Thursday, June 30, 2011

25 பைசா, 50 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது!

டெல்லி: 25 பைசா, 50 பைசா நாணயங்கள் வரும் புதன்கிழமை முதல் செல்லாது.

பணவீக்கம், விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. அதிலும் குறிப்பாக 25 பைசா, 50 பைசா நாணயங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பே இல்லாமல் போய் விட்டது. 25 பைசா, 50 பைசாவுக்கு நாட்டில் எந்தப் பொருளுமே கிடைக்காது என்ற நிலை உருவாகிவிட்டது.

இதனால் இந்த நாணயங்களின் தயாரிப்பையே ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது. இந் நிலையில் 25 பைசா, 50 பைசா நாணயங்கள் வரும் 20ம் தேதி முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் இவை செல்லாக்காசாக உள்ளன.

இந்த நாணயங்களை வைத்திருப்போர் அதை வங்கிகளில் கொடுத்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாட்டுடமையாக்கப்பட்ட 19 வங்கிகளின் கிளைகளில் இந்த நாணயங்களைக் கொடுத்து பணம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூட்டை மூட்டையாக இந்த நாணயங்களைக் கொண்டு வந்து காசாக மாற்ற ஆரம்பித்துள்ளனர் மக்கள்.

இந்தியாவிலேயே கேரளாவில் தான் 25 பைசா, 50 பைசா மாற்றம் அதிகம் நடப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் திருவனந்தபுரத்தில் 2 சிறப்பு கவுண்டர்களை திறந்துள்ளது ரிசர்வ் வங்கி.
Thtastamil

விடுதலையாவதற்காக 2ஜி ஊழல் வழக்கில் அப்ரூவராவாரா கனிமொழி?

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனி்மொழி, திஹார் சிறையிலிருந்து இப்போதைக்கு வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, வழக்கில் அவர் அப்ரூவராக வேண்டும். அப்படி ஆக முடிவு செய்தால் அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்க வழி உள்ளது.

ஆனால் கனிமொழி அப்ரூவர் ஆவார் என்பது சந்தேகம்தான். கடந்த 2 மாதங்களாக திஹார் சிறையில் வாடி வருகிறார் கனிமொழி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டிவிக்கு கிடைத்த ரூ. 204 கோடி கடன் தொகை தொடர்பாக அவரும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர் இதுவரை தாக்கல் செய்த 3 ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியாகி விட்டன. வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்த பின்னர், விசாரணை நீதிமன்றமான சிபிஐ கோர்ட்டை அணுகுமாறு கனிமொழிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை அவரால் வெளியே வர முடியாத நிலை.

இந்த நிலையில் வழக்கில் அப்ரூவராக கனிமொழி முடிவு செய்தால் அவருக்கு ஜாமீன் உடனடியாக கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கனிமொழி அப்படிச் செய்வார் என்பதும் சந்தேகம்தான்.

அப்ரூவராக கனிமொழி முடிவு செய்தால் அது திமுகவுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதால் அதுகுறித்து ஒன்றுக்கு நான்கு முறை கனிமொழியும், கருணாநிதி குடும்பத்தினரும் யோசிக்கலாம் என்று தெரிகிறது.

அதேசமயம், கனிமொழி அப்ரூவராக மாறி, மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பல தகவல்களை வெளியிட்டால் அது காங்கிரஸுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் கனிமொழி அப்ரூவராக மாறக் கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது.

Thatstamil

பிரதமரை சந்தி்த்தார் தயாநிதி மாறன்: பதவியை ராஜினாமா செய்வாரா?

டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருப்பினும் தனது துறை தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசியதாக தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் தயாநிதி மாறன். மேலும் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாக பயன்படுத்தியதாகவும் பழைய சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவரை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தயாநிதி மாறனும் இதுவரை தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை, பிரதமரும் அவர் பதவியை பறிக்கவில்லை.

இந்நிலையில் இன்று தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்து பேசினார். இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ள நிலையில் நடந்துள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்போது தயாநிதி மாறனின் பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தயாநிதி மாறன் எதற்காக பிரதமரை சந்தி்த்தார், அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பிரதமர் நீக்கும் முன் தானாக ராஜினாமா செய்வாரா மாறன் என்று எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

அதேசமயம், தனது சந்திப்பில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை என்றும் துறை ரீதியான அலுவல் தொடர்பாகவே பிரதமரை சந்தித்துப் பேசியதாகவும் தயாநிதி மாறன் விளக்கியுள்ளார்.
 
 
Thatstamil

Wednesday, June 29, 2011

கேரளாவில் குடிப்பதற்காக மனைவியை விற்ற கணவர் கைது: வாங்கி கற்பழித்தவருக்கு வலைவீச்சு!

திருவனந்தபுரம்: கேரளாவில் மது அருந்த பணம் இல்லாததால் தனது மனைவியை ரூ. 15 ஆயிரத்திற்கு விற்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் நீலேஷ்வரத்தை அடுத்த கோயித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். ரப்பர் வெட்டி எடுக்கும் பணியை செய்து வந்தார். இவருக்கு குடிப் பழக்கம் உண்டு. இவருக்கும் சோயாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் பிரியா தனக்கு ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து ஹோஸ்துர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். மனுவில் எனது கணவன் திருமணம் செய்த நாளில் இருந்தே என்னை உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு வழிகளில் கொடு்மை படுத்தினார்.

சமீபத்தில் மது அருந்த பணம் கேட்டு கொடுமைபடுத்தினார். பணம் கொடுக்காததால் என்னை அவரது நண்பர் மனோஜ் என்பவருக்கு ரூ. 15 ஆயிரத்திற்கு விற்று வி்ட்டார். இதையடுத்து மனோஜ் என்னை பலாத்காரம் செய்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனுவை பரிசீலித்த மாஜிஸ்திரேட் இது குறித்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அப்பெண்ணின் கணவர் பிரசாத்தை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மானோஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Thatstamil

திருச்சியில் தீ விபத்து: பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமுமுக உதவி

திருச்சி பாலக்கரை பகுதியிலுள்ள குடிசைப் பகுதியில் வியாழக்கிழமை காலை நேரிட்ட தீ விபத்தில், அங்கிருந்த 24 குடிசைகள் எரிந்து நாசமாயின.திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியில் சுமார் 100 குடியிருப்புகளைக் கொண்ட அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு, வியாழக்கிழமை காலை சுமார் 10 மணியளவில்  ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் மளமளவெனப் பரவியது இந்த விபத்தில் 24 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின. . சுமார் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 26.06.2011 அன்று தமுமுக தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தீ விபத்து நேரிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 24 குடிசைகளில் வசித்த  மாணவர்களுக்கு தமுமுக சார்பில் இலவச நோட்டு புத்தங்களை வழங்கினார். இதில் திருச்சி மாவட்ட தலைவர் ஹக்கீம், மாவட்ட செயலாளர் பைஸ் உட்பட நகர மற்றும் கிளை தமுமுக மற்றும் மமகவினர் கலந்துக்கொண்டனர்.

Tnks http://www.tmmk.info/

தந்தைகளே! கவனியுங்கள்

வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர்.

தந்தையின் நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத இளம் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.
இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?

ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.

சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். "என் டாடி சூப்பர்" என்று சொல்லிக் கொண்டிருந்தவள், "டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது" என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.

என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.
"டாடி பிளீஸ்.... டாடி... வாங்கிக் கொடுங்க டாடி" என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்.... எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா?" என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். "நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்" எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர "அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது" என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.

இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், "என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.." என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்! அதை விட்டு விட்டு, "என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா...." என புலம்பித் தள்ளாதீர்கள்.

இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.
அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.

நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி! மதிக்கிறீர்கள். சரி! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில். டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.
டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். "எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்" எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை!

மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் – விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள். நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.
எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள். அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். "அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது" எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். "அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.


இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள்? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம். டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.

சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.
ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது "அப்பா தான் உலகம்" எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.

சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். "ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்" எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். "என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்" எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.
இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.
கடைசியாக ஒன்று. "என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்! வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார் என்பது வரலாறு. அவர் தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் எதிர்காலத்தில் அவரை முதல் பெண் பிரதமராக மிளிர்வதற்கு துணை நின்றது என்றுகூட சொல்லலாம். சிறையில் இருந்தபோதுகூட தன் மகளான இந்திராவுக்கு கடிதம் எழுத நேரு தவறியதில்லை.

UAE to give 3-year visa for property investors

The UAE government has extended visas for real estate investors to three years from six months, the state news agency WAM said, as the Gulf state looks to boost investment in its struggling property market.

The decision was taken during a cabinet meeting chaired by vice president and prime minister of the UAE and ruler of Dubai HH Sheikh Mohammed Bin Rashid Al Maktoum.

Currently foreign owners of property worth more than 1 million dirhams (75,000 KD) in the UAE are eligible to get a six-month visa, which needs to be reviewed every six months.

Dubai’s property sector has been hit hard in recent years with billions of dollars worth of projects put on hold or cancelled, while property prices slumped as much as 60 percent largely due to lack of buyers in the market.

Dubai’s Real Estate Regulatory Authority said earlier this year it cancelled as many as 217 registered property projects over the past two years.

 
 
Tnks zainul_hussain@yahoo.com

எதற்காகவும் காத்திருக்காதீர்கள்

எதற்காகவும் காத்திருக்காதீர்கள்

ஒருநாள் சாத்தான் கூட்டத்தை கூட்டினார், விஷயம் என்னான்னா இந்த பூமியை எப்பிடி சீக்கிரம் அழிக்கலாம் அப்பிடின்னு. எல்லா பேரும் யோசிக்க ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரம் அமைதி

"நான் போயி பூமியை அழிச்சுட்டு வரேன்" ஒரு குரல் கூட்டத்தில கேட்டது

"எப்பிடின்னு சொல்லு" - தலைமை சாத்தான் கேட்டுச்சு

"அண்ணன் தம்பிக்கு நடுவுல பகையை ஏற்படுத்துறேன், அப்புறம் மனுசனுக்கு மனுஷன் அடிச்சுக்கிட்டு சீக்கிரம் இந்த பூமி அழிஞ்சுடும்"

"அது சரியா வரும்னு தோணலை வேற ஏதாவது சொல்லு" - தலைமை சாத்தான் சொல்லுச்சு

இன்னொரு சாத்தான் ஏந்துருச்சு
"நான் மனுஷ மனசுக்குள அன்பு இல்லாம பண்ணிடுறேன் அப்புறம் அவங்க சீக்கிரம் அழிஞ்சுடுவாங்க"

இப்பவும் தலைமை சாத்தானுக்கு திருப்தி இல்லை "வேற" அப்பிடின்னுச்சு

இன்னொரு குட்டி சாத்தான் எந்திருச்சு "நான் மனுஷ மனசுல பேராசையை உருவாக்கிடுறேன், அந்த ஆசையே அவங்க அழிச்சுடும்"

"நான் வேணா மனுசங்களுக்கு பொறாமையை, அகங்காரம், கர்வம் எல்லாத்தாயும் ஏற்படுத்துறேன், அப்புறமென்ன அவங்களே அழிச்சுக்கிடுவாங்க"

"வேற உருப்படியா ஏதாவது சொல்லுங்க" - தலைமை சாத்தான் சொன்னது

கடைசியா ஒரு வயசான சாத்தான் எழுந்து
"நான் மனுசங்க கிட்ட கடவுளை பத்தி சொல்றேன், அவர் எவ்வளவு நல்லவர், அவருடைய திட்டங்கள் எல்லாம் எவ்வளவு அருமையானதுன்னு எடுத்து சொல்றேன். கடவுள் மனுஷன் கிட்ட என்ன எதிர்பார்க்கிறார்ன்னு சொல்றேன்.  நேர்மை, நீதி,  ஒழுக்கம் மற்றும் வீரம் பத்தி எடுத்து சொல்றேன், அவங்களை அதே மாதிரி செய்யவும் வற்புறுத்துறேன்."

இதை கேட்ட தலைமை சாத்தானுக்கு ஒரே எரிச்சல், இருந்தாலும் அந்த வயசான சாத்தான்  தொடர்ந்து பேசுச்சு
"என்ன தான் எல்லாம் நல்லா இருந்தாலும் ஒண்ணும் அவசரம் இல்லை, இதை எல்லாம் நாளைக்கு செய்யலாம்ன்னு சேர்த்து சொல்லுவேன், எல்லா சூழ்நிலைகளும் சாதகமா வர்ற வரை காத்து இருங்கன்னு சொல்லுவேன். "   

இதை கேட்ட தலைமை சாத்தான்,  "நீங்க தான் சரியான ஆள் உடனே பூமிக்கு புறப்படுங்க"  அப்பிடினு சொல்லுச்சு

நீதி
செய்ய வேண்டியதை நேரத்தில் செய்து முடித்து விட வேண்டும், எல்லாம் சரியாய் இருக்கும் போது செய்ய வேண்டும் என்று காத்து இருந்தால் எதையும் செய்ய முடியாது 

வரலாறு புகட்டும் பாடம்

உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.
உமர் (ரலி) கலீபாவாக இருந்த போது ரோம பேரரசின் பைஸாந்திய படையுடன் போர் நடந்த காலகட்டம் அது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபாவும் கலந்து கொண்டிருந்தார். ரோம பேரரசின் ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்களின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூலின் மீதும் அவனுடைய மார்க்கத்தின் மீதும் கொண்ட அன்பும் உறுதியும் அவர்களை களத்தில் நிலைத்து நிற்க வைத்தது. அதற்கு கிடைத்த பரிசு ரோம பேரரசு பின் வாங்கி கொண்டிருந்தது.
ரோம பேரரசனுக்கோ ஆச்சரியம். ஆனால் அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாலைவனத்திலிருந்து கிளம்பி வந்த கூட்டத்தின் வீரம், தீவிர இறை நம்பிக்கை தம்முடைய இறை தூதருக்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை அறிய பேராவல் கொண்டிருந்தான் அவன்.
யார் தான் அவர்கள்? அவர்களுக்கு அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது? அதனை நான் பார்க்க வேண்டும். போரில் கைதிகளாக சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் படையினரை கொலை செய்யாதீர்கள் அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கர்ஜித்தான்.
அதனடிப்படையில் போரில் கைதிகளாக சிக்கிய ஒரு கூட்டம் ரோம பேரரசினிடம் அழைத்து செல்லப்பட்டது. அந்த கைதிகளில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யும் ஒருவர். அப்பொழுது அவர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்தான் படைவீரன் ஒருவன். இவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர், முஹம்மது நபியின் முக்கியமான தோழர்களில் ஒருவர் ஆவார் என்றான்.
நீண்ட நேரம் அவரை உற்று பார்த்த மன்னனுக்கு எந்த சிறப்பம்சமும் தென்படவில்லை. காரணம் நீண்ட தாடி, புழுதிபடிந்த ஆடை, கிரீடங்களோ அலங்காரமோ இல்லாத துணியிலான தலைப்பாகை.
நீர் பார்ப்பதற்கு மிக எளிமையாக தோற்றமளிக்கிறீர், மதிக்கதக்கவராய் இருக்கிறீர் ஆதலால் நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன் ஆனால் ஒரு விஷயம் என்றான்.
என்ன அது?
நீர் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உன்னை விடுதலை செய்கிறேன், உமக்கு போதுமான அளவு கவனிப்பும் என்னிடம் உண்டு என்றான்.
அவன்  கூறி முடித்த வினாடிகள் நகரவில்லை உரக்க திடமான பதில் வந்தது எதிர்புறத்திலிருந்து ” நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது”. அதிர்ந்து போனான் மன்னன். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான், எனது மகளை உனக்கு திருமண முடித்து வைக்கிறேன் எனது ஆட்சி அதிகாரத்தில் பெரும் பங்கு உனக்கு உண்டு என்றான்.
இவ்வுலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாழ்வும், சலுகையும் அது. அன்றும், இன்றும், என்றும் மனிதர்கள் ஆசைப்பட்டு, வாயைபிழந்து ஓடுவதெல்லாம், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தானே. அதுவும் ரோம பேரரசின் மன்னன் அழைத்து நேரடியாக தன் பெண்னையும், பொன்னையும் கொடுத்து பதவியை அளிக்கிறேன் என்று கூறியது, அண்டை நாட்டு மன்னனுக்கோ அல்லது பதவி, பணம், அந்தஸ்தில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. பாலைவனத்திலிருந்து வந்த ஒரு போர் கைதி, நிராயுதபானியாய் நிற்கும் ஓர் அடிமை.
“எங்கிருந்து வந்தது இத்தகைய சிறப்பும் அங்கிகாரமும் அந்த சாதாரண மனிதருக்கு ?
“இஸ்லாம்” ! ! அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத திடமான உறுதி.
ஆனால் இப்பொழுது அந்த இஸ்லாம் விலை பேசப்பட்டிருந்ததை உண்ர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார், “உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்க்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மது கற்றுத்தந்த மார்க்கத்திலிருந்து மாரமாட்டேன்” என்றார்.
இந்த நிலையில் இன்று வாழும் முஸ்லிம்களின் நிலை-தன்னுடைய வேலைக்காக, பணத்திற்காக, சுகபோகமான வாழ்க்கைக்காக மார்க்கத்திலிருந்து விலகி வாழத்தயார். தாடி வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை என்று தெரிந்தும் தனது ஆடம்பர வேலைக்காக மலுங்க வளிப்பதற்குதயார்.
வரதட்சனை ஹராம் என்று தெரிந்தும் தன் பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறி இஸ்லாத்தை விலை பேசுவதற்குதயார்.
சத்தியத்தை சொல்லி நன்மையை ஏவி தீமையை தடுப்புதான் இறைகட்டளை என்று உணர்ந்த பின்னும் தனக்கு வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அஞ்சி இஸ்லாத்தை நடைமுறைபடுத்தாமலிருக்க தயார்.
சின்ன சின்ன அன்றாட இன்பத்திற்காக இஸ்லாத்தை தியாகம் செய்யும் நம்மவர்களின் மத்தியில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வின் வாழ்க்கையில் நமெக்கெல்லாம் படிப்பினைகள் பல கொட்டி கிடக்கின்றன.
இப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் வார்த்தையை கேட்ட மன்னன், கோபத்தில் கொக்கரித்தான், கொலை செய்ய உத்தரவிட்டான்.
எவ்வாறு ?
 
