Monday, May 23, 2011

ஈழத் தமிழர் பிரச்சினையில் எம்பிக்கள் ராஜினாமா கருணாநிதி நடத்திய நாடகம் - தயாநிதி மாறன்

ஈழத் தமிழர் பிரச்சினையில் 2008ல் எம்.பிக்கள் ராஜினாமா என்று கருணாநிதி எடுத்த முடிவு மின்வெட்டு, பெருகி வரும் மக்கள் எதிர்ப்பிலிருந்து கவனத்தை திசை திருப்ப நடத்திய ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன், அமேரிக்க துணைத் தூதரிடம் தயாநிதி மாறன் கருத்து தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் கேபிள்களை வெளியிட்டுள்ள இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.   அந்த ராஜினாமா, சோனியா காந்தியை மிரட்டுவதற்காகவும் என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.  இதை காங்கிரஸ் மனதில் வைத்துக் கொண்டு, உரிய நேரத்தில் பழி தீர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  கருணாநிதியின் இலவச திட்டங்களையும் மாறன் குறை கூறியிருக்கிறார்.   இது கேடி சகோதரர்கள் மேல் விழுந்த முதல் அடி.   அல்லற்பட்டு ஆற்றாது அழுத ஈழ மக்களின் கண்ணீர் கேடி சகோதரர்களின் செல்வத்தையும் தேய்க்கும் படை அல்லவா ?

savukku

No comments:

Post a Comment