Friday, March 18, 2011

வேட்பாளர்களின் கறுப்பு பணம் குறித்து தகவல் தருவோருக்கு சன்மானம்

சென்னை வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரி கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கலின் போதுவேட்பாளர்களின் கல்வித் தகுதிசொத்து விவரம் உள்ளிட்டவற்றுடன்கடந்த மூன்றாண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்ததற்கான ஆதாரம்வருமான வரி செலுத்தாத பட்சத்தில்நிரந்தர கணக்கு எண்(பான் எண்) குறித்த விவரங்களை வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும். வேட்பாளர்கள் தங்களின் உண்மையான வருமானத்தை மறைத்து வருமான வரி செலுத்தியிருக்கும் பட்சத்தில்அவர்களின் கறுப்பு பணம் குறித்தும்அப்பணத்தை கொண்டுஅவர்கள் ஏதாவது சொத்துகள் வாங்கியிருந்தால்அவற்றை பற்றிய தகவல்களையும்,
1800 425 6669, 044 - 2824 0064 ஆகிய எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இத்தகவலை ஆராய்ந்துவேட்பாளரிடமிருந்து பெறப்படும் கறுப்பு பணத்திற்கு உரிய வருமான வரிஅபராதம் மற்றும் வட்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். மேலும்வசூலிக்கப்படும் வரி பணத்தில் 10 சதவீதம்தகவல் தருவோருக்கு சன்மானமாக வழங்கப்படும். இந்த சன்மானத்தைப் பெறதகவல் தருவோர் தங்களின் அடையாள சான்றுடன்வருமான வரித் துறையினர் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். இவர்கள் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment