இலங்கை கடற்படையால் சுடப்பட்டு கை கால் இழப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் ,மண்டையில் அடிபட்டு மாண்டு போனால் மானியமாக  5 லட்ச ரூபாயும் அன்பளிப்பாக அளிக்கப்படும் .இறந்த மீனவர்களை அரசு செலவில் இலவசமாக அடக்கம் செய்யப்படும் என்பதை அடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறோம்
மேலும் மத்திய அரசுக்கு இலவசமாக தந்தி கொடுக்கப்படும்

குடிமக்கள் குதூகலமாக இருக்க குடும்பத்திற்கு குவார்ட்டர் பாட்டில் மாதம் ஒன்று இலவசமாக வழங்கப்படும் .

நாங்கள் தமிழ்நாட்டில் பாதி மட்டுமே சுருட்டி உள்ளோம் ..இன்னும் ஒரு 5 ஆண்டு வாய்ப்பு கொடுத்தீர்கள் என்றால் முழுவதுமாக சுருட்டி விடுவோம் 
என்பதை மிகுந்த பணிவன்போடு கழக அரசு தெரிவித்து கொள்கிறது


நாங்கள் சொன்னதை செய்வோம் சொல்லாததையும் செய்வோம் ..