Thursday, July 7, 2011

திருவிடைமருதூரில் ஜூலை 13-ல் மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சாவூர், ஜூலை 6: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் மக்கள் நேர்காணல் முகாம் ஜூலை 13-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர் குறிச்சியில் ஜூலை 13-ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறவுள்ளது.
இதில் குறைகளைத் தெரிவிக்க விரும்புவோர், தக்களது குறைகளை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் மனுக்களாக அளிக்கலாம். மேலும், பட்டா மாறுதல் சான்று, இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவைகள் உதவித் தொகை திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை திட்டம் போன்றவற்றில் பயன்பெற தகுதியானவர்களும் தங்களது மனுக்களை முன்கூட்டியே அளித்துப் பயன் பெறலாம் என்றார் அவர்.
dinamani

No comments:

Post a Comment