Tuesday, March 15, 2011

செய் அல்லது செத்துமடி பழனிபாபா

என் 30 வருட அரசியல் அனுபவத்தில் நான் அறிந்து கொண்ட உண்மையினை 

தமிழக முஸ்லீம் மக்கள் அனைவரும் உணர்ந்தாக வேண்டும். அதை நாமும் 

உணர்த்தியே தீர வேண்டும்.



கடந்த 30 வருடத்தில் 6 பொது தேர்தல்களைக் கண்டேன். அவற்றில் 

நேரிடையாக பங்கேற்று பணியேற்று செயல்பட்டவன் நான். M.G.Rஉடன் ஒரு 

பொதுத்தேர்தல் கலைஞருடன் 3 பொதுதேர்தல்கள் ராமதாஸ் உடன் 2 

தேர்தல்கள். ஆக 6 பொதுத் தேர்தல்களில் பங்கேற்றுப் பணியாற்றிய போது 

சேர்த்த புள்ளி விபரங்களைத் தொகுத்து வந்த போது ஒரு உண்மை 

புலப்பட்டது. அது என்னவென்றால் தமிழகத்தின் 2வது மிகப்பெரிய இனம் 

முஸ்லீம்கள்! முஸ்லீம் மக்கள் எந்த அரசியல் கட்சியின் தயவும் இன்றி 

தங்கள் இனத்தில் ஒருவரை ஒன்றாய் நியமித்து தேர்தலை சந்தித்தால்... சுமார் 

240 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறலாம் அதாவது 60க்கும் மேற்ப்பட்ட 

முஸ்லீம் MLAக்களை யார் தயவும் இன்றி தேர்ந்தெடுக்கலாம்.



அதாவது பெறும்பாலும் மும்முனைப் போட்டி ஏற்படும் வாய்ப்புவரும்போது 

ஒரே ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் 1லட்சம் பேர் என்றால் 

செலுத்தப்படும் வாக்கில் செல்லுப்படியாவது 70 ஆயிரம் 25,000 வாக்குகள் 

பெறுவோர் வெற்றி பெற்று வருவது உறுதி ஆக ஒரு தொகுதியில் ஒரு 

சட்டமன்ற வேட்பாளர் ஒரு சட்டமன்ற வேட்பாளர் மும்முனைப்போட்டியில் 

பெற வேண்டிய வாக்கு 25 ஆயிரம் வாக்குகளே! இது நடைமுறையாக உள்ளது.



ஆனால் சுமார் 60 குறிப்பிட்ட தொகுதிகள் அதாவது மேலப்பாளையம், 

அறந்தாங்கி, கடலாடி, அறவக்குறிச்சி, வாணியம்பாடி, ராமநாதபுரம், திருச்சி 1, 

கோவை மேற்கு, மதுரை மத்திய தொகுதி, சேலம் 1, கூடலூர்(நீலகிரி), தஞ்சை, 

பாபநாசம், பூம்பூகார், காட்டுமன்னார்கோவில், சென்னையில் சேப்பாக்கம், 

ராயபுரம், ஆயிரம்விளக்கு, துறைமுகம், திருவல்லிகேணி போன்ற 

தொகுதிகளில் முஸ்லீன் வாக்காளர்கள் மட்டும் 65 முதல் 75 ஆயிரம். மேலும் 

சில தொகுதிகளில் 25 முதல் 40 ஆயிரம் கிழே உள்ள பட்டியலில்:-


1) 20 தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் 65000 முதல் 85000 வரை

2) 20 தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் 45000 முதல் 65000 வரை

3) 20 தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் 25000 முதல் 40000 வரை



இதுவன்றி ஏகமாய் சுமார் 100 தொகுதிகளில் தொகுதிக்கு 20 ஆயிரம்பேர் 

(திண்டுக்கல், ஆத்தூர்,பெரம்பலூர் போன்று) உள்ளனர்.



ஆக எப்படி குறைத்துப் போட்டாலும் தொகுதிக்கு ஒரு முஸ்லீம் MLAவைத்

தேர்ந்தெடுக்க உறுதி பூண்டு வாக்களித்தால் 60க்கும் மேற்பட்ட MLAக்களும் 4 

MPக்களும் 2 ராஜ்யசபா MPகளும் யார் தயவும் இன்றி தமிழகத்தில் தட்டிபெறும் 

ஆற்றல் அமைப்பு உள்ளவர்கள்.


இதை ஏன் அரசியல் கட்சியில் இன்றுவரை கூறு போட்டு நம் பங்கை சுரண்டிக் 

கொழுக்க முஸ்லீம்கள் விட்டு வைத்தார்கள் என்றால், நான் ஏற்கனவே 

சொன்னதுபோன்று தாழ்வு மனப்பான்மை, சுயபலம் உணராமை, சுய உரிமை 

கோராமை, சுய உணர்வின் புரியாமை, அறியாமை இவைதான் காரணம்.



என் கணக்கு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் உள்ள ஆதாரமான ஒன்று. 

இன்னும் பல ஆதாரங்களை தொகுத்து எடுத்து அந்த 60 தொகுதிகளில் வாழும் 

இஸ்லாமிய இல்லங்களுக்கு நூலாக்கி தர வேண்டும். உதாரணமாக 

அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) தொகுதியில் கடந்த 20 

ஆண்டுகாலமாய் கள்ளர் இனத்தை சார்ந்த திருநாவுக்கரசு வெற்றி பெறுகிறார். 

அங்குள்ள கள்ளர்கள் மூன்றாவது சிறுபான்மையினர் 15 ஆயிரத்துக்கும் 

குறைவானவர்கள்.



ஆனால் அறந்தாங்கி தொகுதியில் வரும் கோட்டப்பட்டிணம், மிமீஸால், 

கோபாலப்பட்டிணம், அம்மாபட்டிணம், ஆவணம் கைகாட்டி காசீம், 

புதுப்பேட்டை, அறந்தாங்கி உட்பட முஸ்லீம் வாக்காளர் பட்டியலில் எண்ணிப் 

பார்த்தால் 69,719 அறுபத்தொன்பதாயிரத்து எழுநூற்றி பத்தொன்பது பேர் 

முஸ்லீம் வாக்காளர்கள் கிட்டத்தட்ட 70ஆயிரம் பேர் (இதில் 10 ஆயிரம் பேர் 

வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்றிருந்தால் கூட உத்தேசமாக) 60 ஆயிரம் 

வாக்காளர்கள் கொண்ட அறந்தாங்கியில் இதுவரை ஏன் ஒரு முஸ்லீம் வெற்றி 

பெறவில்லை.

வெற்றி பெறுவது ஒருபுறம் இருக்கட்டும் ஏன் நிற்க்கக்கூடத் தயக்கம்



உண்மையான காரணம் அவ்வளவு பேர் அங்கு நாம் உள்ளோம் என்பதே 

நூற்றுக்கு இரண்டு முஸ்லீம்களுக்கு கூட தெரியாத ஒன்றாக 

திரையிடப்பட்டதுதான் மூலகாரணம் அதேபோல் கடலாடியில் கீழக்கரை, 

ஏர்வாடி, ஒப்பிலான், மாரியூர், கோரைக்குளம் வாக்காளர்கள் 82619 பேர் 

82ஆயிரத்து ஆறநூற்றி பத்தொன்பது இஸ்லாமிய வாக்காளர்கள் இங்கு ஏன் 

முஸ்லீம்கள் வென்று வாகை சூடமுடியவில்லை அது ரிஸர்வு தொகுதி!

இன்றைய அமைச்சர் ரகுமான்கான் வென்ற ராமநாதபுரம் சட்டமன்ற 

தொகுதியில் தேவிப்பட்டினம், சித்தார்பேட்டை, அண்டகுளம், பனைக்குளம், 

சின்னக்கடை உட்பட ஏகமாய் 63313 (அறுபத்து மூவாயிரத்து முன்னூற்று 

பதிமூன்று) முஸ்லீம் வாக்காளர்கள். இளையான்குடியிலும் மங்கலம், 

திருப்பாலக்குடி, ஆனந்தூர் உட்பட 65266 (அறுபத்தி ஐந்தாயிரத்து இருநூற்றி 

அறுபத்திஆறு) முஸ்லீம் வாக்காளர்கள் இருந்தும் முஸ்லீம்கள் 

வெல்லமுடியவில்லை. இதை உணர்த்த ஆளில்லை. இதை உணர்த்துபவனை 

ஆதரிக்க ஆளில்லை. அல்லது அனைத்து அரசியல் கட்சிகளும் இதை 

விரும்புவது இல்லை. முஸ்லீம்களுக்கு 60தொகுதிகள் என்றால் 2ல் 

மூன்றுபங்கு பெரும்பான்மையை எந்த தனிக்கட்சியும் பெறமுடியாது எந்த 

மசோதாவும் சட்டமாகாது இதுதான் உண்மை.



இந்த சதியில் இருந்து மீண்டு எழ முஸ்லீம்களுக்கு நாம் நமது பலத்தை 

கற்பித்தாக வேண்டும். அதற்கு யாராவது ஒருவர் தன்னை அர்பணித்து 

அல்லும் பகலும் அயராது அஞ்சாது அலுக்காது பணி ஆற்றவேண்டும். அது 

சுலபமான பணிகள் அல்ல! வாக்காளர் பட்டியல் மட்டுமே முழு ஆதாரமல்ல! 

ஜனன மனன(மரண) கணக்கு (சென்ஷஸ் ரெக்கார்டு) எடுத்து 18 வயது 

பூர்த்தியானவர்களின் வாக்குகளை பதியும்படி கூறவேன்டும்.



வாக்காளர் பட்டியலில் விடுப்படாது இருக்கும் விழிப்புணர்வை ஊட்டியாக 

வேண்டும். ஒரு சட்டமன்ற வாக்காளர் பட்டியல் வெளியாருக்கு ரூபாய் 

2000மும், வேட்ப்பாளருக்கு ரூபாய் 1000மும் விலை. அதை 240 

தொகுதிகளிலும் வாங்க தேர்தல் கமிஷனுக்கு 240 X 2000 = 480000 சுமார் 4 3/4 

லட்சம் ரூபாய்கள் அதை கம்யூட்டரில் கொடுத்து முஸ்லீம் வாக்காளர்களை 

அடையாளமிட்டு (பெயரை மட்டும் வைத்து) பிரித்தெடுத்து தொகுத்து விட்டு 

சென்ஷஸ் போர்டில் ஜனன மனன(மரண) கணக்கும், 18வயது பூர்த்தியான 

கணக்கும் எடுத்து தொகுத்து நூலாக்கினால் ஒரு நூல் குறைந்த பட்சம் 15 

ரூபாய் ஆகும் அதை 5 லட்சம் பிரதிகள் எடுத்து மலிவுப்பதிப்பாக 

வினியோகித்து படிப்பிக்க வேண்டும் அதன்பின் பிரச்சாரம் செய்தாக 

வேண்டும்.



இதற்கு சிலரின் ஒத்துழைப்பு போதுமானது. இதை தனிமனிதனாய் செய்யவே 

முடியாது. இது ஒரு கூட்டு முயற்சி. 




இந்த லட்சிய இலக்கிணை அடையும் தூய பணியில் யாரும் குறுக்கிடாது அனைவரும் 

ஒத்துழைக்கவேண்டும் இதை குறை பேசுபவரையே வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்த வேண்டும்.  

எக்காரணம் கொண்டும் தொய்வடையவிடாது தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இது பற்றிய 

ஆரோக்கியமான சர்ச்சைகளை கிளப்பி அது குறித்த மக்கள் கருத்தினை திரட்டி விழிப்புணர்வு ஊட்டிக் 

கொண்டே இருக்கவேண்டும்.

இந்த ஆர்வத்தை குறைக்கும் எந்த சிறு சொல்லைக்கூட இஸ்லாமியர்கள் பொறுத்துக் 

கொள்ளக்கூடாது. 

எங்கும் எப்பவும் இதுபற்றிய சிந்தனையே இருக்கும்படி கட்டுக்கோட்புகலையாது ஒரே 

குறிக்கோளில் என் 

பயணத்தை துவக்கிடவேண்டும் இதற்கு மாற்று கருத்து கூறும் இஸ்லாமிய அமைப்புகளை 

இனத்துரோகிகளாக முத்திரை குத்த வேண்டும்.




இது இந்தியா முழுவதும் பிரதிபலிக்கும் சக்திமிக்கது. கேரளாவை தவிர எங்குமே எந்த 

மாநிலத்திலுமே முஸ்லீம்களிக்கு உரிய பங்கை வாழ்வுரிமையை உள்ளார்த்தமாய் உள்ளது 

உள்ளபடி தந்ததாக வரலாறே இல்லை.



இன்றுவரை காஷ்மீர் முஸ்லீம்கள் ஆயுதந்தாங்கியும் பெறமுடியாத வாழ்வுரிமையை நான் 

வெறும் காகிதம் தாங்கி பெற முடியும் என்று காட்டும் பணியில் கடும் பயணத்தை 

நிராயுதபாணியாக ஆனால் நிச்சயத்த இலக்குகளுடன் பெற்றாக வேண்டும் என்ற வேட்கையில் 

செய் அல்லது செத்துமடி என்று செயல் படுத்தபுறப்படுகின்றேன். என் உடல் உயிர் பொருள் ஆவி 

அத்தனையும் அர்பணித்து என் ஐம்பதாவது வயதில் இன் பயனத்தை துவக்கி உள்ளேன்.

இது நம் வாரிசுகளுக்கு நாம் விட்டுச் செல்லும் வாழ்வுரிமை இது நமக்கு உரிய உரிமைப்பங்கு. இது 

நம் ஜீவாதார உரிமை இது நம் அடிப்படை உரிமை அவைகள் கடந்த 50 வருடமாக மறுக்கப்பட்டு 

மறைக்கப்பட்ட மரக்கடிக்கப்பட்ட உரிமைப் போர். அதை மீட்டெடுக்க புறப்பட்ட புனிதப்போர்.

எத்தனை நாள் எத்தி எத்தி வாழ்வது தம்பி? ஏன் வாழ வேண்டும்? என்ன இல்லை நமக்கு?

நமக்குரிய பங்கை நாம் எடுத்தாக வேண்டும். 50 வருஷம் ஏமாந்தது போதும் இனியும் ஏமாறுவது 

"அறிவீனம்" எனவே புத்துணர்வுடன் புயல் வேகத்தில் புனிதப் பயணத்தில் புறப்பட்டே தீர 

வேண்டும் புண்களை சுமந்து மண்களில் புழுக்களைப் போலான நம் சமூக மக்களின் சமூகநீதியில் 

நாம் சாதித்துகாட்டியாக வேண்டும்.



சதிகார அதிகார வர்க்கங்களுக்கு இது அடிவயிற்றில் புளியை கரைக்கும் ஆனால் என்னை தடை 

செய்ய முடியாது என்பது அந்த அரசியல் அயோக்கியர்களுக்கு புரியும். அதனால் என் பயணத்தை 

முடக்க முடியாவிடில் என்னயே முடிக்கப்பார்பார் அதற்கு நம்மில் சிலரையே கொம்பும்சீவீ 

விடுவார்! எனவே வெளி எதிரிகளைவிட உள்துரோகிகளிடம் மிக மிக எச்சரிக்கையாய் இருக்கும்.

இது ஒரு MULTI VERIOUS DEED பல முகாந்திரப்பணி மக்களை திரட்டுவது உணர்த்துவது நூலுக்காண 

ஆய்வுகளை தொகுத்து ஆதாரங்களை பிரிப்பது பதிப்பது நூலாக்குவது பயணங்கள் பிரச்சாரங்கள் 

பதிப்பகங்கள் இதனூடே கண்காணிப்புகள் கவனங்கள் தருவதும் பெருபதுமாக செல்லும் போதே 

நமது புனிதபோராளி வார இதழ் (இன்ஷா அல்லாஹ் விரைவில்) மூலம் உங்களுடன் தொடர்பு 

கொள்வது இப்படி நான் பயணித்தாக வேண்டும் இந்தப் பணியில் என் கவனத்தை சிதறடிக்காது 

இருக்க என்னைத் காயப்படுத்தாது களங்கப்படுத்தாது என்னை ஊக்குவிய்யுங்கள் உபசரியுங்கள் 

உற்சாகமூட்டுங்கள்.



என் பயணம் பல்வேறு தரப்பட்ட பாதை இது ஒரு ஒற்றையடிப்பாதை பல காட்டு 

மிருகங்களைக்கடந்து சென்றாக வேண்டும். காலச்சூழலையும் கடக்கவேண்டும். அரசியல் 

கட்சிகள் என்னைப் பொருத்தமட்டிலும் சவாரிக்குதிரைகள்.





  சிறாத் என்ற நேரான பாதையின் நேர்மையான


இலக்கு நோக்கிய மறுமைக்கு பயனளிக்கும் மறுமலர்ச்சி நிறைந்த மாசற்ற 

பாதை லட்சியம் என்பதை மட்டும் மறந்து விடாதே. 

இன்ஷா அல்லாஹ் என் 

பயணத்தின் பலனை உணரும் காலம் வெகு விரைவில் வரும் அன்று 

எனக்காக உன் கரம் ஏந்தி துவாக் கேள் அது போதும் தம்பி ஆயிரம் காயங்கள் 

அது ஆற்றி விடும் ஆற்றல் தரும் எனக்கு தற்போது என்னை வாழ்த்தி 

வழியனுப்பு என் சூடு தணியும் முன் உனக்கு மகுடத்தை சூட்டியாக வேண்டும் 

செல்கிறேன் ஃபிஅமானில்லாஹ். 


உங்கள் ஊழியன் நிறம் மாறாதவன்

பழனிபாபா

No comments:

Post a Comment