Wednesday, June 29, 2011

திருச்சியில் தீ விபத்து: பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமுமுக உதவி

திருச்சி பாலக்கரை பகுதியிலுள்ள குடிசைப் பகுதியில் வியாழக்கிழமை காலை நேரிட்ட தீ விபத்தில், அங்கிருந்த 24 குடிசைகள் எரிந்து நாசமாயின.திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியில் சுமார் 100 குடியிருப்புகளைக் கொண்ட அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு, வியாழக்கிழமை காலை சுமார் 10 மணியளவில்  ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் மளமளவெனப் பரவியது இந்த விபத்தில் 24 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின. . சுமார் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 26.06.2011 அன்று தமுமுக தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தீ விபத்து நேரிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 24 குடிசைகளில் வசித்த  மாணவர்களுக்கு தமுமுக சார்பில் இலவச நோட்டு புத்தங்களை வழங்கினார். இதில் திருச்சி மாவட்ட தலைவர் ஹக்கீம், மாவட்ட செயலாளர் பைஸ் உட்பட நகர மற்றும் கிளை தமுமுக மற்றும் மமகவினர் கலந்துக்கொண்டனர்.

Tnks http://www.tmmk.info/

No comments:

Post a Comment