு ஏற்படும்.

விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குண மாகும்.

வல்லாரைக் கீரை சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

முள் இலவம்பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்  கருப்பை பலப்படும்.

Thursday, September 8, 2011

கெட்டிக் கார ரெட்டிக்களும், பிஜேபியின் இரட்டை வேடமும்.

கர்நாடக சுரங்கத் தொழிலின் தாதாக்களான ரெட்டி சகோதரர்களில் சீனிவாச ரெட்டி மற்றும், ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.  சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தியதாக இவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.  சிபிஐ யிடம் சிக்கிய இரண்டாவது ரெட்டி இவர்கள்.  முதல் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜனார்த்தன ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி.
 
கர்நாடகாவின் அசைக்க முடியாத சக்தியாக இவர்கள் விளங்கிக் கொண்டிருந்தார்கள்.    யார் இந்த ரெட்டி சகோதரர்கள் ?
 REDDY_BROTHERS
தென்னிந்தியாவின் எந்த மாநிலத்திலும் கால் பதிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பிஜேபிக்கு ஆபத் பாந்தவனாக வந்தவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள்.   ஆந்திராவைச் சேர்ந்த இந்த ரெட்டி சகோதரர்களின் தந்தை ஒரு சாதாரண தலைமைக் காவலராக இருந்து ஓய்வு பெற்றவர். 2000 ஆண்டில், “Ennoble India“ என்ற சீட்டுக் கம்பெனி நடத்தி மக்கள் 200 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டவர்கள் தான் இவர்கள்.


கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகிய மூன்று சகோதரர்கள் போக, ஸ்ரீராமுலு என்று அவர்கள் குடும்பத்தின் அங்கமாகவே கருதப்படும் 4 பேரும் தான் இன்று கர்நாடகாவை ஆட்டிப் படைக்கிறார்கள். 1999ல் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள் ரெட்டி சகோதரர்கள். அதிலிருந்தே, பெல்லாரி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில், பிஜேபியை வெற்றி பெறச் செய்வதில் இவர்களின் பங்கு குறிப்பிடத் தகுந்தது.


ரெட்டி சகோதரர்களின் வளர்ச்சி, இரும்பு தாது சுரங்கத்தில்தான் தொடங்கியது. “ஓபாலபுரம் சுரங்க நிறுவனம்“ என்று தொடங்கி, கர்நாடக மாநிலத்தின் எல்லை அருகே ஆந்திராவில் இரண்டு லைசென்ஸுகள் பெற்று உள்ளனர் ரெட்டி சகோதரர்கள்.
2005ம் ஆண்டில் ஆண்டுக்கு 5 லட்சம் டன்களுக்கு முதலில் லைசென்ஸ் பெற்றவர்கள், குறுகிய காலத்திலேயே 60 லட்சம் டன்கள் எடுக்க உரிமம் பெற்றார்கள். இது எப்படி சாத்தியமாகியது என்பது புரியாத புதிர். தோராயமாக கணக்குப் பார்த்தால் ஒரு டன் 3000 ரூபாய் விற்கும் நிலையில், ஒரு நாளைக்கு 20,000 டன்கள் எடுக்கும் ரெட்டி சகோதரர்களின் ஒரு நாளைய வருவாய் 6 கோடி. ஆண்டுக்கு 1800 கோடி.

இந்த வருமானத்தில்தான், திருப்பதி வெங்கடாசலபதிக்கு 45 கோடி செலவில் கிரீடம் வாங்கி காணிக்கை செலுத்தினர் ரெட்டி சகோதரர்கள். 
tirupathi-crown-313

இந்த ரெட்டி சகோதரர்கள் தான்  கர்நாடகாவில் எல்லாமே. இவர்கள் அன்றி ஒரு அணுவும் அசையாது.

 2010ம் ஆண்டு, தென் மாநிலங்கள் முழுக்க வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட நிலையில் 15 நாட்களாக ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்து, டெல்லியில் “கட்டப் பஞ்சாயத்து“ நடத்தி வந்திருக்கின்றனர். முதலில் கட்டப் பஞ்சாயத்து செய்த ராஜ்நாத் சிங் கின் பஞ்சயாத்தின் படி, ரெட்டி சகோதரர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படும் ஷோபா மற்றும் சில அதிகாரிகளை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சமரசம் எட்டப் பட்டது.

தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள இதற்கு சம்மதித்த எடியூரப்பா அதற்கு பின்பு அளித்த டிவி பேட்டியில், முதலைக் கண்ணீர் வடித்து, என்னை நம்பியவர்களை மோசம் செய்து விட்டேன், வெள்ள நிவாரணப் பணிகளை பார்க்காமல் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தியது தவறு, ஆண்டவன் என்னை மன்னிக்க மாட்டார் என்று அரற்றி விட்டு, அப்போதும் கர்நாடக மாநிலத்திற்கு திரும்பி வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்க்காமல், தன் நாற்காலியைக் காப்பாற்றியதற்காக, காஷ்மீர் மாநிலத்திலுள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று நன்றி செலுத்தினார்.
19VBG_YEDDYURAPPA_311619f
b-s-yeddyurappa-2011-7-31-7-40-33
 கண்ணீர் வடிக்கும் முதலை
 


இதற்குப் பிறகாவது, படம் முடிந்து விட்டதா என்றால் இல்லை. பிரச்சினை முடிந்து விட்டது என்று எடியூரப்பா பேட்டி அளித்தார். முடியவில்லை, எடியூரப்பாவை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்று ரெட்டி பேட்டியளிக்கிறார்.

பார்வையாளர்களின் குழப்பம் அதிகரித்துக் கொண்டே போனது. இந்த நிலையில்தான், களத்தில் இறங்குகிறார் சுஷ்மா சுவராஜ். பிஜேபி தலைவர்களாலேயே முடியாக ஒரு விஷயத்தை, தான் முடித்துக் காட்டுவதன் மூலம், கட்சியில் தன் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள, ரெட்டி சகோதரர்களையும், எடியூரப்பாவையும் தன் வீட்டுக்கு அழைத்து சமாதானம் செய்து வைத்தார்.

இதற்குப் பிறகு நடந்த க்ளைமாக்ஸ் இருக்கிறதே. அடடா…. எடியூரப்பா ரெட்டிக்கு கேக் ஊட்டும் அந்தக் காட்சி இருக்கிறதே. காணக் கண் இரண்டு போதாது.
KARNATAKA__11529a2008ல் நடந்த தேர்தலில் பிஜேபி 110 சீட்டுகளை வெல்வதற்கு, கருணாகர ரெட்டி, சோமசேகர் ரெட்டி, ஜனார்தன ரெட்டி, ஆகியோர் எடியூரப்பாவின் ஆட்சியைக் காப்பாற்றியதற்காக அமைச்சர்களாக்கப் பட்டனர்.
ரெட்டி சகோதரர்களின் அரசியல் வளர்ச்சி, அவர்களின் தொழில் ரீதியான வளர்ச்சியை ஒட்டியது.     சர்வதேச சந்தையில் இரும்புத் தாது ஏற்றுமதிக்கு ஏற்பட்ட தேவையை கணக்கில் கொண்டு, தாறுமாறாக சுரங்கத் தொழிலில் இறங்கினர் ரெட்டி சகோதரர்கள்.  கர்நாடகா, ஆந்திரா என்று இரண்டு மாநிலங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
2001-2002 ஆண்டில் தான், ரெட்டி சகோதரர்கள் தங்களின் ஓபாலபுரம் சுரங்க நிறுவனத்தை தொடங்குகின்றனர்.  ஆன்ஜநேயா என்பவர், ரெட்டி சகோதரர்களின் ஓபாலபுரம் சுரங்க நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராக பணி புரிந்தார். இவர் இந்திய சுரங்கத் துறை மற்றும் தொழிலாளர் நலத் துறை இணைந்து வழங்கும் சுரங்க தொழிலில் நிபுணர் என்ற சான்றிதழை வைத்திருக்கிறார். எதற்காக ஆஞ்சநேயாவை ரெட்டி சகோதரர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால், இது போல மத்திய அரசு, சான்றிதழ் பெற்ற நபர் வேலையில் இருந்தால் தான், இந்தியாவின் சுரங்கச் சட்டங்களின் படி, கனிம வளங்களை வெட்டி எடுக்க முடியும்.  ரெட்டி சகோதரர்களின் ஓபாலபுரம் கனிம நிறுவனத்தில், அந்தாரா கங்கம்மா கோண்டா என்ற இடத்தில் ஆஞ்சநேயா பணியாற்றி வருகிறார்.
 ARVJANARDHAN_REDDY__12263f
திடீரென்று 9 டிசம்பர் 2009 அன்று, ரெட்டி சகோதரர்களின் சுரங்க நிறுவனத்தை சிபிஐ சோதனையிடப் போவதாக தகவல் வருகிறது. ஆஞ்சனேயாவின் அலுவலகம், ஒரு மலையின் அடிவாரத்தில், இரும்பு ஷீட்டுகளால் கட்டப் பட்ட அலுவலகம்.   அந்த இடத்தில் தனது உதவியானர் லட்சுமி பிரசாத்துடன் ஆஞ்சனேயா பணியாற்றி வருகிறார்.   வழக்கம் போல, டிசம்பர் 9 காலை தனது அலுவலகத்துக்கு சென்ற ஆஞ்சநேயாக அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவரது அலுவலகம் இருந்ததற்கான தடயமே இல்லை. அதற்கு முதல் நாள் இரவு, ஒரு கருப்பு நிற ஸ்கார்ப்பியோ வந்தது.  அந்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அத்தனையும் அந்த ஸ்கார்ப்பியோவில் ஏற்றப் பட்டன.  அந்த அலுவலகத்தில் இருந்த தளவாடங்கள் ஒரு வாகனத்தில் ஏற்றப் பட்டன.   ஒரு பொக்லேன் எந்திரம் வந்து, அந்த அலுவலகம் இருந்த இடத்தை அடியோடு மாற்றப் போட்டது.
எரிச்சலடைந்த ஆஞ்சனேயா, நேராக தனது நிறுவனத்தின் எம்டி சீனிவாச ரெட்டி அலுவலகத்துக்கு செல்கிறார்.   “எனது அலுவலகம் எங்கே, ஆவணங்கள் எங்கே” என்று கேட்கிறார்.   சீனிவாச ரெட்டி அமைதியாக, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்று கூறுகிறார்.   ஆனால், ஆஞ்சனேயா, சிபிஐ யிடம் தங்களை போட்டுக் கொடுத்து விடுவாரோ என்று பயந்த ரெட்டி சகோதரர்கள் அவர் குடும்பத்தின் மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்தனர். ஆஞ்சநேயா ஒரு முறை தற்கொலைக்குக் கூட முயன்றார்.
ஆந்திர கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பெல்லாரி மாவட்டம், மிக மிக வளமையான கனிம வளங்களைக் கொண்டுள்ளது. சாதாரணாக அரசு அனுமதித்துள்ள அளவுக்கு கனிம வளத்தை எடுத்தால் 30 ஆண்டுகளுக்கு எடுக்க முடியும்.    ஆனால் ரெட்டி சகோதரர்கள் இன்று எடுக்கும் அளவில், 6 ஆண்டுகளில் மொத்த வளமும் தீர்ந்து போகும் அபாயம் உள்ளது.
REDDY_30186f
சிறிய வயதில் தன் வீட்டில் ஒரு காவலரின் மகனாக வளரும் பொழுதே, ஜனார்த்தன ரெட்டிக்கு பணத்தின் முக்கியத்துவம் புரிந்தது.  பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது.   அதன் விளைவாகவே பணத்தின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் நிலைக்கு கொண்டு வந்தார். தொடக்க காலத்தில் ஒரு பத்திரிக்கையை வேறு தொடங்கினார் ரெட்டி.  அந்தப் பத்திரிக்கையை தொடங்கியதால், பத்திரிக்கைகளின் மீதான பயம் அறவே போய் விட்டது ரெட்டிக்கு.
இந்த ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்பர், இறந்து போன ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி.   இந்த ராஜசேகர ரெட்டி ஓபாலபுரம் கனிம நிறுவனத்துக்கு ஏராளமான உதவிகளைச் செய்தார்.  அதற்கு கைமாறாக, அவர் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை உடைப்பதற்கு உண்டான அத்தனை உதவிகளையும் செய்தனர் ரெட்டி சகோதரர்கள்.   இன்று சிபிஐ ரெட்டி சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதற்கு, இதுவும் ஒரு முக்கிய காரணம்.  ஒரு வேளை, ஆந்திராவில் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை ரெட்டி சகோதரர்கள் எடுத்திருப்பார்களேயானால், இந்த வழக்குகள் வராமல் போயிருக்கும்.
With_Family
திருட்டுக் குடும்பம்
ரெட்டி சகோதரர்கள் மீது இவ்வளவு தாமதமாக நடவடிக்கை எடுப்பதற்காக காரணம், காங்கிரஸ் கட்சி, எப்படியாவது இந்த ரெட்டி சகோதரர்களை ஜெகன் மோகனுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு, எடுத்த முயற்சிகள் வெற்றி பெறாததே காரணம்.
ஆயிரக்கணக்கான கோடிகளை, சட்ட விரோத கனிம வளக் கடத்தலினால் சம்பாதித்த ரெட்டி சகோதரர்கள் பெல்லாரியில் மிகப் பெரிய சொகுசு மாளிகையை கட்டியுள்ளனர்.  60 அறைகளைக் கொண்ட இந்த வீடுகளை 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய தனியார் பாதுகாவலர்கள் பாதுகாத்து வருகின்றனர்.  ஹெலிகாப்டர் வந்து இறங்க ஹெலிபேடோடு இந்த வீடு கட்டப் பட்டுள்ளது.  இருபது ஹெலிகாப்டர்களை வாங்கி அவற்றை வாடகைக்கு விட்டு, ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற புதிய தொழிலை தொடங்கவும் ரெட்டி சகோதரர்கள் உத்தேசித்திருந்தனர்.
kar_265999a
கர்நாடகாவில் சுரங்கம் தோண்டுவதற்கான லைசென்ஸ் கிடைத்து, மேற்கொண்டு முதலீடு செய்ய முடியாமல் இருக்கும் சுரங்கங்களைப் பார்த்து அந்தச் சுரங்கங்களையும் ரெட்டி சகோதரர்கள் வளைத்தனர்.   இரும்புத் தாதை வெட்டி எடுத்து செல்லும் போது, கூடுதலாக எடுப்பதன் மூலம் கொள்ளை லாபம் அடித்தனர்.  ஒரு சிங்கில் ஆக்சில் லாரியில் 15 டன் கனிமம் ஏற்ற முடியும்.  ஒரு டபிள் ஆக்சில் லாரியில் 25 டன் ஏற்ற முடியும்.  அனால் ரெட்டி சகோதரர்கள் சிங்கள் ஆக்சில் லாரியில் 25 டன்களும், டபிள் ஆக்சிள் லாரியில் 50 டன்களும் ஏற்றி 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுகத்துக்கு அனுப்புவார்கள். ஒரு இது போல லாரிகள் ஓவர் லோடு ஏற்றிக் கொண்டு செல்வதை போக்குவரத்துத் துறையினரோ, காவல்துறையினரோ தடுக்க மாட்டார்கள்.   கர்நாடகத்திலும் தடுக்க மாட்டார்கள், ஆந்திராவிலும் தடுக்க மாட்டார்கள்.  இவ்வாறு சட்ட விரோதமாக கடத்துவதன் மூலம், ஒரு நாளைக்கு ரெட்ட சகோதரர்கள் ஈட்டும் லாபம் 20 கோடி.  ஒரு நாளைக்கு 20 கோடி என்றால் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். நாளைக்கு 10 ஆயிரம்  லாரிகள் செல்கின்றன. 10 ஆயிரம் லாரிகளை ஓட்டுவதற்கு, லைசென்ஸ் உள்ள லாரி டிரைவர்கள் கிடைக்காததால் கிளீனர்களை வைத்து லாரிகளை ஓட்டியுள்ளனர்.
 
New2520Year2520Wishes2520from2520Kum.2520Shobha2520Karandlaje2520and2520others
எடியூரப்பாவின் நெருங்கிய தோழி ஷோபாவுடன் எட்டி
ஒரு டன் இரும்புத் தாது எடுக்க 400 முதல் 500 வரை செலவு ஆகிறது.   அந்த ஒரு டன் இரும்புத் தாது 7000 ரூபாய்க்கு விற்கப் படுகிறதென்றால் இவர்களின் லாபத்தை கணக்குப் போட்டுப் பாருங்கள். ரெட்டி சகோதரர்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்ததென்றால், பிரிட்டிஷார் காலத்தில் உருவாக்கப் பட்ட எல்லைகளை மாற்றும் அளவுக்கு இருந்தது.
கர்நாடக அதிகாரிகள் சோதனைக்கு வந்தால், எல்லைக் கற்கள் ஆந்திர எல்லையை நோக்கி நகர்த்தப் படும்.  ஆந்திர அதிகாரிகள் வந்தால் கற்கள் கர்நாடகாவை நோக்கி நகர்த்தப் படும். பிரிட்டிஷார் காலத்தில் உருவாக்கப் பட்ட ஒரு எல்லைக் கல், பூமியில் பல அடி ஆழத்தில் புதைக்கப் பட்ட பெரிய கல்.   அதில் எல்லை எந்த ஆண்டு அளவிடப் பட்டது என்பது போன்ற விபரங்கள் பொறிக்கப் பட்டிருக்கும்.  அந்தக் கல்லை வெடி வைத்து தகர்த்திருக்கின்றனர் ரெட்டி சகோதரர்கள்.
கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவின் அறிக்கையின் படி,  போக்குவரத்துத் துறை, கனிம வளத் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, வணிக வரித் துறை, சுற்றுச் சூழல் துறை, தொழிலாளர் நலத் துறை மற்றும் எடை அளவுத் துறையைச் சேர்ந்த 617 அதிகாரிகளுக்கு, லஞ்சமாக மட்டும், 2 கோடியே 46 லட்சம் கொடுக்கப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.
C.M.Programme-Photo
காந்திக்கு மாலை போடும் திருடன்
அன்னா ஹசாரே போராட்டத்தின் போது, பரிசுத்த ஆவியாக கொதித்தெழுந்து போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த, பிஜேபி கட்சி, ரெட்டி சகோதரர்கள் போட்ட பிச்சையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. ரெட்டி சகோதரர்களின் சுரங்க நிறுவனத்திடமிருந்து, கர்நாடக பிஜேபியின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன்கள் நடத்தும் ட்ரஸ்ட் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுக்கப் பட்டிருக்கிறது.  மேலும் பெங்களுரில் 1 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒரு நிலத்தை, ரெட்டி சகோதரர்கள் 20 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.  இந்த இரண்டு சம்பவங்களும், நேரடியாக ரெட்டி சகோதரர்களிடமிருந்து பெறப்பட்ட லஞ்சம் என்று லோக் ஆயுக்தா அறிக்கை தெரிவிக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றியும், ஊரில் உள்ள அத்தனை ஊழல்களைப் பற்றியும் குரல் கொடுத்து வழக்கு போடும் சுப்ரமணிய சுவாமி, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சுரங்க ஊழலைப் பற்றி மட்டும் வாயைத் திறக்க மாட்டார்.
ஊழல் என்று வந்தால், காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை.  இவ்வாறு, காங்கிரஸ் மற்றும் பிஜேபி இடையே நடக்கும் மோதலால், ஏற்படும் நல்ல விளைவுகளில் ஒன்றுதான் இன்றைய ரெட்டி சகோதரர்களின் கைதும்,  வழக்குகளும்.
கைது நடவடிக்கை எடுக்கப் பட்ட உடனேயே,  பிஜேபி, “ரெட்டி சகோதரர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிப்பார்கள்” என்று அறிக்கை வெளியிடுகிறது.  ரெட்டி சகோதரர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிப்பது இருக்கட்டும்  அது வரை அவர்களை கட்சியிலிருந்து நீக்க பிஜேபி தயாரா ?
  Tnks savukku