Friday, March 11, 2011

ஜப்பானைத் தாக்கிய சுனாமியால் இந்திய கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை

ஜப்பானைத் தாக்கிய சுனாமியால் இந்திய கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை

டெல்லி: ஜப்பானை இன்று காலை 8.9 ரிக்டர் அளவிலான பயங்க பூகம்பம் தாக்கியது. இதையடுத்து அங்கு சுனாமி அலைகள் தாக்கின. இதில் பெரும் சீரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த சுனாமியைத் தொடர்ந்து, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஹவாய் தீவுகள், மெக்சிகோ, தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்திய கடலோரப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அங்கு சுனாமி அலைகள் தாக்க வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment