Wednesday, March 28, 2012

கூடங்குளம் அணு உலை மின்வெட்டு பிரச்சினையைத் தீர்க்காது! முன்னாள் கடற்படைத் தளபதி கூறுகிறார்


கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினாலும் கூட மின்வெட்டு பிரச்சினையை அது தீர்க்காது என இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய ஜப்பானின் சுனாமி மற்றும் புகுஷிமா அணு உலை விபத்து நிகழ்ந்து ஓராண்டு ஆனதையொட்டி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் களமான இடிந்தகரை சென்றபின் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அணு உலை இயக்க தேவைப்படும் மின்சார செலவு மற்றும் மின்கடத்தலினால் வீணாகும் மின்சாரம்தான் கிடைக்கும். இது சென்னை மாநகரின் மின்சாரத் தேவையின் 13 சதவீதத்தை மட்டுமே நிறைவு செய்யும் என்றும் அட்மிரல் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினால் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 48 மணி நேரம்(!) மின்சாரம் தாராளமாகக் கிடைக்கும் என்று நீட்டி முழக்கி பொய்ப் பிரச்சாரம் செய்யும் நாராயணசாமிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
www.tmmk.info

கும்பகோணம் அருகே நாட்டு வெடிகுண்டு புதையல்


காஷ்மீர் தீவிரவாதிகள், தாலிபான் தீவிரவாதிகள், அல்கொய்தா தீவிரவாதிகள், அல்குஸ்கா தீவிரவாதிகள், அல்கபாப் தீவிரவாதிகள் என பல்வேறு தீவிரவாதக் கூட்டங்கள் குறித்து வணிக நோக்கு ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை.
கும்பகோணத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் குறித்து இவர்கள் வழக்கமான பொய்ப் பரப்புரை எழுப்பவே இல்லை. அதற்கு காரணம் என்னவாக இருக்கும்(!) என்பதை செய்தியைக் கூர்ந்து கவனித்தால் புரிந்து விடும்.கும்பகோணத்தை அடுத்த தராசுரம் எலுமிச்சங்கள் பாளையத்தில் கஸ்தூரி என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டில் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட இடம் அக்ரஹாரம் பகுதியாம். இப்போது புரிகிறதா?
www.tmmk.info

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு அமெரிக்கா ஆயத்தம்? இந்தியா கடும் எச்சரிக்கை


ஈரானுக்கு எதிரான தாக்குதல் மேற்காசியாவில் கடும் விளைவுகளை உருவாக்கும் என அமெரிக்காவின் இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் விரேந்திர பால் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கம் மற்றும் இந்தியாவுக்குத் தேவையான எரிபொருள், எண்ணெய் இறக்குமதி போன்றவற்றை சீர்குலைக்கும் விதமாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடுவது இந்தியா மீது ஈரானுக்கு தவறான புரிதல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்திய மக்களின் எரிபொருள் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும் ஈரானுடனான வர்த்தக முடிவில் மேற்குலக நாடுகள் விமர்சிக்கக் கூடாது. இந்தியா சர்வதேச அளவில் ஒரு பொறுப்புமிக்க நாடு. எனவே ஈரானுடனான மோதல் போக்கை நாங்கள் விரும்பவில்லை என்று விரேந்திர பால் தெரிவித்தார்.

 www.tmmk.info

Monday, March 26, 2012

பிரதீபா பாட்டீல்.. 12 வெளிநாட்டு டூர், 22 நாடுகளில் பயணம், செலவு ரூ. 205 கோடி!

டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றது முதல் இதுவரை 22 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசு செலவிட்ட தொகை ரூ. 205 கோடியாகும் என்று ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

மொத்தம் 12 முறை அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளாராம். கடும் முயற்சிகளுக்குப் பின்னர் கிடைத்த ஆர்.டி.ஐ. தகவல்கள் மூலம் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் பிரதீபா பாட்டில். நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. நாட்டின் எந்த குடியரசுத் தலைவரும் வைத்திராத செலவை இவர் நாட்டுக்கு வைத்துள்ளார் என்ற பெருமையையும் தற்போது பெற்றுள்ளார்.

