Monday, May 23, 2011

முதியோர் இல்லம்

அழுது புலம்பும்
பிரசவத்தில்;அரை மயக்கத்திலும் உன் அழும் குரலுக்கு
ஆனந்தமாய் நான் அன்று!
பாலுக்கு ஏங்கி
உன் சிவந்த
இதழ்கள் இரண்டும் பிதிங்கியதைக் கண்டு;மனம் பதுங்கியக்
காலம் அன்று!
பள்ளிக்கு முரண்டுப் பிடிக்கும்
உன் பாதம் இரண்டையும் பக்குவமாய் திருப்பியக் காலம் அன்று!
நீ மெத்தப் படிக்க ஒத்த வீட்டையும்
விற்றுத் தீர்த்து;உன் படிப்பிற்குத் தீணியானது அன்று!
தனியாய் நடைப்போடும்
உனக்குத் துணைத்தேடி;விழி சிலிர்க்கும் இணையை உன் கரம் சேர்த்தேன் அன்று!
இன்று துவண்டுப்போன இளமையால்;முட்டி நிற்கும் என் முதுமை
உனக்கு பாரினில் பாரமென்று ஆனதா;முதியோர் இல்லம் வந்து சேர்ந்ததா?

No comments:

Post a Comment