Friday, March 11, 2011

அதிமுக கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 2 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 2 தொகுதிகள்

சென்னை, மார்ச்.10: அதிமுக கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுகவும், அதிமுகவும் தங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தீவிரமாக உள்ளன.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்குமார், இன்று திருநெல்வேலி மாவட்டம், பாவூர் சத்திரம், வட்டார நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்டோருடன் பிற்பகல் 3.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டுக்குச் சென்று தொகுதிப் பங்கீடு தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்வின் போது, அதிமுக பொருளாளர்  ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Tnks Dinamani

No comments:

Post a Comment