இன்னும் நான்கு மாதங்களில் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ள பிரதீபா பாட்டீல், இதுவரை வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்ட தொகை ரூ. 205 கோடியாகும். இது முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணமாகும்.

குடியரசுத் தலைவருக்கான பிரத்யேக விமானங்களுக்காக மட்டும் ரூ. 169 கோடி செலவிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் போயிங் 747-400 ரக விமானத்தைத்தான் குடியரசுத் தலைவரின் பயணத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர். பாட்டீலுடன் பெரும்பாலும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மொத்தமாக செல்வதுண்டு.

தங்குமிடச் செலவு, வெளிநாடுகளுக்குப் போகும் போது அங்கு உள்ளூர் பயணம், தினசரிப் படி, இதர செலவுகள் என ரூ. 36 கோடி வரை செலவாகியுள்ளதாம்.

குடியரசுத் தலைவருக்கான விமானத்தை ஏர் இந்தியாதான் வழங்கும். இந்த செலவுத் தொகையை மத்திய பாதுகாப்பு அமைச்சகமே வழங்குகிறது.

ஏர் இந்தியா நிறுவனம் இதுவரை பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து விமான செலவாக ரூ. 169 கோடியை வசூலித்துள்ளது. இன்னும் ரூ. 16 கோடிக்கு பில் பாஸாகாமல் உள்ளதாம்.

குடியரசுத் தலைவர் இதுவரை பிரேசில், மெக்சிகோ, சிலி, பூட்டான், வியட்நாம், இந்தோனேசியா, ஸ்பெயின், போலந்து, ரஷ்யா, தஜிகிஸ்தான், இங்கிலாந்து, சைப்ரஸ், சீனா, லாவோஸ், கம்போடியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிரியா, மொரீஷியஸ், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் போயுள்ளார். மொத்தம் 79 நாட்கள் அவர் வெளிநாடுகளில் கழித்துள்ளார்.

விரைவில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்குப் போகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிந்றன.

அவருக்கு முன்பு குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், 17 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். 7 முறை சுற்றுப்பயணம் போயுள்ளார். அவருக்கு முன்பு இருந்த கே.ஆர்.நாராயணன், 10 நாடுகளில் 6 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். சங்கர் தயாள் சர்மா இருந்தபோது 4 பயணமாக 16 நாடுகளுக்குப் போய் வந்தார்.

இவர்களின் பயணச் செலவு குறித்த விவரத்தை தெரிவிக்கவில்லை மத்திய அரசு. இருப்பினும் இவர்களுக்கு ஆன செலவை விட பல மடங்கு செலவு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பயணங்களுக்கு ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
www.thatstamil.com

Sunday, March 25, 2012

சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் வீழ்ந்தது; பாஜக மூழ்கிப் போனது


கடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளைப் பொறுத்தவரை, வர்த்தக நோக்கு ஊடகங்கள் பொதுமையான அளவு நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை என்பது ஆதாரப்பூர்வமாக வெளிப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் காங்கிரஸின் தோல்வி குறித்து கருத்து வெளியிடும் ஊடகங்கள் காங்கிரஸையும், பாஜகவையும் ஒரே தட்டில் வைத்தோ அல்லது காங்கிரஸை பாஜகவை விட கீழிறக்கியோ கொச்சைப்படுத்துவதைத் தொடர்கிறார்கள்.
உண்மையில், சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் நான்கில் காங்கிரஸ் தனது நிலையை மேம்படுத்தியுள்ளது என்பதே உண்மை. ஆனால் பாஜக தனது நிலையை விட்டு கீழிறங்கியுள்ளதை முடிவுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இது காங்கிரஸ் வட்டாரத்தில் சற்றே நிம்மதியையும் திருப்தியையும் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் பல ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியின் சிறிய நிம்மதியைக்கூட குலைக்கும் வண்ணம் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
ஹிந்துத்துவாவின் கொள்கைகள் செம்மையாக மரண அடி வாங்கியிருக்கும் முக்கிய திருப்பம் வழக்கம்போல் மறக்கடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலின் முடிவுகள் 2014ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவு சீட்டுகளைப் பெறலாம் என பாஜக கண்டிருந்த கனவுகள் கலைந்து விடுமோ என்ற அச்சத்தில் இட்டுச் சென்றுள்ளது.
முந்தையத் தேர்தல்களில் ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து பாரதீய ஜனதா 119சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. ஆனால் அண்மையில் 2012ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வென்ற தொகுதிகள் 113. மொத்தத்தில் 6 இடங்களை பாஜக இழந்தது. ஆனால் காங்கிரஸ், முந்தைய தேர்தல்களில் ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து 133இடங்களைப் பெற்ற நிலையில் அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் 133ல் இருந்து எகிறி 157 இடங்களைப் பெற்றுள்ளது.பாஜகவை விட காங்கிரஸ் 44 இடங்கள் அதிகம் பெற்றுள் ளது. ஆனால் இந்த உண்மைத் தகவல்களை மீடியாக்களும் உரைப்பதில்லை. ஒலிபெருக்கி களின் முன்பு வீர முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சாம்பியன்களும் பிரபலப்படுத்தவில்லை என்பதுதான் சோகமான நகைச்சுவை.காங்கிரஸ் கதை முடிந்துவிட்டது என நீட்டி முழக்கும் புண்ணியவான்கள் பாஜகவைப் பற்றி மூச்சே விடுவதில்லை.
உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், தலித் சமூகத்தினரின் வாக்குகளைப் பெருமளவு காங்கிரஸ் இழந்திருந்தும் கூட கடந்த தேர்தலில் பெற்ற 22 இடங்களைவிட கூடுதலாக 6இடங்களைப் பெற்றது. ஆனால் பாஜக 51ல் இருந்து 47 ஆக இறங்கியது.சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் புண்ணியத்தில் பஞ்சாபில் கூட்டணி ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருந்தாலும் பாஜக இதில் பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை.2007ல் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 19 இடங்களைப் பெற்ற பாஜக, 2012ஆம் ஆண்டில் 12 இடங்களையே பெற்றது. அகாலிதளம் கடந்த தேர்தலில் பெற்ற 49 தொகுதிகளை விட அதிகமாக ஏழு இடங்களைப் பெற்று 56 இடங்களில் வென்றது. பாஜக, சிரோன்மணி அகாலிதளம் தயவில் அதிகாரத்தை சுவைக்கிறது.
அதே சமயம் 2007 தேர்தலில் 44 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் தற்போது 46 இடங்களைப் பெற்றுள்ளது. உத்தர்கண்டில் காங்கிரஸ் 2007 சட்டமன்றத் தேர்தலில் 21 இடங்களில் வென்றது. தற்போது 32 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் கடந்த தேர்தலில் 35 இடங்களைப் பெற்ற பாஜக தற்போது 31 இடங்களில் வென்று நான்கு இடங்களைப் பறிகொடுத்துள்ளது.மணிப்பூரைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 60 தொகுதிகளில் கடந்த முறை காங்கிரஸ் வென்ற தொகுதிகள் 30. ஆனால் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் 42 இடங்களைப் பெற்றுள்ளது.
இவ்வாறு காங்கிரஸ் பல படிகளில் உயரத்தை தொட்டிருந்தும், ஐந்து மாநில சட்டமன்ற முடிவுகளைக் குறிப்பிடும் வர்த்தக நோக்கு ஊடகங்கள் எல்லாம் காங்கிரஸை கரித்துக்கொட்டி பாஜகவை இதமாக முதுகைத் தட்டுவதன் மர்மம் என்ன?
--ஹபீபா பாலன்
 www.tmmk.info

