Sunday, February 27, 2011

போராட்டத்தில் ஈடுபடுபடும் மக்களுக்கு பாதுகாப்பளிக்க யெமன் அதிபர் ஸாலிஹ் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபடுபடும் மக்களுக்கு பாதுகாப்பளிக்க யெமன் அதிபர் ஸாலிஹ் உத்தரவு

ஸன்ஆ,பிப்.25:ஜனநாயக ரீதியிலான போராட்டம் நடத்தும் மக்களுக்கு
பாதுகாப்பளிக்குமாறு ராணுவத்திற்கு அந்நாட்டு ஏகாதிபத்திய அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் உத்தரவிட்டுள்ளார்.

32 வருடங்களாக ஆட்சியில் தொடரும் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யக்கோரி மூன்று வாரங்களாக தொடரும் போராட்டத்தில் 15பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிபரின் கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து நெருக்கடியில் சிக்கியுள்ள ஸாலிஹ் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரசு ஆதரவாளர்களும், எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களும் மோதலில் ஈடுபடுவதை தவிர்க்கவும் ராணுவத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மீது தாக்குதல் நடத்த முயல்பவர்கள் மக்கள் நடத்தும் பேரணிகளில் நுழைவதற்கு வாய்ப்புள்ளதுக் குறித்து போராட்டத்தில் ஈடுபடுவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும், கருத்து சுதந்திரத்தை வெளியிட அமைதியான முறையில் குடிமக்கள் ஒன்று கூடுவதற்கு அரசு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தும் எனவும் ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஸாலிஹ் உடனடியாக தேர்தலை அறிவிக்க வேண்டுமென சுற்றுலாத்துறை அமைச்சர் நபீல் அல் ஃபாகி வலியுறுத்தியுள்ளார்.

துனீசியாவிலும், எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு நிகழ்ந்தது யெமனில் நிகழாமலிருக்க இந்த ஆண்டே தேர்தலை நடத்தவேண்டுமென அவர் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment