Tuesday, March 29, 2011

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது. இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எம்.தமிமுன் அன்சாரி அவர்களும், ஆம்பூர் தொகுதியில் ஏ.அஸ்லம் பாஷா அவர்களும் போட்டியிடுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களை இன்று (28.03.2011) பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரிகள் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...


இந்நிலையில் இராமநாதபுரத்திலும், ஆம்பூரிலும் இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி தொகுதிக்கு புதன்கிழமை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment