Saturday, June 25, 2011

டீசல் விலை உயர்வால் காய்கறிகள் விலை கடும் உயர்வு!

Vegetables
சென்னை: டீஸல் உள்ளிட்ட எரிபொருள்களின் புதிய விலை உயர்வு, சாதாரண அடித்தட்டு மக்களை இப்போதே வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது.

இன்று ஒரேநாளில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்து விட்டது. வெங்காயம், தக்காளி, இதர காய்கறிகளின் நேற்றைய விலைக்கும் இன்றைய விலைக்கும் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.

இனி வரும் நாட்களில் மற்ற பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரும் என்பதற்கு இது ஒரு முதல் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள், மளிகை பொருட்கள் விலைகளும் இனி கணிசமாக உயரப் போவதை நினைத்து சாதாரண மக்கள் கவலையடைந்துள்ளனர்.
 
Thatstamil

No comments:

Post a Comment