Saturday, June 18, 2011

வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் ?

சமச்சீர் கல்வி என்ற அறிவிப்பை திமுக அரசாங்கம் வெளியிட்ட உடனேயே, ஆயில் மாபியா, அன்டர்வேர்ல்ட் மாபியாவை விட சக்தி வாய்ந்த கல்வி மாபியா களத்தில் இறங்கியது.

உடனடியாக இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஏப்ரல் 2010ல் சென்னை உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக அரசின் ஆணை, சரியே என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இந்த கல்வி மாபியா மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிய போதும், செப்டம்பர் 2010ல், உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும், தமிழக அரசின் முடிவு சரியானதே என்று தீர்ப்பளித்தது.

இந்த கல்வி மாபியாவானது, பல கோடி ரூபாய் வருவாயை பார்த்து விட்டு, கல்வித் துறையில் அரசு செய்யும் எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளாது. அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களையும், புற வாசல் வழியாகவோ, அல்லது நீதிமன்றத்தின் மூலமாகவோ, தடுப்பதில் மிக மிக சாமர்த்தியமானது.

அரசு, கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காக கோவிந்தராஜன் கமிட்டியை தடுப்பதற்கு, நீதிமன்ற வழியைத் தான் கல்வி மாபியா நாடியது. ஆனால், நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராத காரணத்தால், புறவாசல் வழியாக அணுகி நீதிபதி கோவிந்தராஜன், அவர்கள் தானாக முன் வந்து, கல்விக் கட்டண நிர்ணயிப்பு கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு செல்ல வைத்தது.

அதற்கு அடுத்து, கருணாநிதியிடம், கையேந்தி, வீட்டு மனை பெற்ற, ரவிராஜபாண்டியனை, அந்தக் கமிட்டியின் தலைவராக போட்டு, தங்கள் இஷ்டம் போல கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள வைத்துள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஆயிரம் குறைகள் இருக்கலாம்…. யாரும் மறுக்கவில்லை.   அதற்காக அந்தத் திட்டமே மோசமானது, மாணவர்களின் தரத்தை குறைத்து விடும் என்ற வாதம் வலுவற்றது.   ஏற்றத் தாழ்வுள்ள ஒரு சமுதாயத்தில், அந்த ஏற்றத் தாழ்வை குறைக்க எடுக்கப் படும் முதல் முயற்சி இந்த சமச்சீர் கல்வி.

1974ம் ஆண்டு, நாராயண்தாஸ் என்பவருக்கும், மத்தியப் பிரதேச அரசுக்கும் இடையே நடந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், இவ்வாறு கூறியுள்ளது.

One thing is clear that in order to achieve a uniform standard of excellence in education in all the schools within the State, it is necessary that there should be uniform courses of instruction which are properly thought out and devised by experts on the subject and for giving proper and adequate training in such courses, there should be standardised text books. That would not only ensure uniformity in standard but also achieve efficiency in instruction. Moreover, it would prevent use of poor quality text books which frequently find way in the schools on account of certain dubious financial arrangements between the management and the printers and publishers of those text books.

ஒரே சீரான தரமான கல்வியை வழங்குவதில் சிறப்படைய வேண்டுமென்றால், கல்வியில் சிறந்த அறிஞர்களைக் கொண்டு, உருவாக்கப் பட்ட, தரமான பாட நூல்கள், நன்கு ஆராய்ந்து ஒரே மாதிரியாக உருவாக்கப் படுதல் அவசியம் என்பது தெளிவாகிறது.   அவ்வாறு உருவாக்குவது, சமன்படுத்துவது மட்டும் ஆகாது, கல்வி கற்பிப்பதை சிறப்படையவும் செய்யும்.   சில தனியார் வணிக வியாபாரிகளின் நலனுக்காக, தரம் குறைந்த புத்தகங்களை மாணவர்களுக்கு பரிந்துரை செய்வதையும் இது தடுக்கும்.

பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர், மெட்ரிகுலேஷனையும், சிலர் சிபிஎஸ்ஈ பிரிவையும், மற்ற சிலர் ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் என்றும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். இதில் சிபிஎஸ்ஈ வைத் தவிர்த்து, மற்ற கல்வி முறைகளை இணைத்து, ஒரு தரமான ஒரே சீரான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே சமச்சீர் கல்வித் திட்டத்தின் நோக்கம்.

இதில் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதில், சில குறைபாடுகள் இருக்கலாம்.   திருத்தங்கள் தேவைப்படலாம். ஆனால், அந்தத் திருத்தங்களை செய்து, இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான், ஏழைகளின் நலனை கருத்தில் கொண்ட அரசு எடுக்கக் கூடிய முடிவாக இருக்க முடியும்.    சமச்சீர் கல்வி தரம் குறைந்தது என்று கருதும் பணம் படைத்த பெற்றோர்கள், எப்போதும் சிபிஎஸ்இ பாடவழியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளலாம் தானே ?   தரம் குறைந்து விட்டது, தரம் குறைந்து விட்டது என்று கூப்பாடு போடும் கூட்டத்தினர், அப்துல் கலாம் எந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து விஞ்ஞானி ஆனார் என்பதை விளக்க வேண்டும்.    
 jaya2_20110614
ஆனால், ஜெயலலிதா, இந்த ஆண்டு, சமச்சீர் கல்வி கிடையாது என்று தடாலடியாக அறிவித்ததோடு அல்லாமல், அது தொடர்பாக சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்தார். இதைக் கேட்டு, கல்வி மாபியா அகமகிழ்ந்தது…. இது அட்மிஷன் நேரம் இல்லையா ? கோடிகளை அள்ள வேண்டாமா ?

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்களும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கில், சமச்சீர் கல்வியை ரத்து செய்து, அரசு வெளியிட்ட சட்டத் திருத்தத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

பள்ளிகள் திறக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. தாமதமானால், பாடங்களை முடிக்க மாணவர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, மிகுந்த சிரமப்படுவார்கள். ஆனால், தமிழக அரசு, பிடிவாதமாக உச்சநீதிமன்றம் சென்றது.

உச்சநீதிமன்றம், ஒரு கமிட்டியை அமைத்து, அந்தக் கமிட்டி, இந்த விபரங்களை ஆராய்ந்து 3 வாரங்களுக்குள், தங்களது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நாள்தோறும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்தக் கமிட்டியில், தலைமைச் செயலாளர், என்சிஈஆர்டியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள், மாநிலத்தின் இரண்டு பிரதிநிதிகள், இரு கல்வியாளர்கள், மற்றும் கல்வித் துறை செயலர் மற்றும், கல்வி இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்கள் என்றும் உச்சநீதிமன்றம் வரையறை செய்தது.

இதையொட்டியே, தமிழக அரசு, 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவின் உறுப்பினர்கள்,  எப்படி அமைய வேண்டும் என்பதையும், உச்ச நீதிமன்றமே வழிகாட்டியிருந்தது.   தமிழகத்தின் தலைமைச் செயலாளர் தலைமையில், தேசிய கல்வி மற்றும் ஆராய்சிக் கழகத்தின் சார்பில் (NCERT) இரண்டு உறுப்பினர்களும், இரண்டு மாநில பிரதிநிதிகளும், இரண்டு கல்வியாளர்களும், மற்றும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இதையொட்டி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட உறுப்பினர்கள் பட்டியலே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசின் பிரதிநிதிகளாக முன்னாள் கல்வி இயக்குநர் பாலசுப்ரமணியன் மற்றும் லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி சீனிவாசன் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளனர்.

கல்வியாளர்கள் என்ற பிரிவில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்கள் குறித்துதான், பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். முதலாமவர், டிஏவி பள்ளிகளின் நிறுவனர் மற்றும், செயலாளர் ஜெயதேவ். மற்றவர், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் மற்றும் இயக்குநர், திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி.
 10THBHOOMA_653928f
சென்னையில் உள்ளவர்கள் நன்கு அறிந்த விஷயம், டிஏவி மற்றும் பத்மா சேஷாத்ரி பள்ளிகள் யாருக்காக நடத்தப் படுகின்றன என்பது. டிஏவியில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் மற்றும், சென்னை நகரத்தின் பெரும் பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் நுழையவே முடியாது. மற்றவர்களை பள்ளியின் வாசல் அருகே கூட சேர்க்கமாட்டார்கள்.

பத்மா சேஷாத்ரி பள்ளி என்பது, பார்ப்பன சனாதன தர்மங்களை தூக்கிப் பிடிக்கும் ஒரு பள்ளி.   இளம் மாணவர்களுக்கு, காயத்ரி மந்திரமும், மற்ற பிற்போக்கான இந்த சனாதனங்களையும் சொல்லித் தரும் ஒரு பள்ளி அது.   இதுவும், டிஏவியிலிருந்து எந்த வகையிலும் மாறுபட்டதல்ல.

இந்த இரண்டு உறுப்பினர்களுக்கும், ரிக்ஷா இழுக்கும் நபரின் பிள்ளைகளும், பூ விற்பவரின் பிள்ளைகளும் என்ன கல்வி பயில வேண்டும், எப்படிப்பட்ட பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது தொடர்பாக என்ன அக்கறை அல்லது புரிதல் இருக்க முடியும் ? லட்சக்கணக்கில் நன்கொடை வசூல் செய்து, அந்தப் பணத்தில் திளைக்கும் இந்த இரண்டு நபர்களும், ஏழைகள் நல்ல கல்வி பெறுவதற்கான எதிரிகள் என்றால் அது மிகைச் சொல் அல்ல. வறுமையோ, பசியோ, ஏழைகள் படும் பாட்டையோ, இந்த இருவரும், சினிமாவில் மட்டுமே பார்த்திருப்பார்கள்.

