Thursday, July 7, 2011

விசாரணைக்கு வருமாறு சன் பிக்சர்ஸ் தலைமை நிதி அதிகாரிக்கு சென்னை போலீஸ் சம்மன்Connect with

சென்னை: சன் பிக்சர்ஸ் நிறுவன தலைமை நிதி அதிகாரி உன்னி கிருஷ்ணனை விசாரணைக்கு வருமாறு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாகம் குறித்த தகவல்களைத் தாக்கல் செய்யுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்றே உன்னிகிருஷ்ணன் நேரில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவை போலீஸார் கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற விநியோகஸ்தர், சக்ஸேனா தன்னிடம் ரூ. 82.63 லட்சம் அளவுக்கு மோசடி செய்து விட்டதாக புகார் கூறியிருந்தார். அதன் பேரில் சக்ஸேனா கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து நேற்று சக்ஸேனாவின் கூட்டாளிகளான அய்யப்பன் மற்றும் தம்பித்துரை ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

இந்த நிலையில் தலைமை நிதி அதிகாரிக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Thatstamil

No comments:

Post a Comment