இந்தியாவின் கருப்பு பட்டியலில் இஸ்ரேலிய நிறுவனம்


இந்தியாவும் இஸ்ரேலும் ராணுவ ரீதியிலும், அரசியல் தொடர்புகளிலும் அதீத நெருக்கம் காட்டி கொஞ்சி குலாவிவரும் நிலையில் இஸ்ரேலின் ராணுவத் தளவாட தொழிற்சாலை இந்திய அரசின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஒப்பந்தங்களைப் பெற கையூட்டு உள்ளிட்ட முறைகேடான விவகாரங்களில் ஈடுபட்டதைக் கண்டு வெறுத்துப்போன நிலையில் மத்திய அரசு இந்த அதிரடி முடிவினை எடுத்துள்ளது.தெளிவான ஆதாரங்கள் கிடைத்ததால் இந்த முடிவு எடுத்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தரைப்படை, வான்படை, கடற்படை அனைத்திற்கும் தேவையான ஆயுதங்களை வழங்கும் இஸ்ரேலிய ராணுவத் தொழிற்சாலை இஸ்ரேலிய அரசு சார்புடையதாகும்.இந்தத் தகவலை சிபிஐயும் உறுதி செய்துள்ளது. போலி ஏவுகணைகள், வெடிக்காத ராணுவத் தளவாடங்கள் போன்றவற்றை இஸ்ரேல் முன்பு இந்தியாவிற்கு விநியோகம் செய்து ஏமாற்றியது நினைவிருக்கலாம்
www.tmmk.info

முட்டையிடும் சீன மனிதர்கள்! China produces fake eggs



fake-egg4.jpg
வேறு வழி இல்லை இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கு தலைப்பிட வேண்டும்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.
fake-egg1.jpg
போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.
fake-egg2.jpg
இந்தப் படத்தில் போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள்  வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளை ப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.
fake-egg3.jpg
ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.
fake-egg4.jpg
மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள்  உதவியால் வெள்ளைக்கரு  உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.
fake-egg5.jpg
பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை.
fake-egg6.jpg
பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.
fake-egg7.jpg
நிஜ முட்டையும் போலி முட்டையும்.
நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாகப் பேச்சு. ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.
fake-egg8.jpg
போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.
ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள்.
உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள்  எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Monday, March 19, 2012

தமிழ்நாட்டில் மின் வெட்டும்-மின் கட்டண உயர்வும் -திரை மறைவு உண்மைகள்.


 

தமிழ்நாட்டில் மின் வெட்டும்-மின் கட்டண உயர்வும் தேவை இல்லாமல் வருகிறது.
ஒரு பொறியாளரின் அலசல்.
கடுமையான மின்வெட்டில் சிக்கித் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் கொந்தளித்துப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் நெருக்கடி காலத்திற்கான அவசர உதவியாகக் கூட இந்திய அரசு தனது உடைமையாக உள்ள நெய்வேலி மின் நிலையத்திலிருந்து மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க முன்வரவில்லை. இன்னொரு பக்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் விற்றுவரும் சில தனியார் நிறுவனங்கள் மின்சாரம் வழங்காமல் முடக்கிப்போட்டுள்ளன. இவற்றின் விளைவாக தமிழ்நாடு இருட்டில் அமிழ்ந் துள்ளது.

கடுமையான மின்வெட்டு இருக்கும் இந்த நிலையில் கூட மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது பற்றி கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
மின்வெட்டை நீக்கி மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கத் திராணியற்ற தமிழக அரசு 9741 கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வைக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனுப் போட்டுள்ளது. கேட்டால் 53,300 கோடி ரூபாய் இழப்பில் சிக்கி மின்சார வாரியம் மரணப்படுக்கையில் கிடக்கிறது என சட்ட மன்றத்தில் அறிக்கை படிக்கிறார் முதலமைச்சர் செயலலிதா.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இவ்வளவு கடன் சுமை உயர முதன்மைக் காரணம் எது? இவ்வினாவிற்கு விடையளிப்பதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.
தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக அரசு நிறுவனமாகும். மின்சார வாரியம் தனது மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்த மின்சாரம், நெய்வேலி நிறுவனம் மற்றும் இந்திய அரசு தொகுப்பிலிருந்து பெறப்பட்ட மின்சாரம் ஆகியவற்றை வழங்கி வந்தது. உற்பத்தி செலவை விட பெரும்பாலான மக்களுக்கு விலை குறைவாக மின்சாரம் வழங்கியதால் அது ஓரளவு இழப்பை சந்தித்தது.
ஆயினும் பெரிய நிறுவனங்களுக்கும் வணிக வளாகங்களுக்கும் கூடுதல் கட்டணம் விதித்து பெற்ற நிதியை வீடு களுக்கும் வேளாண்மைக்கும் குறைந்த கட்டணத்திற்கு மின் சாரம் வழங்கப் பயன்படுத்திக் கொண்டது. சேவைத் துறை என்ற முறையில் ஆண்டு தோறும் ஏற்பட்ட இந்த இழப்பு 2002 ஆம் ஆண்டு 1970 கோடி ரூபாய் என்ற அளவை எட்டிய போது இத்தொகையை தமிழக அரசு மின்சார வாரியத்திற்கான கடன் பத்திரமாக மாற்றி சரி செய்தது. இந்த கடன் தொகை யையும் மின்சார வாரியம் பின்னர் அடைத்து விட்டது.
ஆனால் அதற்கு பத்தாண்டு களுக்கு முன்பு பிரதமராக பி.வி. நரசிம்மராவாவும் நிதியமைச் சராக மன்மோகன் சிங்கும் பதவி வகித்த காலத்தில் புதியப் பொரு ளாதாரக் கொள்கை என்ற பெயரில் அறிமுகப் படுத்திய தனியார்மய- தாராள மயக் கொள்கை மின்சாரத் துறையையும் தாக்கியது. மின் சாரத்துறையை தனியார் முதலா ளிகளின் கைகளுக்கு மாற்றி விடும் திட்டம் தலையெடுத்து வேக மாகப் பரவியது.
1994 ஆம் ஆண்டிற்கு பிறகு மின்சார வாரியங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங் குவதை இந்திய அரசு அனு மதிக்க வில்லை. அரசின் மின் வாரியங்கள் மின் உற்பத்தி நிலையங்களை தொடங்க வேண்டுமென்றால் நடுவண் மின்சார ஆணையத்திடம் (CENTRAL ELETRICITY AUTHORITY) முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஆணையம் அரசு மின் உற்பத்தி நிலையங்களுக்கு எல்லா வகையிலும் தடை ஏற்படுத்தி வந்தது. அதே நேரம் அரசின் தனியார்மயக் கொள் கை தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஊக்குவிப்பு வழங்கியது. இதற்கேற்ப மின் வழங்கல் சட்டத்தில் 1994 ஆம் ஆண்டு திருத்தங்கள் செய்யப் பட்டன.
இந்திய அரசு 2003 ஆம் ஆண்டு கொண்டு வந்த மின்சாரச் சட்டம், மின்சாரக் கட்டணம் நிர்ணயிப் பது தொடர்பாக மாநில அரசுக்கு இருந்த அதிகாரத்தை பறித்து இந்திய அரசின் கட்டுப் பாட்டில் அமைந்த மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஒப்படைத்தது. தமிழக அரசு மின் கட்டணத்தைத் தானே தீர்மா னிக்க முடியாது, தனது தேவையை இவ்வாணையத் திடம் கோரி அதன் ஆணைக் கேற்ப மின் கட்டணம் தீர்மா னிக்கப்படவேண்டும். இந்த மின்சாரச் சட்டம் மாநில அரசுகள் வழங்கி வந்த எளியோருக்கான மானியத்தை குறைக்க வேண்டு மென்று வலியுறுத்தியது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் இக்கொள் கையை செயல் படுத்தும் அமைப்பாக விளங் கியது.

