Wednesday, June 29, 2011

கேரளாவில் குடிப்பதற்காக மனைவியை விற்ற கணவர் கைது: வாங்கி கற்பழித்தவருக்கு வலைவீச்சு!

திருவனந்தபுரம்: கேரளாவில் மது அருந்த பணம் இல்லாததால் தனது மனைவியை ரூ. 15 ஆயிரத்திற்கு விற்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் நீலேஷ்வரத்தை அடுத்த கோயித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். ரப்பர் வெட்டி எடுக்கும் பணியை செய்து வந்தார். இவருக்கு குடிப் பழக்கம் உண்டு. இவருக்கும் சோயாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் பிரியா தனக்கு ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து ஹோஸ்துர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். மனுவில் எனது கணவன் திருமணம் செய்த நாளில் இருந்தே என்னை உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு வழிகளில் கொடு்மை படுத்தினார்.

சமீபத்தில் மது அருந்த பணம் கேட்டு கொடுமைபடுத்தினார். பணம் கொடுக்காததால் என்னை அவரது நண்பர் மனோஜ் என்பவருக்கு ரூ. 15 ஆயிரத்திற்கு விற்று வி்ட்டார். இதையடுத்து மனோஜ் என்னை பலாத்காரம் செய்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனுவை பரிசீலித்த மாஜிஸ்திரேட் இது குறித்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அப்பெண்ணின் கணவர் பிரசாத்தை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மானோஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Thatstamil

No comments:

Post a Comment