Wednesday, May 25, 2011

ஆம்பூரில் இலவச பட்டாக்கள் வழங்கினார் அஸ்லம் பாட்ஷா

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடும் மழையில்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சலாஹுதீன் நகர் ஏழை மக்களின் குடிசை வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இவர்களுக்கு அரசின் சார்பாக ஆம்பூர் தார்வழியில் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா பட்டாக்களை மக்களுக்கு இன்று 25.05.2011 வழங்கினார். மேலும், ஆம்பூர் அஹ்லே சுன்னத் ஜமாத் சார்பாக தலா ரூ.5,000 வீதம் பண உதவி வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் அஹ்லே சுன்னத்வல் ஜமாஅத் தலைவர் கலீல் பாய் மற்றும் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.

No comments:

Post a Comment