Wednesday, June 20, 2012

பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்!


தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம்.
அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்சுமந்திருந்துசிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள்.
அவனை (கர்ப்பத்தில்சுமந்திருந்ததும்அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும்.
முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்துநாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது,
'என்னுடைய ரப்பே(இறைவனே)நீ எனக்கும்எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு 
நான் நன்றி செலுத்துவதற்கும்நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும்,எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாகயாகஎன் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக
நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்துமீண்டு விட்டேன்நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற)முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)
 
சதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் 
சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து 
தனது இடுங்கியக் கண்களால் திருமறை குர்ஆனை படித்துக் கொண்டிருக்கிறார்நன்கு படித்துபெரிய பதவியில் இருக்கும் 
45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக்கொண்டிருக்கிறார்.

திடீரென
 ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது
'
என்ன இது?' என்று கேட்டார் முதியவர்.

லேப்
-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், 'அது ஒரு காகம்
சில
 நிமிடங்கள் கழிந்தனஅந்த முதியவர் மீண்டும் கேட்டார், 'என்ன இது?'

'
இப்பத்தானே சொன்னேன்அது ஒரு காகம்என்றார் மகன்
சிறிது
 நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், 'என்ன இது?'

சற்று
 எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், 'அது ஒரு காகம்காகம்!'
இன்னும்
 சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், 'என்ன இது?'

மகனோ
 பொறுமையை இழந்து விட்டார்தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், 'அதே கேள்வியை 
ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்கஎத்தனை முறைதான் பதில் சொல்வது, 'அது ஒரு காகம்என்று?இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?'
முதுமை 
அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோதந்தையின் முகத்தில் 
எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லைஅவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை படித்துக் கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார்அவரது கையில் 
மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது
 அந்தத் தந்தையின் நாட்குறிப்புதன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார்.அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப்
 பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
'
எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது.
என் மகன் 'அது என்னஎன்று 23 தடவைகள் கேட்டான். 'அது ஒரு காகம்என்று நான் 23தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் 
நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன்.
 
அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லைஅதற்குமாறாக,கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது'. இதைப் படித்த 
மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த 
தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.
 
திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.
(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்)
தாய்தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான்.
அவர்களில் ஒருவரோஅல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் 
உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம்அவர்களை (நிந்தனையாக)ச் 'சீஎன்று சொல்லவும் வேண்டாம்.
அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்திமிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.
அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக
அன்றிஎன் இறைவனேநான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாகஎன்னை அவர்கள் வளர்த்துபரிபாலித்த பிரகாரமே,
நீயும் அவ்விருவர் மீதும்அன்பும் அருளும் புரிவாயாகஎன்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)
 
தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம்.
அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்சுமந்திருந்துசிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள்.
அவனை (கர்ப்பத்தில்சுமந்திருந்ததும்அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும்.
முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்துநாற்பது ஆண்டு களை அவன் அடைந்திட்ட பொழுது,
'என்னுடைய ரப்பே!நீ எனக்கும்எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும்,நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும்எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக
என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக
நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்துமீண்டு விட்டேன்நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற)முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

No comments:

Post a Comment