Sunday, May 29, 2011

நேரடி 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, மே 20: நேரடி இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது.

 பிளஸ் 2 -ல் தொழில் பிரிவு படித்தவர்கள் அல்லது 10-ம் வகுப்பு முடித்து இரண்டு ஆண்டு ஐடிஐ படித்தவர்கள், பாலிடெக்னிக்குகளில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

 இந்த சேர்க்கை நடைமுறைகளை, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. 2011-12-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இப்போது தொடங்கியுள்ளது.

 மே 25-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 விண்ணப்ப படிவம், விவரங்களை www.tndte.com இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Thanks Dinamani

No comments:

Post a Comment