இது போகவும், கல்வியாளர்கள் என்ற வரையறைக்குள் இவர்கள் இருவரும் எப்படிப் பொருந்துவார்கள் ?   எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மெட்ரோ வாட்டர் வாரியத்தின் தலைவராக இருந்தவர் ஜேப்பியார். இவருக்கு பிரதான வேலை, சென்னை நகரில் சாராயம் காய்ச்சி விற்பதுதான்.   இவர் இன்று ஐந்து பொறியியல் கல்லூரிகளுக்கும், சத்யபாமா என்ற ஒரு பல்கலைகழகத்துக்கும் உரிமையாளர். இத்தனை கல்லூரிகளை சொந்தமாக வைத்திருக்கிறார் என்பதற்காக இவர் கல்வியாளர் ஆகி விடுவாரா ?

முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி, சிகா கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில், ஆசிரியர் பயிற்சிக் கழகம், பொறியியல் கல்லூரி ஆகியவற்றை வைத்திருக்கிறார்.   இந்த கல்வி நிறுவனங்களை வைத்திருப்பதால், இவர் கல்வியாளராகி விடுவாரா ?

எஸ்.எஸ்.ராஜகோபால், பேராசிரியர்.வசந்தி தேவி, பேராசிரியர். பிரபா.கல்வி மணி, பிரின்ஸ் கஜேந்திரபாபு, போன்றோர், ஜெயலலிதா அரசாங்கத்தின் கண்ணுக்குத் தெரியாமல் போனது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை, வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் இல்லாவிட்டாலும் கூட, ஒரு மாநகராட்சிப் பள்ளியில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியரைப் போட்டிருந்தால் கூட, அவருக்கு ஏழை மாணவர்களின் சிரமங்கள் புரியுமே…

மொத்தம் உள்ள 9 பேர் கொண்ட குழுவில், என்சிஇஆர்டி உறுப்பினர்கள் இரண்டு பேரைத் தவிர, மீதம் உள்ள 7 பேரையும், அதிமுக அரசுக்கு தலையாட்டி பொம்மைகளாக நியமித்து, அவர்கள் மூலமாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வளைத்து, குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையினர், சமச்சீர் கல்வி இப்போதைக்கு தேவையில்லை, சமச்சீர் கல்வியை செயல்படுத்தினால், மாணவர்களின் அறிவு இப்போது இருப்பதை விட குறைந்து விடும், கடந்த திமுக ஆட்சியை விட, அதிமுக ஆட்சியில் மாணவர்களின் அறிவுத் திறனை பன்மடங்கு வளர்ப்பதற்கு, தற்போது உள்ள கல்வி முறையே சிறந்தது, மேலும், தற்போது வசூலிக்கப் படும் கட்டணம், மிக குறைவாக இருப்பதால், மேலும் ஏராளமான கட்டணம் வசூலித்து, மாணவர்களுக்கு ஒரு பெரிய எதிர்காலத்தை வழங்க வேண்டும், மாணவர்கள் மறந்து போய் விட்ட மனுதர்மத்தை அவர்களுக்கு பாடத்திட்டத்தில் சேர்த்து, தலித்துகளை தொட்டு விட்டால் தீட்டு எப்படி கழிப்பது என்பதையும் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விட வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் ?

அதிமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியே சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் போனதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், விடாப்பிடியாக சமச்சீர் கல்வியை ஒழித்தே தீருவது என்ற நோக்கத்திலேயே ஜெயலலிதா அரசு செயல்படுவதாக கருத வேண்டியுள்ளது.
 17.06.2011
அன்பார்ந்த ஜெயலலிதா அவர்களே…. தமிழ்நாட்டின் பெரும் பான்மையான ஏழை, விளிம்பு நிலை மக்கள் தான், உங்களுக்கு வாக்களித்து இன்று முதலமைச்சர் ஆக்கியிருக்கிறார்கள்… அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று உழைத்தது, டிஏவியிலும், பத்மா சேஷாத்திரியிலும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும், உண்டு கொழுத்த கூட்டமல்ல….   உழைப்பாளிக் கூட்டம்.   உங்கள் அரசு அவர்கள் நலனைத் தான் கருத்தில் கொள்ள வேண்டுமே ஒழிய, குறுக்கே நூலணிந்த கூட்டத்தின் நலனை அல்ல ?   அவர்களுக்கு தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள நன்றாகவே தெரியும்.
 SKM_0039
கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம் மற்றும் உளவியல் சம்பந்தப் பட்ட விஷயம். உங்கள் பிடிவாதத்தினால் ஒரு தலைமுறையின் கல்வியை நாசப்படுத்தி விடாதீர்கள்.

Tnks Savukku

No comments:

Post a Comment