Friday, June 24, 2011

பாஜக தலைவர் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

First Published : 20 Jun 2011 02:51:22 AM IST


டேராடூன்,ஜூன் 19: பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. அதில் விமானியும், என்ஜினீயரும் படுகாயமடைந்தனர்.
இமாலயத்தில் உள்ள சார்டம் புண்ணிய தலத்துக்கு நிதின் கட்கரி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 ஹெலிகாப்டரில் பத்ரிநாத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் உத்தரகாண்ட் மாநிலம் ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் பிற்பகல் 1 மணிக்குத் தரையிறங்கியது. கட்கரியும் அவரது குடும்பத்தினரும் இறங்கி புண்ணிய யாத்திரை சென்றனர். அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து அந்த 3 ஹெலிகாப்டர்களும் ஜாலி கிராண்ட் விமான நிலையத்திலிருந்து சகஸ்திரதாரா ஹெலிகாப்டர் தளத்துக்குப் புறப்பட்டுச் சென்றது. இதில் இரு ஹெலிகாப்டர்கள் சகஸ்திரதாரா ஹெலிகாப்டர் தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
மற்றொரு ஹெலிகாப்டர் லாத்பூர் வனப்பகுதியில் சென்றபோது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானி நவீன்விட், என்ஜினீயர் நவ்நீல்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அரசு காரனேசன் மருத்துவமனையிலும், பிறகு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் எனத் தெரிகிறது.
கட்கரியும் அவரது குடும்பத்தினரும் செல்ல இந்த 3 ஹெலிகாப்டர்களையும் உத்தரகாண்ட் அரசு வாடகைக்கு அமர்த்தி இருந்தது. விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்வாஜாஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர்களை சார் ஏவியேசன் நிறுவனம் இயக்கிவந்தது.
 
Dinamani

No comments:

Post a Comment