இந்திய அரசின் தனியார் மயக் கொள்கை, மேற்கண்ட சட்ட ஏற்பாடுகள் வழியாக மின்சாரத்துறையில் நிலை நிறுத்தப்பட்ட பிறகுதான் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு பல மடங்காக உயர்ந் தது. அரசுத் துறை நிறுவனமான மின்வாரியம் தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்துகொள்ள முடியாமல் முடக்கப்பட்டது. மறுபுறம் மின்சாரத் தேவைகள் மிக வேகமாக அதிகரித்தன. இதனை ஈடுகட்ட தனியார் மின் உற்பத்திக் குழுமங்களிடம் அவர் கள் சொல்லும் விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் உள்ளாக்கப் பட்டது.
பெரிதும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து காசு கொடுத்து மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு வழங்கும் முகமை நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியம் மாறிப் போனது.
தனியார் மின் உற்பத்திக¢ குழு மங்களிடம் மின்சாரம் வாங்குவதற்த் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் பெரு மளவுக்கு மின்வாரியப் பணத்தை தனியாருக்கு வாரி வழங்குவதற்கு ஏற்ற வகை யிலேயே அமைந்தது. இவற் றிடம் மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங் கியது மட்டுமின்றி , மின்சாரம் உற்பத்தி செய்யாமல், வழங் காமல் சும்மா இருந்த காலத் துக்கும் நிலைக்கட்டணம் என்ற பெயரால் பல நூறு கோடி ரூபாயை மின்வாரியம் கொட்டிக் கொடுத்தது. ஒரு தனியார் மின் உற்பத்தி நிலையம் மின் உற்பத்திக்கு அணியமாக இருப் பதாக ஒப்பந்தம் ஆகி விட் டாலே போதும், உற்பத்தி செய்யாத காலத்திற்கும் ஒரு நாளைக்கு ஏறத்தாழ ஒருகோடி ரூபாய் அந்நிறுவனத்திற்கு மின் வாரி யம் அழவேண்டும்.
எடுத்துக்காட்டாக நாகை மாவட்டம் சீர்காழி அருகி லுள்ள பிள்ளைப்பெருமாள் நல்லூரில் ஆந்திராவின் டாக்டர் சி.பிரதாப்ரெட்டி குழுமத் திற்கு மின் உற்பத்தி நிலையம் அமைத்துக்கொள்ள இசைவு வழங்கப்பட்டது. பிள்ளைப் பெருமாள் நல்லூர் மின் உற் பத்திக் குழுமம் என்ற பெயரா லேயே பிரதாப் ரெட்டி குழுமத் தினர் அந்நிலையத்தை நிறு வினர். ரெட்டி லேப்ஸ், அப்பல் லோ மருத்துவமனை ஆகியவற் றின் முதலாளிதான் இந்த பிரதாப்ரெட்டி.
இந்த பிபிஎன் நிறுவனத் திடமிருந்து ஒரு யூனிட் 17 ரூபாய் 80 காசுக்கு மின்சாரம் வாங்குகிறது தமிழக அரசு. மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிலையங்களில் 1 யூனிட் உற்பத்தி விலை 2 ரூபாய் 15 காசு என்பதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கொள்ளை யின் அளவு புரியும்.
கடந்த ஆண்டு முழுவதும் இந்நிறுவனம் மின்சார வாரியத் திற்கு விற்றது 24.4 கோடி யூனிட் மின்சாரம். ஒப்பந்தபடி இந்த மின்சாரம் 35 நாள்கள் உற்பத்திக்குச் சமமானது
எஞ்சிய 330 நாள்களுக்கு இந்த நிலையம் உற்பத்தியே செய்ய வில்லை என்றாகிறது. ஆயினும் சும்மா இருந்த நாள்களுக்கு நிலைக் கட்டணமாக 330.04 கோடி ரூபாயைத் தட்டிச் சென்றது.
இது போல் ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 1006 கோடி ரூபாயை உற்பத்தி இல்லாத காலங்களுக்கு நிலைக் கட்டண மாக மின்சார வாரியம் வழங்கி யுள்ளது.
ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், முடைக் காலத்தில் வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களிடம் அவ்வப்போது வாங்கிக் கொண் டதற்கும் மட்டும் கடந்த ஆண்டு 8884.4 கோடி ரூபாய் மின்வாரியம் வழங்கியிருக் கிறது.
 கடந்த ஆண்டு மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்ட தாகக் கூறினார். மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை கட்டுப் படுத்தியிருந்தாலே இந்த இழப் பில் ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபாயைக் குறைத்திருக்க முடி யும்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் மின்சாரத் தீர்ப் பாயமும் எவ்வாறு தனியார் நிறுவ னங்களின் கொள்ளைக் குத் துணைபோய் மின் வாரியத் தை கடன் சேற்றில் சிக்க வைக் கின்றன என்பதற்கு ஓர் எடுத் துக்காட்டைப் பார்க்கலாம்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2010 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்திய போது பன்னாட்டு வடநாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறு வனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.80 முதல் ரூ.2.50 வரை கட்டணச் சலுகை வழங்கி அறிவித்தது. இவ்வாறு கட்டணச்சலுகை வழங்குமாறு தமிழக அரசும் கோரவில்லை; அந்த நிறுவ னங்களும் கோரவில்லை. மக்கள் கருத்தும் கோரப்படவில்லை. தானடித்த மூப்பாக தகவல் தொழில்நுட்பக் குழுமங்களுக்கு இக்கட்டணச்சலுகையை வாரி வழங்கியது ஆணையம்.
ஒழுங்குமுறை ஆணையம் தான் இவ்வாறு என்றால் மின்சாரக் கட்டணம் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரிக்கும் உச்ச அமைப்பான மின்சாரத் தீர்ப்பாயமும் அதற்கு மேல் இருக்கிறது. பிரதாப் ரெட்டியின் பிபிஎன் நிறுவனம் தனக்கு மின்சார வாரியத் திலிருந்து 189 கோடி ரூபாய் பணம் நிலுவையுள்ளது என வழக்குத் தொடர்ந்தது. அவ் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பிபிஎன் குழுமம் கேட்டதை விடப் பல மடங்கு அதிகமாக இழப் பீட்டை கணக்கிட்டு ரூ 1050 கோடி வழங்குமாறு மின்சார வாரியத்திற்கு ஆணை யிட்டது.
இப்போதும் பிபிஎன் உள் ளிட்ட நான்கு தனியார் நிறு வனங்கள் மின்சாரம் வழங்கு வதை நிறுத்தி வைத்திருப்பதால் மின்வெட்டு இன்னும் கூடுதல் ஆகிறது.
இது இப்போதைய இருண்ட தமிழகத்தின் வரைபடம்தான்.
இந்திய அரசு திணித்து தமிழக அரசு ஏற்றுக்கொண்ட தனியார்மயம் தமிழ்நாட்டு மின்சாரத்துறையில் திரும்பியப் பக்கமெல்லாம் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. தனியார் நிறுவனங்களுக்கு நியாயமே இன்றி மின்உற்பத்தியும் மின் வழங்களும் இல்லாத காலத் திலும் ஆண்டுதோறும் வழங்கப் படும் நிலைக் கட்டணமான ரூபாய் 1000 கோடியை நிறுத்தி வைத்து மின்சார வாரியம் மின்உற்பத்தி நிலையங்களை நிறுவியிருந்தால் கடந்த பத் தாண்டுகளில் அரசுத் துறையில் 9000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை கூட்டி யிருக்க முடியும்.
தேவையற்ற - நியாயமற்ற தனியார் கொள்ளையை மின்சாரத் துறையில் அனுமதித்துவிட்டு அதில் ஏற்படும் இழப்பை மக்கள் தலையில் கட்டுவது எந்த வகையில் ஏற்கத்தக்கது-?
மக்களில் சிலர் நினைப்பது போல் உழவர்களுக்கு வழங்கும் விலை யில்லா மின்சாரமோ, நெச வாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த கட்டண மின் சாரமோ மின் வாரிய இழப் பிற்குக் காரணமல்ல. தனியார் கொள்ளையே காரணம்.
தமிழ்நாடு மின்சாரத் துறையை தனியார் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு அரசுத் துறையை ஓங்கச்செய்வதே தாறுமாறான மின் கட்டண உயர்விலிருந்து மக்கள் தப்பிப்பதற்கு உள்ள ஒரே வழி ஆகும்.
                                                                                                                       -பொறியாளர்,சா.காந்தி
_நன்றி:"கீற்று"

Sunday, March 18, 2012

Saudi Gazette : New traffic points system coming up



RIYADH – The General Administration of Traffic is to introduce a Traffic Violations Points System next Hijri year (mid November) which could see motorists get suspensions of three months to a year, a lifetime ban and imprisonment.

The points system will be initially enforced in Jeddah and Riyadh, according to a traffic official quoted Saturday in the Arabic press.

Drivers will be given copies of their points record every time they go to the traffic department to pay their fines.
When a driver gets 18 points in one year, his license will be suspended for three months, he will be imprisoned for seven days and fined SR300. If he gets the same number of points a second time in one year, his license will be suspended for six months, he will be jailed for a fortnight, pay a fine of SR600 and attend a rehabilitation program for one week. If a driver commits a third such offense, his license will be suspended for one year, he will be jailed for two weeks, fined SR900 and have to attend rehabilitation classes for two weeks. If a driver gets 18 points a fourth time in one year, he will be banned forever from the Kingdom’s roads.

Points for violations are cancelled at the start of every year.

The traffic official added that drivers will also be awarded special points for driving safely. Two safety points will be awarded for each driver who does not commit a traffic violation in one year. – SG

  • Points for violationsn Driving under the influence of alcohol, drugs and certain medicines – 24 points
  • Hot rodding – 24 points
  • Crossing a signal light - 12 points
  • Driving in the wrong direction – 12 points
  • Moving fast and recklessly between vehicles on public roads – 8 points
  • Not following the hand signals of a traffic officer – 8 points
  • Driving a car without brakes and lights – 8 points
  • Not following traffic rules in a roundabout – 6 points
  • Exceeding the speed limit by more than 25 kilometers an hour – 4 points
  • Overtaking school buses when they stop to let students get on or get off 4 points
  • Not fastening safety belts – 2 points
  • Using mobile phones while driving – 2 points
  • Stopping on railway tracks – 6 points
  • Transporting uncovered loads - 4 points
  • Not stopping completely at stop signals – 6 points

கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சாதனைகள் (படங்கள் + வீடியோ) - சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்


வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல.

சர்வதேச சமூகமும்இ மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.

இந்நிலையில்தான் இன்று புதன்கிழமை பிரிட்டனில் இருந்து செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாககூறி சில ஆவணப்படங்களை காண்பிக்கவுள்ளது.

முஸ்லிம்களாகிய நாமும் சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதப் புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களையும்இ போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் குதிக்கவேண்டும். புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களை உங்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட ஏனைய இணையத் தளங்களிலும் பதிவுசெய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்..!!


இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.

'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்'
இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14இ844. 

யாழ்ப்பாணம்இ முல்லைத்தீவுஇ வவுனியாஇ மன்னார்இ கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள்இ முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். 

முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சிஇ மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். 

அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.

இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர்இ பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள்இ 36 பேர் பெண்கள்இ 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறைஇ முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறைஇ அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர். 

இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம்இ அநுராதபுரம்இ குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.





















நன்றி : யாழ் முஸ்லிம்