Wednesday, May 11, 2011

புதிய பராசக்தி


r1.jpg

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.
2G யில் ஊழல் செய்தேன் .1,76,000 கோடி கொள்ளை அடித்தேன் . குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. 
2G யில் ஊழல் செய்தேன் .2G கூடாது என்பதற்காக அல்ல. தொலைதொடர்பு துறை  கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. 1,76,00கோடி கொள்ளை அடித்தேன் . நான் வசதியாக வாழ அல்ல. அந்த பணம் கொள்ளையர்கள் கைக்கு போக கூடாது என்பதற்காக .
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே பெரம்பலூரிலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு மாநிலம்  பிழைக்க ஒரு மாநிலம் . தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? டெல்லி ! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. பெரம்பலூரில்  இருந்த என் நண்பனை காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி கனிமொழி , இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் திகார் ஜெயிலில் கிடக்கிறேன் .
காண வந்த நண்பனை  கண்டேன். உயிரற்ற  ஓவியமாக. ஆம்  நண்பனின்  பெயரோ சாதிக் . மங்களகரமான பெயர். ஆனால் உடலிலே உயிரில்லை  செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். சாதிக்  அலைந்தான் . சாதிக்கிற்காக நான் அலைந்தேன்.
சாதிகிர்க்கு  கருணை காட்டினர் பலர். அவர்களிலே சில கேடிகள் பல கோடிகள்  கேட்டனர். 
– பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். சாதிக் உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பான் . அவனைத்  தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த கருணாநிதி தான். 

பகட்டு என் நண்பனை  மிரட்டியது. பயந்து ஓடினான் . பணம் என்  நண்பனை  துரத்தியது. மீண்டும் 
ஓடினான் . C.B.I என்  நண்பனைபயமுறுத்தியது. ஓடினான்  ஓடினான்   வாழ்க்கையின் ஓரத்திற்கே
ஓடினான் . அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என்  சாதிக்கை ?
அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.
ராசா : யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் நண்பனின்  வழக்கு. நண்பனின் உயிரை  அழிக்க எண்ணிய கருணாநிதிக்கு  புத்தி புகட்ட நான்  ஓடுவதில் என்ன தவறு? சாதிக்  தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம்.  நான் 1,76000கோடி கொள்ளை அடித்தது து ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? என்னை  இப்படி அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டம் தி .மு .க வை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கட்சியின் பெயரால் கொள்ளை அடிக்கும்  போலி அரசியல்வாதிகளை  நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? 
இக்குற்றங்கள் களையப்படும் வரை ராசாக்களும் ளும், கனிமொழிகளும் ளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்

--
sahul
Dubai
+971504753730

No comments:

Post a Comment