 
சாதாரணமாக அல்ல கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டான். அப்துல்லாஹ்வின் கைகளிலும், கால்களிலும் அம்புகள் எய்யப்பட்டன.
குருதி குப்பளித்து குபுக், குபுக் என வெளியேறிக் கொண்டிருந்தது. மீண்டும் அவரிடம் சலுகை பேசினான், ஆசை காட்டினான். கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றான். உறுதி கொலையாமல் உறக்க மறுத்தார் உன்னதர்.
எதற்கும் மசியாத இவருக்கு இந்த தண்டனை போதாது என்று யோசித்து கட்டளையிட்டான். எண்ணையை கொதிக்க வைத்து அதில் இவரை தூக்கி போட்டு பொசுக்குவதற்கு முடிவெடுத்தான்.
தீ மூட்டப்பட்டது, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிந்த தீயில் எண்ணெய் கொதிக்க ஆரம்பித்து. மன்னன் கைதிகளில் இருவரை அழைத்துவர சொன்னான். அழைத்துவரப்பட்ட நபர் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட மறு வினாடி அவர் அலறுவதற்கு கூட நேரமில்லை கருகி பொசுங்கி போனார்கள். காரணம் அந்த அளவிற்கு கொதித்திருந்தது எண்ணெய். அவர்கள் தோல்கள் கருகி எலும்பு மட்டுமே தெரிந்தது.
இந்த கோர சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யிடம் கேட்டான் மன்னன். இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் என்ன சொல்கிறாய் என்றான். முன்னதாக இருந்தை விட உறுதியாய் பதில் வந்தது “முடியாது” என்று.
எண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் ” இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள்” என்று அலறினான்.
சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது.
இதனை எதிப்பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மழிச்சியுற்றான் மன்னன். ஆஹா! மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான். இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா?
“நிச்சயமாக இல்லை”
நீர் நாசமாய்ப் போக! பிறகு எதற்கு அழுதீர் ?
அவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி.
“என் கவலைக்கும் பயத்திற்க்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கல் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன் ! !
கைசேதம் கண்ணீராகி விட்டது!!!.
கொதிக்கும் கொப்பரை, எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிம், கூடி இருக்கும் எதிரிப்படை என்று  எதற்கும் அஞ்சாமல் உயிர் ஒன்று தான் இருக்கிறது இறைவன் பாதையில் அர்பனிக்க என்று கவலைப்பட்டு அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.
சமரசத்தின் நிழல் கூட விழாமல் அவர் கூறிய பதில்கள் இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் அச்சத்தையும், அவர்களது ஈமானிய பலத்தையும் நிலை நிறுத்தியது.
இதனை கேட்ட மன்னன் திகைத்து போனான். என்ன செய்வதென்று அறியாது தன் நெற்றியில் முத்தமிடுமாறு  அன்பு கட்டளையிட அதனையும் மறுத்து அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) தன்னுடன் கைது செய்யப்பட்ட முஸ்லிகளை விடுவித்தால் தான் முத்த மிடுவதாக கூற அவ்வாறே ஆகட்டும் என் கட்டளையிட்டான்.
வெற்றிகரமாய் மதினா திரும்பிய அனைவரும் கலீஃபா உமரிடம் (ரழி) யிடம் நடந்ததை கூற விடுதலை ஆகி வந்தவர்களை பார்த்து பெருமிதம் பொங்க.” ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் நெற்றியை முத்தமிட கடமை பட்டிருக்கிறார்கள்”, அதில் நான் முந்திக் கொள்கிறேன் என்றார்கள் ! ! என்று வரலாறு அவர்களது தியாகத்தை பறைசாற்றுகிறது.
உலகத்தின் மீதுள்ள ஆசையும், மரணத்தின் மீதுள்ள பயமும் முஸ்லிம்களிடம் இருக்க கூடாத பண்பு என்பது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வாழ்க்கையில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.
இந்த பாடத்தின் அடிப்படையில் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி அவன் படைத்தவற்றிற்கு அஞ்சாமல் கொண்ட கொள்கயில் உறுதியாய் இருந்தால் கண்ணியமும், மரியாதையும், பதவியும், அந்தஸ்தும் அகில உலக அதிபதி அல்லாஹ்விடம் நமக்கு நிச்சயம் உண்டு. சிந்திப்போம்……
 
 
سبحان الله العظيم
ஒன்று பட்ட சமுதாயமாகவாழ
நம் அனைவருக்கும்அந்த வல்ல
இறைவன் அருள் புரியட்டும்.
ஆமீன்

ம.ம.க வில் சேர இயக்கங்களு​க்கு ஜவாஹிருல்லா அழைப்பு

சென்னை : மனிதநேய மக்கள் கட்சிக்கு வந்தால்  உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் பாடுபடத் தயாராக இருக்கிறோம்,'' என, தமிழக முஸ்லிம் அமைப்புகளுக்கு, ம.ம.க., மாநில தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தின் சார்பில், தமிழக சட்டசபை முஸ்லிம் உறுப்பினர்களுக்கு அமைப்பின் தலைவர் முகமது கான் பாகவி தலைமையில் பொதுச்செயலர் தர்வேஷ் ரஷாதி முன்னிலையில் சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
தமிழக சட்டசபை முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்களான ம.ம.க.,வைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, அஸ்லாம் பாட்ஷா, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முகமது ஜான் மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோரைப் பாராட்டி விழாவில் பலர் பேசினர். ம.ம.க., சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் விழாவில் பங்கேற்றனர்.  விழாவில் பேசிய ம.ம.க தலைவர் திரு ஜவாஹிருல்லா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இக்கட்டான காலத்தில் 1995ல் துவக்கப்பட்டது. இந்தியாவில், அதிக அளவில் ரத்ததானம் செய்த இயக்கத்தினர் த.மு.மு.க.,வினர் தான். சுனாமி பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்ட போது, நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டோம்.
பின், மனிதநேய மக்கள் கட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கி, அனைத்து சமுதாய மக்களுக்கும் பாடுபடுகிறோம். இந்த தேர்தலில் ம.ம.க.,வுக்கு கிடைத்த வெற்றி, கட்சியினரின் உழைப்புக்கும், பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஆதரவுக் குரல் கொடுப்பதற்கும் கிடைத்த அங்கீகாரம். எனவே, முஸ்லிம் அமைப்புகள் அனைவரும் எங்களோடு இணையுங்கள்; உங்கள் அனைவருக்கும் பாடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஜவாஹிருல்லா பேசினார்.

அவன்-இவன்!. எவன் இந்த பாலா?.

சமீபத்தில் பாலா என்ற இயக்குனன் மரியாதை இல்லா தலைப்பில் “அவன் இவன்” என்று ஒரு திரைப்படத்தை வெளியிட்டுள்ளான்!. அதில் வழக்கம் போல, சினிமா கூட்டம் முஸ்லிம்களை சீண்டிப்பார்ப்பது போல, தானும் தன் பங்கிற்கும் இதில் சீண்டி பார்த்துள்ளான். இதில் வரும் ஒரு காட்சியில், வியாபாரிகள் அடிமாட்டை வாங்கி, விற்பனை செய்ய அடைத்து வைத்திருக்கின்றார். இவ்வாறு மாடுகள் கறிக்காகவும், வியாபாரத் திற்காகவும் வாங்கி விற்பனை செய்வதை கண்டு, மிருகங்களின் மேல் அக்கறை கொண்ட, படத்தில் தன் மர்மஸ்தானத்தை அம்மணமாக திரையில் காண்பிக்கும் சமஸ்தான ஜமீன்(!) ஹைனஸ், பொங்கி எழுந்து புளூ கிராசிற்கு தகவல் தெரிவிக்கின்றார்.

இதனால் ஆத்திரமடையும் அந்த வியாபாரி,

ஏண்டா!, மாட்ட வெட்டி திங்கிறதுக்கே இந்த உருகு உருகிறே!, எங்கோ இருக்கிற ஒட்டகத்தை அவனுவ இங்க கொண்டாந்து வெட்டி திங்கிராங்கல்ல!. அது பேரென்னடா!. குருதானியா?. என்று அருகில் உள்ளவனிடம் கேட்கின்றான்.

அதற்கு அவன், குர்பானி அண்ணே!. என்று அவனுக்கு சொல்லி கொடுக்கின்றான்.

பின் அவனை போய் கேளு!, அவனைபோய் கேளு!! என்று கத்துகின்றான்.

முஸ்லிம்கள், ஹஜ்ஜுப்பெருநாள் அன்று கொடுக்கும், மார்க்க கடமையான குர்பானியை வம்பிற்கு இழுக்கும் காட்சியை வேண்டும் என்றே வைத்துள்ளான். அதுமட்டுமில்லாமல், இக்காட்சியை காணும் மக்கள் முஸ்லிம்களின் மேல் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமாய் இந்த காட்சியை அமைத்துள்ளான்!.

சரி…..!. அவன் பங்கிற்கு நம்மை வம்பிற்கு இழுத்து விட்டதினால், இனி நாமும் இவனை நம் விருப்பப்படி தோழுரிப்போம்!. மிருகங்களை அறுப்பது கூடாது என்றால், அதே படத்தில் இந்த ஜமீன், வெள்ளைக்காரனோடு காட்டுக்குள் துப்பாக்கி சகிதம் வேட்டையாட செல்லும் காட்சியை ஏன் நீ வைத்தாய்?. மிருகவேட்டை என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் அல்லவா?. மிருகவேட்டை உனக்கு மிருகவதையாக தெரியவில்லையா?. அவ்வாறு வேட்டைக்கு செல்பவர்களை தடுக்கும் வன அதிகாரியை அடித்து உதைக்கும் காட்சியையும் வைத்து கேவலப்படுதியது ஏன்?.

பின் வேறொரு காட்சியில், மிருகவதைக்கான புளுகிராஸ்ஸை துணைக்கு அழைக்கும் இந்த ஜமீன், அருவிக்கரையில் அமர்ந்து, கோழியின் சப்பைக்கறியை (Leg piece) ருசித்து, ருசித்து உண்ணுவது போன்ற காட்சியை வைத்து, தனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை என்று, தனக்கு மிருகங்களின் மேல உள்ள இரட்டை நிலையை வெளிப்படுத்தியுள்ளான். மிருகத்தை வதை கூடாது எனும் இவன், இந்தப்படத்தின் இறுதியில் மாட்டு வியாபாரியை உயிரோடு வைத்து கொழுத்தும் காட்சி, எந்த வதையில் சேரும் என்று இந்த கூறுகெட்ட பாலா விளக்கம் தருவானா?.

தற்போதுள்ள மிருகவதை சட்டத்தின் படி, சினிமாவில் மிருகங்களை காட்ட வேண்டும் என்றால், அந்த மிருகத்திற்கு மருத்துவ சான்று வேண்டும். ஆனால் இதில் காட்டப்படும் அத்தனை மாட்டிற்கும் அவ்வாறு சான்று வாங்கப்பட்டதா?. இல்லை என்றால் உடனே இந்த பாலாவை மிருகவதை சட்டத்தின் படி கைது செய்து உள்ளே தள்ளவேண்டும்!.

அதுமட்டுமல்ல, படம் முழுவதும், போலிஸ் மற்றும் ஜட்ஜை கேவலப்படுத்தி இவர்களை கையாலாகாதவர்களை போல் காட்டி, தன் அறிப்பையும் தீர்த்துள்ளான். இந்தப்படத்தில் காவல்துறையை கேவலப்படுதியது போல வேறு எந்தப்படதிலும் இருக்குமா என்பது சந்தேகமே!. இவ்வாறு பல இடங்களில் அரசாங்க துறைகளை, அதிகாரிகளை கேவலப்படுத்திய இவனுக்கு, மத்திய-மாநில அரசுகள், “பல காட்சிகளில் எங்கே பாலாவை காணவில்லை என்று தேட வேண்டி இருந்தது!. திரைக்கதையில் அங்கங்கே சோர்வு இருப்பது சலிப்பு” என்று நக்கீரன் இதழ் இந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதி இருப்பதையும் கண்டுகொள்ளாமல், சிறந்த படத்திற்கான விருது வழங்கினாலும் வழங்கும் என்பது இன்னும் கேவலமான செயலாகும்!.

சினிமா என்பது ஒழுக்கங்கெட்டவர்களின் கூடாரம் என்பது நாம் எல்லாம் அறிந்ததே!. ஆனால் அதை எல்லாம் தாண்டும் விதமாக, இந்தப்படத்தில் பாலா என்பவன், ஆத்தாலையும்-மகனையும் பலபேர்களின் முன்னிலையில் குத்துப்பாட்டு ஆட வைத்து, தாயிற்கும் மகனிற்கும் உள்ள உறவை கேவலப்படுத்தியும் உள்ளான்!. அதுமட்டும் அல்ல!. அதே தாயை அவள் வரும் காட்சி முழுவதும், புகை பிடிப்பவளாகவும் காட்டி பெண் இனத்தையும் கேவலப்படுத்தி உள்ளான்!. மேலும் படம் ஆரம்பமானது முதல் இறுதிவரை ஒரே மது அருந்தும் காட்சிகள்!. புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் சினிமாவில் காட்டக்கூடாது என்ற ஆணையையும் மீறிய இந்த பாலாவை கைது செய்து உள்ளே தள்ளவேண்டும். ஏற்கனவே இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஜமீன் ஒருவர் கோர்ட்டை அணுகியுள்ளார்.

முஸ்லிம்களின் நம்பிக்கையை கேள்வி கேட்க யார் இந்த பாலா?. முஸ்லிம்களின் மார்க்க கடமையை இழிவுபடுத்தும் இக்காட்சியை, உடனே நீக்கவேண்டும்!. முதியவரை அம்மணமாக காட்டி பலான படம் எடுக்கும் பாலா முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!.

இதுவரை எந்த இஸ்லாமிய இயக்கங்களும் இதுவரை இவனின் இந்த குர்பானி அவமதிப்பை எதிர்த்து குரல் கொடுத்ததாக நமக்கு தகவல் இல்லை!.
Posted by அதிரை முஜீப்
http://adiraimujeeb.blogspot.com/2011/06/blog-post_112.html

Tuesday, June 28, 2011

எதற்காகவும் காத்திருக்காதீர்கள்

எதற்காகவும் காத்திருக்காதீர்கள்

ஒருநாள் சாத்தான் கூட்டத்தை கூட்டினார், விஷயம் என்னான்னா இந்த பூமியை எப்பிடி சீக்கிரம் அழிக்கலாம் அப்பிடின்னு. எல்லா பேரும் யோசிக்க ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரம் அமைதி

"நான் போயி பூமியை அழிச்சுட்டு வரேன்" ஒரு குரல் கூட்டத்தில கேட்டது

"எப்பிடின்னு சொல்லு" - தலைமை சாத்தான் கேட்டுச்சு

"அண்ணன் தம்பிக்கு நடுவுல பகையை ஏற்படுத்துறேன், அப்புறம் மனுசனுக்கு மனுஷன் அடிச்சுக்கிட்டு சீக்கிரம் இந்த பூமி அழிஞ்சுடும்"

"அது சரியா வரும்னு தோணலை வேற ஏதாவது சொல்லு" - தலைமை சாத்தான் சொல்லுச்சு

இன்னொரு சாத்தான் ஏந்துருச்சு
"நான் மனுஷ மனசுக்குள அன்பு இல்லாம பண்ணிடுறேன் அப்புறம் அவங்க சீக்கிரம் அழிஞ்சுடுவாங்க"

இப்பவும் தலைமை சாத்தானுக்கு திருப்தி இல்லை "வேற" அப்பிடின்னுச்சு

இன்னொரு குட்டி சாத்தான் எந்திருச்சு "நான் மனுஷ மனசுல பேராசையை உருவாக்கிடுறேன், அந்த ஆசையே அவங்க அழிச்சுடும்"

"நான் வேணா மனுசங்களுக்கு பொறாமையை, அகங்காரம், கர்வம் எல்லாத்தாயும் ஏற்படுத்துறேன், அப்புறமென்ன அவங்களே அழிச்சுக்கிடுவாங்க"

"வேற உருப்படியா ஏதாவது சொல்லுங்க" - தலைமை சாத்தான் சொன்னது

கடைசியா ஒரு வயசான சாத்தான் எழுந்து
"நான் மனுசங்க கிட்ட கடவுளை பத்தி சொல்றேன், அவர் எவ்வளவு நல்லவர், அவருடைய திட்டங்கள் எல்லாம் எவ்வளவு அருமையானதுன்னு எடுத்து சொல்றேன். கடவுள் மனுஷன் கிட்ட என்ன எதிர்பார்க்கிறார்ன்னு சொல்றேன்.  நேர்மை, நீதி,  ஒழுக்கம் மற்றும் வீரம் பத்தி எடுத்து சொல்றேன், அவங்களை அதே மாதிரி செய்யவும் வற்புறுத்துறேன்."

இதை கேட்ட தலைமை சாத்தானுக்கு ஒரே எரிச்சல், இருந்தாலும் அந்த வயசான சாத்தான்  தொடர்ந்து பேசுச்சு
"என்ன தான் எல்லாம் நல்லா இருந்தாலும் ஒண்ணும் அவசரம் இல்லை, இதை எல்லாம் நாளைக்கு செய்யலாம்ன்னு சேர்த்து சொல்லுவேன், எல்லா சூழ்நிலைகளும் சாதகமா வர்ற வரை காத்து இருங்கன்னு சொல்லுவேன். "   

இதை கேட்ட தலைமை சாத்தான்,  "நீங்க தான் சரியான ஆள் உடனே பூமிக்கு புறப்படுங்க"  அப்பிடினு சொல்லுச்சு

நீதி
செய்ய வேண்டியதை நேரத்தில் செய்து முடித்து விட வேண்டும், எல்லாம் சரியாய் இருக்கும் போது செய்ய வேண்டும் என்று காத்து இருந்தால் எதையும் செய்ய முடியாது 

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?.

ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!. 

யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.

உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.

முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.

யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.

காரணம் ஒன்றே ஒன்றுதான்!. அதுதான், அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால்!!. அதுமட்டுமல்ல!!. மேலும் அவர்களுக்கு சூழ்ச்சியே தாரகமந்திரமாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது!.

கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்!. பிரிவுகள்!!. ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள். ஆனால் குறிக்கோள்கள் ஒன்றாகவே உள்ளது!. கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரை விட முன்னேறி கொண்டிருகின்றனர்.

ஆனால்......!
ஒரே வேதத்தை கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது!. ஆனால் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நூற்றுகணக்கான ஜமாத்கள்!. இயக்கங்கள்!. பிரிவுகள்!. மற்றும் பிரிவினைகள்!. ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம்!!. கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருப்பதேன்?. 

தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பை கொண்ட கல்விநிலையத்தை தொடங்கி நடத்தியதுண்டா?.

ஆனால்......!
தி.க வின் கி.வீரமணி தொடங்கி, சங்கராச்சாரியார் வரை வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த முஸ்லிம் இயக்கமாவது அதை கண்டாவது சிந்தித்தோமா?.

அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.

ஆனால்......!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.

உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே!.

கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.

கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.

ஆனால்......!
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன!.

40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.

ஆனால்......!
முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்!.

அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.

உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

ஆனால்......!
ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.

ஆனால்......!
இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.

கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

ஆனால்.....!
1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!.

மேற்கண்ட அணைத்து புள்ளிவிவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேலை, அதை காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை!. மனம் இல்லை!. அக்கறை இல்லை!!!.

யூதர்களின் கண்டுபிடிப்புக்கள் உலகை மாற்றியதில் சில:
Micro Processing Chip.- Stanley Mezor (Jewish)
Nuclear Chain Reactor - Leo Sziland (Jewish)
Optical Fiber Cable - Peter Schultz (Jewish)
Traffic Lights - Charles Adler (Jewish)
Stainless Steel - Benno Strauss (Jewish)
Sound Movies - Isador Kisee (Jewish)
Telephone Microphone - Emile Berliner (Jewish)
Video Tape Recorder - Charles Ginsburg (Jewish)

யூதர்களால் நடத்தப்படும் சிறந்த தொழில் நிறுவனங்கள்.
Polo - Ralph Lauren (Jewish)
Coca Cola - Jewish
Levi's Jeans - Levi Strauss (Jewish)
Sawbuck's Howard Schultz (Jewish)
Google - Sergey Brin (Jewish)
Dell Computers - Michael Dell (Jewish)
Oracle - Larry Ellison (Jewish)
DKNY - Donna Karan (Jewish)
Baskin & Robbins - Irv Robbins (Jewish)
Dunkin Donuts - Bill Rosenberg (Jewish)
உலகத்தை மீடியா மூலம் ஆட்டிப்படைக்கும் யூத மீடியாக்கள்.
Wolf Blitzer - CNN (Jewish)
Barbara Walters - ABC News (Jewish)
Eugene Meyer - Washington Post (Jewish)
Henry Grunwald - Time Magazine (Jewish)
Katherine Graham -  Washington Post (Jewish)
Joseph Lelyeld - New York Times (Jewish)

எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்!. உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப்போதும் முன்னெடுத்து செல்லுங்கள். முன்னேற்ற கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயலமாட்டார்கள்!.

எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள்!. கல்வியறிவை பெருக்குங்கள்!. பெறுங்கள்!!. உலகில் தலை சிறந்து விளங்குங்கள்!. இது ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும், தமிழக முஸ்லிம்களே நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!!. ஏனெனில் நீங்களும் உலக முஸ்லிம்களில் அடங்குவீர்கள்!!.

ஆக்கம் அதிரை முஜீப்.

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?.

ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!. 

யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.

உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.

முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.

யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.

காரணம் ஒன்றே ஒன்றுதான்!. அதுதான், அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால்!!. அதுமட்டுமல்ல!!. மேலும் அவர்களுக்கு சூழ்ச்சியே தாரகமந்திரமாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது!.

கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்!. பிரிவுகள்!!. ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள். ஆனால் குறிக்கோள்கள் ஒன்றாகவே உள்ளது!. கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரை விட முன்னேறி கொண்டிருகின்றனர்.

ஆனால்......!
ஒரே வேதத்தை கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது!. ஆனால் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நூற்றுகணக்கான ஜமாத்கள்!. இயக்கங்கள்!. பிரிவுகள்!. மற்றும் பிரிவினைகள்!. ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம்!!. கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருப்பதேன்?. 

தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பை கொண்ட கல்விநிலையத்தை தொடங்கி நடத்தியதுண்டா?.

ஆனால்......!
தி.க வின் கி.வீரமணி தொடங்கி, சங்கராச்சாரியார் வரை வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த முஸ்லிம் இயக்கமாவது அதை கண்டாவது சிந்தித்தோமா?.

அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.

ஆனால்......!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.

உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே!.

கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.

கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.

ஆனால்......!
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன!.

40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.

ஆனால்......!
முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்!.

அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.

உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

ஆனால்......!
ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.

ஆனால்......!
இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.

கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

ஆனால்.....!
1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!.

மேற்கண்ட அணைத்து புள்ளிவிவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேலை, அதை காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை!. மனம் இல்லை!. அக்கறை இல்லை!!!.

யூதர்களின் கண்டுபிடிப்புக்கள் உலகை மாற்றியதில் சில:
Micro Processing Chip.- Stanley Mezor (Jewish)
Nuclear Chain Reactor - Leo Sziland (Jewish)
Optical Fiber Cable - Peter Schultz (Jewish)
Traffic Lights - Charles Adler (Jewish)
Stainless Steel - Benno Strauss (Jewish)
Sound Movies - Isador Kisee (Jewish)
Telephone Microphone - Emile Berliner (Jewish)
Video Tape Recorder - Charles Ginsburg (Jewish)

யூதர்களால் நடத்தப்படும் சிறந்த தொழில் நிறுவனங்கள்.
Polo - Ralph Lauren (Jewish)
Coca Cola - Jewish
Levi's Jeans - Levi Strauss (Jewish)
Sawbuck's Howard Schultz (Jewish)
Google - Sergey Brin (Jewish)
Dell Computers - Michael Dell (Jewish)
Oracle - Larry Ellison (Jewish)
DKNY - Donna Karan (Jewish)
Baskin & Robbins - Irv Robbins (Jewish)
Dunkin Donuts - Bill Rosenberg (Jewish)
உலகத்தை மீடியா மூலம் ஆட்டிப்படைக்கும் யூத மீடியாக்கள்.
Wolf Blitzer - CNN (Jewish)
Barbara Walters - ABC News (Jewish)
Eugene Meyer - Washington Post (Jewish)
Henry Grunwald - Time Magazine (Jewish)
Katherine Graham -  Washington Post (Jewish)
Joseph Lelyeld - New York Times (Jewish)

எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்!. உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப்போதும் முன்னெடுத்து செல்லுங்கள். முன்னேற்ற கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயலமாட்டார்கள்!.

எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள்!. கல்வியறிவை பெருக்குங்கள்!. பெறுங்கள்!!. உலகில் தலை சிறந்து விளங்குங்கள்!. இது ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும், தமிழக முஸ்லிம்களே நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!!. ஏனெனில் நீங்களும் உலக முஸ்லிம்களில் அடங்குவீர்கள்!!.

ஆக்கம் அதிரை முஜீப்.

இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்
முஹம்மத் (ஸல்)
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
நீங்கள் ஒரு நாத்திகராக இருக்கலாம். அல்லது கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாதவராக இருக்கலாம். அல்லது இன்று இவ்வுலகில் நிலவும் பல மதக் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பின் பற்றுபவராக இருக்கலாம். நீங்கள் ஒரு பொதுவுடமை வாதியாகவோ, ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரக் கொள்கையில் ஆர்வம் உள்ளவராகவோ விளங்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களது மதம் மற்றும் அரசியல் கொள்கை எதுவாக இருப்பினும் சரி, உங்களது தனிப்பட்ட மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தாலும் சரியே. நீங்கள் அவசியம் இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இம்மாமனிதரைப் பற்றித்தான் பிரித்தானியக் கலைக்களைஞ்சியம், “மதத் தலைவர்கள் அனைவரிலும் தலைசிறந்த வெற்றியாளர்” என்று புகழ்கிறது. உலகப் புகழ் வாய்ந்த அறிஞர் பெர்னாட்ஷா, “முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இன்று நம்மிடையே இருப்பாரானால், இன்று மானுட நாகரிகத்தையே அழித்திட முனைந்திருக்கும். பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பதில் வெற்றி கண்டிருப்பார்” என்று இம்மாமனிதரைப் போற்றுகிறார்.
உலகில் தோன்றிய மனிதர்கள் அனை வரையும் விட இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் ஒரு அறநெறியைப் போதித்தார். ஓர் அரசை நிறுவினார். ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு நாட்டை உருவாக்கினார். எண்ணற்ற சமூக, அரசியல் மாற்றங்களுக்கு வித்தூன்றினார். நாம் அறிவுறுத்திய கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு வலுவான, நிலையான சமுதாயத்தை நிறுவினார். மனித சிந்தனைகளையும் போக்கையும் புரட்சிமயமாக்கி புதிய சகாப்தத்தை உருவாக்கினார்.
அம்மாமனிதர் தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
ஆம் அவர்கள் தாம் மிகக் குறுகிய காலமாகிய இருபத்தி மூன்று ஆண்டுகளில் மாபெரும் சாதனைகளைப் புரிந்து பலரும் புகழும், பெருமை உடையவரானார்கள். அவர்கள் கி.பி. 571ஆம் ஆண்டு அரேபியா நாட்டில் பிறந்தார்கள். தம்முடைய அறுபத்தி மூன்று ஆண்டு வாழ்வுக் காலத்திற்குள் மக்கள் அனைவரையும் சிலை வணக்கத்தினின்றும் விடுவித்து, ஒரே இறைவனை வணங்கும் உன்னத நிலைக்கு உயர்த்தினார்கள். சூது, மது, மாது ஆகியவற்றில் மூழ்கிக் கிடந்த அம்மக்களை அவற்றினின்றும் நீக்கிப் பண்பும் பக்தியும் உடையோராய் மாற்றினார்கள். சட்டத்தையும் அரசையும் விரும்பாத அவர்களின் வாழ்வை ஒழுங்கும் கட்டுப்பாடும் உடைய வாழ்வாக மாற்றினார்கள். இத்தகைய முழுமையாக சமூக மாற்றத்தை உலக வரலாறு அதற்கு முன்பு கண்டதில்லை, பின்பும் கண்டதில்லை.
நமது காலத்தின் தலைசிறந்த சரித்திர ஆசிரியர் லாமர்டின் மனித மேன்மையின் சிறப்பைக் குறித்து கூறுகிறார்: “உயர்ந்த இலட்சியம், குறைவான் வசதிகள், வியப்பூட்டும் வெற்றி, ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ்மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம். பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயுதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது.
ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களோ போர்ப் படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரச வம்சங்கள், ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக் கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார்கள். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துக்களையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள். நாம் ஏற்றுக் கொண்ட ஒரு கருத்தாக தம்மையே முழுமையாக அர்பணித்துக் கொண்ட அவரது உயர் நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஒர் ஏமாற்றுக்காரர் என்றோ, மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை. மாறாக, சமயக் கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.
இந்த சமயக் கொள்கை இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று, இறைவனின் ஒருமை. மற்றொன்று இறைவனின் ஸ்தூலப் பொருளற்ற தன்மை. முந்தியது இறைவன் என்றால் என்ன வென்று எடுத்துரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லை என்பதைத் தெரிவிக்கின்றது. ஒன்று, தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது. மற்றொன்று பிரச்சார துணையில் ஒரு புதிய கருத்தை உருவாக்க விழைகின்றது.
தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத் தூதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள் நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள், கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரிகத்தை உருவாக்கியளித்த மாமேதை, ஒரே ஆன்மீக தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
(Lamartine, Historie de la Turquie, Paris 1854, Vol II, pp. 276-277)

ஊனம் ஒரு குறையல்ல: பார்வையற்ற பேராசிரியர் அரசு கல்லூரி முதல்வராக நியமனம்



சென்னை, ஜுன் 21   சென்னையைச் சேர்ந்தவர் பேராசிரியர் டாக்டர் கே.எம். பிரபு. பார்வையற்றவரான இவர் ஊனம் ஒரு குறையல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதுடன் தமிழ்நாட்டில் முதல் முறையாக கல்லூரி முதல்வராகி சாதனை படைத்துள்ளார்.
 
டாக்டர் கே.எம். பிரபுவுக்கு பள்ளியில் படிக்கும் போது முதலில் லேசாக பார்வை குறைபாடு ஏற்பட்டது. என்றாலும் சமாளித்துக் கொண்டு பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு முற்றிலும் பார்வை இழந்து விட்டார். இதனால் அவர் மனம் தளர்ந்து விட வில்லை. தொடர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
 
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். பின்னர் பி.எச்.டி. பட்டம் பெற்றார். அவருக்கு பேராசிரியர் வேலை கிடைத்தது.   சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தார்.
 
பின்னர், அரியானாவில் உள்ள பி.பி.எஸ். கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணவர்களின் வசதிக்காக மொழி லேப்களை (ஆய்வகங்கள்) அமைத்தார். இது போன்று மொத்தம் 6 லேப்களை உருவாக்கினார். இந்த மொழி லேப்கள் மூலம், மாணவர்கள் 6 மாதங்களில் ஆங்கில மொழியை சரளமாக பேசும் அளவுக்கு திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
 
தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்த பிரபு, சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவர் பொறுப்பும் வகித்தார். தற்போது இவர் கல்லூரி முதல்வராக பதவி உயர்வு பெற்றார். திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணி நியமணம் செய்யப்பட்டார். அக்கல்லூரியில் நேற்று முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
 
கண் பார்வை இழந்த ஒருவர் தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளது. இதுவே முதல் முறையாகும். இவர் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறார். இதற்கு வசதியாக தனது செல்போனில் நவீன தொழில் நுட்டபங்களையும் பொருத்தி வைத்துள்ளார்.
 
3
ஜி இணைப்பையும் பெற்றுள்ளார். பாட சம்பந்தமான தகவல்கள் சேகரிப்பு உள்ளிட்ட விஷயங்களில், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவருக்கு உதவி வருகின்றனர்.
 
இதுபற்றி, பேராசிரியர் பிரபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
முதலில் சமூகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு முறை செய்தி தாள்களை திறக்கும் போதும், அதில் லஞ்சம், ஊழல், வன்முறை, கொலை, சாவுகள் பற்றிய செய்திகளே அதிகமாக தெரிகின்றன. சமூகத்தில் அனைத்தும் தவறாகப் போய் விட்டதாகவே நாம் கருத வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த சமூதாயத்தில் ஒரு உதாரண குணத்தின் அடையாளமாக நான் திகழ்கிறேன்' என்றார் அவர்.