Wednesday, March 23, 2011

தஞ்சாவூர் தொகுதிகளில் வேட்பாளர்களின் செலவுகள் குறித்து புகார் அளிக்கலாம்

தஞ்சாவூர், மார்ச் 21: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பாளர்களின் செலவுகள் குறித்து புகார் அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  தேர்தல் ஆணைய உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக மனோஜ் குமார் கடந்த 19 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

   அவர் இப்போது தஞ்சாவூர் புதிய சுற்றுலா மாளிகை அறை எண். 5-ல் தங்கி பணிகளை கவனித்து வருகிறார். வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் செலவுகள் குறித்த புகார்களை நேரடியாகவோ அல்லது 7598700203 என்ற செல்போன் எண்ணுக்கோ தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment